இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:
மதிய உணவுக்குப்பின் ஒரு குட்டித்தூக்கம் போடுவது இருதயத்துக்கும், மூளைக்கும் மிகவும் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். மதிய உணவுக்குப்பின் சுமார் 30 நிமிடம் உறங்குவதுதால், நியாபக சக்தியும், செயல்திறனும் மேம்படுகிறதாம். அட, இது நல்லாருக்கே…!!
விஞ்ஞானம் ஒரு கத்தி மாதிரி, அதை வச்சி ஆப்பிளையும் நறுக்கலாம், ஆளையும் வெட்டலாம்! ஆக, இது ரெண்டுல எதை செய்யப்போறோம்ங்கிறது கத்தி எடுக்கிற ஆளைப்பொறுத்தது. ஏன்னா, விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லைன்னா, இப்போகூட நம்ம வாழ்க்கை கற்க்கால மனிதனுடையது மாதிரிதான் இருந்திருக்கும்ங்கிறதுதான் நிதர்சனம். அதுக்காக விஞ்ஞான கண்டுபிடிப்புகள், முயற்ச்சிகள் எல்லாத்தையும் ஆஹோ, ஓஹோன்னும் புகழ முடியாது?!
“இப்போ இவன் என்னதான் சொல்ல வர்றான்னு ஒன்னும் புரியலையே” அப்படீன்னு குழப்பமா இருக்குதுங்களா? சரி, நாம மேட்டருக்கு வந்துடுவோம். அதாவது, உயிரியல், மருத்துவம், தாவரவியல் சார்ந்த விஞ்ஞான முன்னேற்றங்களின் பயனாக நமக்கு சில நவீன அறிவியல் துறைகளோட அறிமுகம் கிடைத்தது. அத்தகைய துறைகளுள் ஒன்றுதான் மரபனுவியல்! இந்த மரபனுவியல் துறை ஆய்வுகள் முன்னேற முன்னேற, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட டி.என்.ஏ அப்படீங்கிற மரபுப்பொருளின் வருகை, உயிரியலில் மற்றுமொரு துறையையும் அறிமுகம் செய்தது.
அந்தத் துறையின் பெயர்தான் மூலக்கூறு அறிவியல் (மாலிக்கியூலர் பயாலஜி). அதாவது, இத்துறையின் உதவியுடன் உயிரிகளின் ஆதாரமான உயிரணுக்கள்/செல்களின் உள்ளே புகுந்து, அவற்றின் முக்கிய மூலக்கூறான நியூக்ளியஸில் புதைந்திருக்கும் மரபுப்பொருளான டி.என்.ஏ-வை இஷ்டத்துக்கு(?) பிரித்து மேய்வதாலேயே இந்தப் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது! மூலக்கூறு அறிவியலின் புத்திசாலியான வாரிசுதான் “மரபுப்பொருள் மறுசேர்க்கை தொழில்நுட்பம்” (ரீக்காம்பினன்ட் டி.என்.ஏ டெக்னாலஜி). 1970-களில் பிறந்த இந்தத் துறையின் வருகையை, மூலக்கூறு அறிவியலில் நிகழ்ந்த ஒரு விஞ்ஞானப் புரட்சி என்று சொன்னால் அது மிகையல்ல!
ரீக்காம்பினன்ட் டி.என்.ஏ டெக்னாலஜி ஏற்படுத்திய விஞ்ஞானப்புரட்சியின் பலனாக/விளைவாக, இந்த உலகம் க்ளோனிங், ஜீன்-தெரபி போன்ற பல புதுமைகளைச் சந்தித்தது. அவற்றுள் ஒன்றுதான், இயற்கை மற்றும் செயற்கையான பல நிகழ்வுகள், உயிர்கள் மற்றும் பொருட்களால், பல இன்னல்களைச் சந்தித்துவந்த உலக விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்த(?) ஒரு தொழில்நுட்பமான,
“ஒரு உயிரியிலிருந்து (தாவரம் அல்லது விலங்கு) எடுக்கப்பட்ட ஒரு மரபணுவை, மற்றொரு உயிரியின் உயிரணு/செல்லுக்குள் செலுத்தி, அந்த உயிரியின் மரபணுக்ககோப்புக்குள் இரண்டறக் கலக்கச் செய்து, பின் இயல்பாக செயல்படவைத்து, “மரபணுமாற்று உயிர்” (Genetically modified organisms, GMO) உருவாக்கும் ஒரு தொழில்நுட்பம் அல்லது உயிரியல் விஞ்ஞான முன்னேற்றம்”
“ஆனா, இந்த தொழில்நுட்பம் விவசாயிகளோட வயித்துல பாலை மட்டும் வார்க்கல, கூடவே சேர்த்து கொஞ்சம் விஷத்தையும் வார்த்துட்டுது அப்படீங்கிறதுதான் நிதர்சனம்” அப்படீன்னு வாதம் செய்பவர்களும் உண்டு. அது பல வகையில் உண்மையும்கூட என்பதுதான் அறிவியல் ஆதாரப்பூர்வமான உண்மை! இந்த தொழில்நுட்பம் மூலமா, இதுவரை மனித சமுதாயத்துக்கு கெடைச்ச மரபணுமாற்ற உணவுப்பயிர்கள் என்னென்ன, அவற்றுடன் தொடர்புடைய சில சர்ச்சைகள் என்னென்ன அப்படீங்கிறதப்பத்தி ஓரளவுக்கு விளக்கமாகவும், சுருக்கமாகவும் எடுத்துச் சொல்றதுக்குத்தான் இந்தப் பதிவு! வாங்க என்னன்னு பார்ப்போம்……
இதுவரையிலான மரபணுமாற்ற உணவுப்பயிர்கள்!
உலகில் முதல்முதலில் சந்தைக்கு வந்த, முதல் மரபணுமாற்ற உயிரி ஒரு தாவரம். அது கடந்த 1994 ஆண்டு, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட ஒரு தக்காளி! அதன்பின்னர், ஒன்றன்பின் ஒன்றாக கடந்த 2009 ஆம் ஆண்டும் உருவாக்கப்பட்ட வறட்சி தாங்கும் பிரத்தியேகமான சாபாகி அரிசி வரை 6 தாவரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உருவாக்கப்பட்டது மட்டுமில்லாம, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பெரும்பாலான மேலை நாடுகளில், மனுஷனோட அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன இவற்றில் பல! “அது சரி, 1994-லிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலான விஞ்ஞான முன்னேற்றத்தை கணக்கிலெடுத்துக்கொண்டால் வெறும் 6 மரபணுமாற்ற பயிர்தான் கண்டுபிடிச்சிருக்காங்களா?! ம்ம்…..அப்படியா? அப்படின்னா எங்கியோ இடிக்குதே” அப்படீன்னு உங்கள்ல சிலர் யோசிக்கிற மாதிரி இருக்குதே?
அப்படின்னா, அதுக்கான காரணமா நீங்க நெனக்கிற விஷயங்களையும், யூகங்களையும் நீங்களே கொஞ்சம் மறுமொழியில எழுதிடுங்களேன். அதுக்கப்புறமா, என்னோட கருத்தை நான் பதிவு செய்றேன். சரிங்களா? சரி, இப்போ நாம அந்த 6 மரபணுமாற்ற பயிர்களைப் பத்தின ஒரு சிறுகுறிப்பையும், தொடர்புடைய சில சர்ச்சைகளையும் பார்போம் வாங்க…..
1994: ப்லேவர் சேவர் தக்காளி (Flavr Svr Tomato)
பொதுவா, பல காய்கறி/பழங்கள் மாதிரி தக்காளியும் (குளிர்பதனப்பெட்டிக்குள்ள வச்சாக்கூட) அழுகாம, ரொம்ப நாளைக்கு ஃப்ரெஷா இருக்குறதில்லன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவுகட்டத்தான், பல நாட்களுக்கு அழுகாம இருக்குற மாதிரி, மரபணுமாற்ற யுக்தி மூலமா ஒரு தக்காளியை உருவாக்கினாங்க, கால்ஜீன் அப்படீங்கிற கலிஃபோர்னிய நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்!
பூச்சிக்கொல்லிகளின் தேவையை முற்றிலும் இல்லாமல் செய்த பி.டி சோளம்தான் மரபணுமாற்ற தாவரங்களின் இரண்டாம் வரவு! “பெசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus thuringiensis)” என்னும் பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு மரபணுவே, (சோளப்பயிரினுள் செலுத்தப்பட்டபின்) ஒரு பூச்சிக்கொல்லியாக செயல்படத்தொடங்கிவிடும் என்பதால், ரசாயன பூச்சிக்கொல்லியின் தேவை இல்லாமற்போனது!
இதனால் என்ன பயன் அப்படீன்னா, சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும், அதன் விளைவாக மனிதர்களில் புற்றுநோய் மற்றும் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கவும் காரணமாகும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டது என்பதுதான்! ஆனா, ஒரு விஷயத்துல நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்குமில்லயா? அந்த வகையில, இதனால என்ன கெடுதல்னு பார்த்தா, கெட்ட பூச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொல்லாம, மகரந்தக் கடத்தல் செஞ்சு, விவசாயத்துக்கு உறுதுணையா இருக்குற தேனீ, பட்டாம்பூச்சி மாதிரியான நல்ல பல பூச்சிகளையும் குத்துமதிப்பா கொல்லும் தன்மையுடையது இந்த பி.டி சோளம் என்பதே! ஆனா, இந்தச் சோளத்துக்கும் தேனீ க்களின் அழிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று உறுதி செய்தது ஒரு ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது! மேலதிக விவரங்கள் இங்கே
மரபணு மாற்ற தொழில்நுட்பத்தின் மூன்றாம் வரவு, “மரபணு மாற்ற உருளைக்கிழங்கு”. மேற்கண்ட சோளம் போலவே, உருளைக்கிழங்கு செடியின் செல்லுக்குள் ஒரு பூச்சிக்கொல்லி மரபணுவை செலுத்தி, உருவாக்கப்பட்டதுதான் இந்த மரபணுமாற்ற உருளைக்கிழங்கு! இது தொடர்பான ஒரு சர்ச்சையும் உண்டு?! அதாவது, ஸ்காட்லாந்தின் ரோவெட் ஆய்வு மைய ஆய்வாளர் அர்பத் புஸ்டை என்பவரின் ஆய்வில், மரபணுமாற்ற உருளைக்கிழங்கை உண்ட எலிகள், வளர்ச்சி குன்றியும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தும் பாதிப்புக்குள்ளாயின என்பது கண்டறியப்பட்டது!
சமையல் எண்ணைகளிலேயே, உடல்நலத்துக்கு மிகவும் பாதுகாப்பானதாகவும், கொழுப்புச்சத்து குறைவானதாகவும், “ஒமேகா ஃபேட்டி ஆசிட்ஸ்” அதிகமாக உடையதாகவும் கருதப்படுவதும், முதலில் கனடாவில் பயன்படுத்தப்பட்டு, பின்பு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் பயன்படுத்தப்படுவதுமான ஒரு வகை எண்ணைப்பயிர்தான் “கெனோலா எண்ணைப்பயிர் (canola oil/rapeseed oil)”! மரபணுமாற்ற தொழில்நுட்பத்தின் நான்காம் இலக்கு இந்த கெனோலா எண்ணைப்பயிர்தான்.
வைட்டமின் ஏ (vitamin A) குறைபாட்டினால் ஏற்படும் கண்பார்வைக்கோளாறு என்பது வளரும் நாடுகளின் ஒரு வேதனையான நிகழ்வு! மேலும், உலகளவில் சுமார் 400 மில்லியன் மக்களை பாதிக்கும் இந்த வைட்டமின் குறைபாட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, கடந்த 2000-மாவது ஆண்டு, இந்தியாவின் சர்வதேச அரிசி ஆய்வு மையமும் (International Rice Research Institute, IRRI), ராக்கெஃபெல்லர் அமைப்பும் (The Rockefeller Foundation) இணைந்து, காரெட்டிலிருக்கும் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் என்னும் மரபணுக்களைக் கொண்டு உருவாக்கியதுதான் வைட்டமின் ஏ அதிகமாக உள்ள, மரபணு மாற்ற உயிர்களில் 5 வது வருகையுமான “தங்க அரிசி (Golden rice)”!
தங்க அரிசியை உருவாக்கியது ஒரு லாபநோக்கமற்ற தொண்டு நிறுவனமென்பதால், இந்த அரிசி விதை ஓபன் சோர்சாக, அதாவது யார் வேண்டுமானாலும் இலவசமாக பெற்று, சாகுபடி செய்யும் வண்ணம் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது! இதுல மிக முக்கியமான விஷயம் என்னன்னா, அமெரிக்காவின் “மான்சான்டோ (Monsanto) மற்றும் கார்கில் (Cargill)” மாதிரியான நிறுவனங்கள், மரபணுமாற்ற தொழில்நுட்பம் மூலம், (இயற்க்கை அளித்த) பூமியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு விதையை, அறிவுக்காப்புரிமைக்குட்பட்ட (intellectual property) பொருட்களாக்கி, அளவுக்கதிகமான பணம் பண்ணுகிறார்கள். இது ஒரு பெரிய மோசடி மற்றும் பகற்கொல்லை என்பது குறிப்பிடத்தக்கது! இம்மாதிரியானவர்கள் மீண்டும் உருவாகாமல் தடுக்க, தங்க அரிசி மாதிரியான பொதுவுடைமை ஆக்கப்பட்ட மரபணுமாற்ற உயிரிகள், ஒரு நல்ல உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது!
மேலதிக விவரங்கள் இங்கே
2009: வறட்ச்சி தாங்கும் அரிசி (“Sahbhagi Dhan” Drought-Resistant Rice)
நம்ம எல்லாருக்குமே தெரியும், அரிசி அல்லது நெற்பயிர் ஒரு நஞ்சை நிலப்பயிர் என்பது. ஆக, தண்ணீரின் தேவை எப்போதும் வேண்டும் நெற்பயிருக்கு! ஆனா, சமீபகாலங்களாக உலகின் அதிக அளவு நிலங்கள், வறண்ட பாலைவனங்களாகிவரும் நிலையில், மழையும் இல்லாமற்போய்விடுகிறது. விளைவு, வானம் பார்த்த பூமிகளின் பயிர்கள் மடிந்து, நிலம் வறண்டு பாலைவனங்களாகி, உணவுப் பற்றாக்குறையும், பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது!
வெங்கடேஷ்
ஒக்ரோபர் 9, 2010
நண்பரே ( 1994-லிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலான விஞ்ஞான முன்னேற்றத்தை கணக்கிலெடுத்துக்கொண்டால் வெறும் 6 மரபனுமாற்ற பயிர்தான்கண்டுபிடிச்சிருக்காங்களா? ) எனக்கென்னவோ நிறைய மரபனுமாற்று
பயிர்களை கண்டுபிடிச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன் அதுல இந்த 6 மரபனுமாற்று
பயிர்கள் தான் கொஞ்சம் பாதிப்பு குறைவாகவும் விவசாயிகளிடமும் எதிர்ப்பு
குறைவாகவும் இருந்திருக்கும் அதனால் இந்த 6 மரபனுமாற்று பயிர்களை மட்டும்
வெளியிட்டார்களோ,
அப்புறம் இந்திய விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய
மரபனுமாற்று பிடி,கத்திரிக்காயைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்தளேன்
வழக்கம் போல இந்த விஷயத்தையும் அக்குவேறா ஆணிவேறா விளக்கிட்டீங்க
வாழ்த்துக்கள் நண்பரே
padmahari
ஒக்ரோபர் 11, 2010
//எனக்கென்னவோ நிறைய மரபனுமாற்று
பயிர்களை கண்டுபிடிச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன் அதுல இந்த 6 மரபனுமாற்று
பயிர்கள் தான் கொஞ்சம் பாதிப்பு குறைவாகவும் விவசாயிகளிடமும் எதிர்ப்பு
குறைவாகவும் இருந்திருக்கும் அதனால் இந்த 6 மரபனுமாற்று பயிர்களை மட்டும்
வெளியிட்டார்களோ//
சரியான புரிதல்! உண்மைதான். இத்தனை வருட மரபனுமாற்ற ஆய்வில், எத்தனையோ வகையான பயிர்கள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டு, அதில் பெருவாரியான விவசாயிகள், மற்றும் விஞ்ஞானிகளின் ஆதரவுடன், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக்கட்டுப்பாட்டு மையத்தின் (FDA) ஒப்புதலையும் பெற்று சந்தைக்கு வந்ததோடு மட்டுமல்லாமல், தொடர்ந்தும் மக்களின் பயன்பாட்டில் உள்ளவை மட்டும்தான் இந்த 6 மரபனுமாற்ற பயிர்களும்! ஆனால், சுய லாபத்துக்காக எத்தனையோ தவறுகள் விஞ்ஞானத்திலும் இழைக்கப்பட்டுவருகின்றன. அவற்றில் சில வெளிச்சத்துக்கு வந்தும், பல வராமலும் மறைந்திருந்து உலகை பாதிப்புக்குள்ளாக்குவது, கசப்பான உண்மைகள்!
//அப்புறம் இந்திய விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய
மரபனுமாற்று பிடி,கத்திரிக்காயைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்தளேன்
வழக்கம் போல இந்த விஷயத்தையும் அக்குவேறா ஆணிவேறா விளக்கிட்டீங்க
வாழ்த்துக்கள் நண்பரே//
கண்டிப்பா, மரபனுமாற்ற உயிர்கள் தொடர்பான நம்ம அடுத்த பதிவுல, பிடி கத்திரிக்காய் பத்தி சும்மா பிரிச்சி மேஞ்சிடுவோம். கவலைப்படாதீங்க. கருத்துக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றிங்க…..
வெங்கடேஷ்
ஒக்ரோபர் 9, 2010
சொல்லுங்களேன் என்பதற்க்கு ( சொல்லுங்தளேன் ) என்று பிழையாக எழுதிவிட்டேன்
பிழைக்கு வருந்துகிறேன்
padmahari
ஒக்ரோபர் 11, 2010
இப்படி அநியாயத்துக்கு பொறுப்பானவரா இருக்கக்கூடாதுங்க…… 🙂
எஸ். கே
ஒக்ரோபர் 9, 2010
இந்தியாவில் பருத்தி மட்டுமே இப்படி பயிர் செய்வதாய் படித்தேன் உண்மையா? இதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இன்னும் விரிவாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் பல கண்டுபிடிப்புகள் நன்மைக்கென செய்யப்பட்டாலும் பின்னாளில் அதன் தீமைகள் அதிகமாகி விடுகின்றன(டைனமைட் போல!)
padmahari
ஒக்ரோபர் 11, 2010
வாங்க எஸ்.கே,
முதல் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் நன்றிகள் பல.
//இந்தியாவில் பருத்தி மட்டுமே இப்படி பயிர் செய்வதாய் படித்தேன் உண்மையா?//
இந்தியாவில் பி.டி பருத்தி மட்டுமே மோசமான பின்விளைவுகள் அதிகமில்லாமலும், வெற்றிகரமாகவும் பயிர்செய்யப்படுவதாக படித்ததுண்டு. இந்தியாவில் பயிர்செய்யப்படும் மரபனுமாற்ற பயிர்களைப்பற்றிய சாதக-பாதகங்களுடன்கூடிய முழுமையான செய்திகளுடன், கூடிய விரைவில் ஒரு பதிவை மேலிருப்பானில் நீங்கள் படிக்கலாம்! தொடர்ந்தும் இணைந்திருங்கள், நன்றி
Abarajithan
ஒக்ரோபர் 9, 2010
நல்ல தகவல்கள்…
எனக்கென்னமோ வெங்கடேஷ் சார் சொன்னதுதான் சரின்னு படுது… ஒருவேளை உருவாக்கின பயிர்களை ரகசியமா பரப்புறாங்களோ?!
என்னவோ போங்க சார்… இயற்கைக்கு எதிரா நாம செய்யற ஒவ்வொரு மூவுக்கும் பின்னால பெரிய ஆப்பொண்ணு இருக்கு.. அது இந்த பயாலஜிக்காரங்களுக்கு புரிய மாட்டேங்குது…
padmahari
ஒக்ரோபர் 11, 2010
வாங்க அபராஜிதன்,
படிப்பெல்லாம் எப்படி போய்க்கிட்டிருக்கு? 10 ஆம் வகுப்பு முடிச்சாச்சா?
//எனக்கென்னமோ வெங்கடேஷ் சார் சொன்னதுதான் சரின்னு படுது… ஒருவேளை உருவாக்கின பயிர்களை ரகசியமா பரப்புறாங்களோ?!//
இருக்கலாம், இதுவும் ஒரு வகையில் ஒரு உயிராயுதம் (Biological weapon) தானே….!!
//என்னவோ போங்க சார்… இயற்கைக்கு எதிரா நாம செய்யற ஒவ்வொரு மூவுக்கும் பின்னால பெரிய ஆப்பொண்ணு இருக்கு.. அது இந்த பயாலஜிக்காரங்களுக்கு புரிய மாட்டேங்குது…//
உண்மைதான். உலகைக்காக்க, அதிலிருக்கும் நன்மைகளின் அவசியம் கருதி சில முயற்ச்சிகளை செய்யத்தான் வேண்டியுள்ளது. அம்முயற்ச்சிகளும், இயற்க்கைக்கு எதிராக அல்லாமல் இயற்க்கையுடன் ஒன்றிய ஒன்றாக இருக்கும்பட்சத்தில் அதை வரவேற்கலாம்தானே? கருத்துப்பகிர்வுக்கு நன்றி
Abarajithan
ஒக்ரோபர் 12, 2010
@பத்மஹரி சார்,
//படிப்பெல்லாம் எப்படி போய்க்கிட்டிருக்கு? 10 ஆம் வகுப்பு முடிச்சாச்சா?//
விசாரிச்சதுக்கு ரொம்ப நன்றி. இலங்கைல ஸ்கூல் எல்லாம் ஜனவரிலதான் ஆரம்பிக்கும். அதனால இன்னும் பத்தாம் வகுப்புதான்.. உங்க ஆராய்ச்சியெல்லாம் எப்பிடி போகுது? இன்னும் வெளிநாடுதானா?
//உலகைக்காக்க, அதிலிருக்கும் நன்மைகளின் அவசியம் கருதி சில முயற்ச்சிகளை செய்யத்தான் வேண்டியுள்ளது. அம்முயற்ச்சிகளும், இயற்க்கைக்கு எதிராக அல்லாமல் இயற்க்கையுடன் ஒன்றிய ஒன்றாக இருக்கும்பட்சத்தில் அதை வரவேற்கலாம்தானே? //
இதத்தான் விஞ்ஞானிகளும் சொல்றாங்க.. என்னதான் இருந்தாலும் இயற்கைக்கு அப்பாற்பட்டு நாம் செய்யும் காரியங்களின் விளைவுகள் நிச்சயமாக இயற்கைக்கு எதிராகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில், தனது தவறுகளை குறைந்த காலத்தை எடுத்துக்கொண்டு சரி செய்யும் இயற்கை, தனக்கு அப்பாற்பட்ட விஷயத்தால் ஏற்படும் பாதிப்பை நீக்க நிச்சயம் அதிக காலம் எடுக்குமல்லவா? அப்படி இயற்கை மனிதனின் தவறொன்றைச் சரிசெய்து முடிக்க எடுக்கும் கால அவகாசத்திற்குள், அத்தவறு மனிதனுக்கே உலை வைக்ககூடிய சாத்தியங்கள் அதிகம். இல்லையா?
அத்தோடு, உலகை(மனித இனத்தை)க் காப்பதற்காக பூமியை அழிக்க முற்படும் (அல்லது, என்ன நடக்கப்போகிறது என்பதே தெரியாத) முயற்சிகளை தவிர்ப்பது தானே நியாயம்?
Jurassic Park படத்துல ஒரு டயலாக் வரும்: “Dr. Ian Malcolm: If there is one thing the history of evolution has taught us it’s that life will not be contained. Life breaks free, expands to new territory, and crashes through barriers, painfully, maybe even dangerously.” இதைத்தான் நான் முழுமையா நம்புறேன்.
அத்தோடு, இப்படியான பயாலஜிஸ்ட்ஸ் பற்றி ஃப்ரிட்ஜாப் கேப்ரா The Turning Point நூலில் கூறியது: “இயற்கையைக் கட்டிப்போட்டு சித்திரவதை செய்து அதன் ரகசியங்களைக் கறக்கும் தன்மையை இந்த ஆண்-மையப் பார்வை முன்வைக்கிறது அதன் விளைவாகவே நம் அறிவியலும் தொழில்நுட்பமும் இயற்கையைக் கீழ்மைப்படுத்தும் தன்மை கொண்டவையாக அமைந்திருக்கின்றன.” – நன்றி தமிழ்பேப்பர்
ஆகவே, இயற்கையுடன் ஒன்றி, பூமியையும் உலகையும் காக்க ஒரே வழி, மனித ஜனத்தொகையை, கடுமையான, எவ்வித எதிர்ப்புக்கும் வளைந்து கொடுக்காத, உறுதியான, உலகு தழுவிய சட்டதிட்டங்கள் மூலம் பாரிய அளவில் குறைப்பது மூலம் மட்டுமே.. பிற வழிகள் மூலம் “உலகைக்” காக்க முயற்சிப்பது, பஞ்சின் நடுவே தீமூட்டி குளிர் காய்வதுபோல, தற்காலிக நன்மையையும், எதிர்கால பெரும் அழிவையுமே தரும்.
உங்க பதிவுகளைப் பார்த்தா டவுட்டா இருக்கு.. நீங்களும் இதுமாதிரி ரிசெர்ச் செய்யுற பயாலஜிஸ்டா?
padmahari
ஒக்ரோபர் 14, 2010
//உங்க ஆராய்ச்சியெல்லாம் எப்பிடி போகுது? இன்னும் வெளிநாடுதானா?//
ஆய்வு முடிவடையும் நிலையில் உள்ளது. இன்னும் ஒருவருட காலம் வெளிநாடுதான். விசாரித்தமைக்கு நன்றி!
//என்னதான் இருந்தாலும் இயற்கைக்கு அப்பாற்பட்டு நாம் செய்யும் காரியங்களின் விளைவுகள் நிச்சயமாக இயற்கைக்கு எதிராகத்தான் இருக்கும்.//
இதுக்கான உங்களோட புரிதல் எப்படின்னு எனக்குத் தெரியலை. ஒரு உதாரணம் சொல்ல முடியுமா? ஏன்னா, விஞ்ஞானம் அல்லது ஆய்வு என்பதே இயற்கைக்கு அப்பாற்பட்டு ( இயற்கையை பயன்படுத்தி) செய்ய வேண்டிய ஒன்று என்பதே என் புரிதல்.
//தனது தவறுகளை குறைந்த காலத்தை எடுத்துக்கொண்டு சரி செய்யும் இயற்கை, தனக்கு அப்பாற்பட்ட விஷயத்தால் ஏற்படும் பாதிப்பை நீக்க நிச்சயம் அதிக காலம் எடுக்குமல்லவா? //
உதாரணமாக….???
//அத்தோடு, உலகை(மனித இனத்தை)க் காப்பதற்காக பூமியை அழிக்க முற்படும் (அல்லது, என்ன நடக்கப்போகிறது என்பதே தெரியாத) முயற்சிகளை தவிர்ப்பது தானே நியாயம்?//
உண்மைதான்! வரவேற்கத்தக்க ஒன்றும்கூட….
//Jurassic Park படத்துல ஒரு டயலாக் வரும்: “Dr. Ian Malcolm: If there is one thing the history of evolution has taught us it’s that life will not be contained. Life breaks free, expands to new territory, and crashes through barriers, painfully, maybe even dangerously.” இதைத்தான் நான் முழுமையா நம்புறேன்.//
அதெல்லாஞ்சரி, இதிலிருந்து நீங்க என்ன சொல்லவர்றீங்க?
//அத்தோடு, இப்படியான பயாலஜிஸ்ட்ஸ் பற்றி ஃப்ரிட்ஜாப் கேப்ரா The Turning Point நூலில் கூறியது: “இயற்கையைக் கட்டிப்போட்டு சித்திரவதை செய்து அதன் ரகசியங்களைக் கறக்கும் தன்மையை இந்த ஆண்-மையப் பார்வை முன்வைக்கிறது அதன் விளைவாகவே நம் அறிவியலும் தொழில்நுட்பமும் இயற்கையைக் கீழ்மைப்படுத்தும் தன்மை கொண்டவையாக அமைந்திருக்கின்றன.” – நன்றி தமிழ்பேப்பர்//
இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், ஒட்டுமொத்த உயிரியல் ஆய்வுலகமும் இப்படித்தான் என்று சொல்வதும் தவறு, அதற்க்கான ஆதாரங்களும் இல்லை! (இருந்தால் குறிப்பிடுங்கள் தெரிந்துகொள்வோம்). ஆனால், சில விஞ்ஞானிகள்/ஆய்வாளர்களின் அணுகுமுறை வேண்டுமானால் இப்படி இருக்கலாம். அது விதிவிலக்கு, மாற்ற முயற்ச்சிக்கலாம். மாறாக (என் புரிதலின்படி), இயற்கையின் அடிப்படையை பல நூற்றாண்டுகால ஆய்வினடிப்படையில் கற்றுணர்ந்து, தவறு செய்து பின் திருத்தம் செய்து, படிப்படியாக வளர்ந்து, இயற்கையை மனிதகுல மேம்பாட்டுக்காக, நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட கட்டுப்பாடுகளுக்குட்பட்டு, பயன்படுத்தி வெற்றிகாண்பதே விஞ்ஞானம் (உயிரியலாளர்களின் ஆய்வு).
//உங்க பதிவுகளைப் பார்த்தா டவுட்டா இருக்கு.. நீங்களும் இதுமாதிரி ரிசெர்ச் செய்யுற பயாலஜிஸ்டா?//
ஒரு பள்ளி மாணவப்பருவத்துக்கேயுறிய (premature conclusion) அவசர முடிவுக்கு வரும் தன்மை உங்கள் மறுமொழியில் தெளிவாகத்தெரிகிறது! திரு. க்ரீகர் ஜொஹான் மெண்டல் அவர்கள் தன் புரிதலுக்கேற்ப பட்டானிப்பயிர்களை இனப்பெருக்கம் செய்து, பல்வேறு ஆய்வுகளை செய்யாமலிருந்திருந்தால், இன்று இந்த உலகம் “மரபனுக்கள்/டி.என்.ஏ” எனும் மைல்கல்/அற்புதத்தைக் கண்டுபிடித்து, மனிதனை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த சின்னம்மை உள்ளிட்ட நோய்களை வேரறுத்திருக்கவோ, மரபனுக்கோளாறுகளால் உயிரிழக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் உயிரை, ஜீன்தெரபி என்னும் உயிரியல் மந்திரக்கோலுடன் மீட்டுத்தந்திருக்கவோ முடியாது என்பதை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்! சில விஞ்ஞான முயற்ச்சிகளில் ஆபத்தும், பின்னடைவும் இருக்கவே செய்யும், அவற்றின் பாதிப்புகளின் அளவையும், அவற்றால் ஏற்படும் நன்மைகளின் அளவையும் கணக்கிட்டு, நன்மைகள் அதிகமிருப்பின், முயற்ச்சிகளை மேற்கொள்வதே ஆரோக்கியமான விஞ்ஞானம். அதைவிடுத்து, இயற்கையை பயன்படுத்துவது தவறென்று தூங்கிக்கொண்டிருந்தால், பதிவின் தொடக்கத்தில் சொல்லியது போல மீண்டும் கற்கால வாழ்க்கைக்கே திரும்ப வேண்டியதுதான்! வாழ்க்கையின் அடுத்த தளத்துக்கு முன்னேறுவதே பரிணாமத்தின் அடிநாதம்! அதைப்புரிந்துகொண்டு விஞ்ஞானத்தை முன்னேடுத்துச்செல்வதே நன்மைப்பயக்கும்!!
என் பதிவுகளுக்கும், என் தனிப்பட்ட ஆய்வுக்கும் சம்பந்தமேயில்லை. உண்மையைச் சொல்லப்போனால், என் ஆய்வு சம்பந்தப்பட்ட பதிவுகளை இனிதான் எழுதவே போகிறேன்! 🙂
விவாதத்துக்கு மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம்!
ஜானகிராமன்
ஒக்ரோபர் 11, 2010
பத்மஹரி, மிக நல்ல பதிவு. அடிப்படையிலிருந்து எளிமையாக கருத்துக்களை கோர்த்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி. இதை படிக்கும் போது, எனக்கு ஜெயமோகனுடைய விசும்பு சிறுகதை ஞாபகம் வந்தது. மனிதன் தனக்கு தெரிந்ததை வைத்துக்கொண்டு, இயற்கையை தனக்கு ஏற்றவிதமாக மாற்ற நினைக்கிறான். ஆனால் இயற்கை ஒரு மனிதனுக்கு ஒரு பதிலை தந்து, அதிலிருந்து 10 கேள்விகளை வைப்பதை நாம் உணருவதே இல்லை.
padmahari
ஒக்ரோபர் 11, 2010
வாங்க ஜானகிராமன்,
//மனிதன் தனக்கு தெரிந்ததை வைத்துக்கொண்டு, இயற்கையை தனக்கு ஏற்றவிதமாக மாற்ற நினைக்கிறான். ஆனால் இயற்கை ஒரு மனிதனுக்கு ஒரு பதிலை தந்து, அதிலிருந்து 10 கேள்விகளை வைப்பதை நாம் உணருவதே இல்லை.//
ஆய்வுலகைப்பற்றிய யதார்த்தமான, அழகான புரிதல்! இயற்க்கை ஒரு பதிலுடன், முன்வைக்கும் (10) கேள்விகளையும் ஆராய்ந்தறிய மனிதனுக்கு பொருள், நேரம், புலமை, திறமை ஆகியவை அடங்கிய பல தடைகளும் இருப்பதே விஞ்ஞானத்தின் சீறிய வளர்ச்சிக்கு அதே இயற்க்கை வைக்கும் முற்றுப்புள்ளியோ என்பது என் ஐயப்பாடு!
முதல் வருகைக்கும், ஊக்கமறுமொழிக்கும் மனமார்ந்த நன்றிகள். மேலிருப்பானுக்கான உங்கள் ஆதரவு தொடரட்டும்…..
kousalya
ஒக்ரோபர் 11, 2010
நண்பருக்கு வாழ்த்துக்கள். என் தளத்திற்கு உங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக நேரம் கிடைக்கும் போது உங்கள் தளம் வந்து படித்திருக்கிறேன். அங்கே சில கருத்துகளை சொல்ல வேண்டும் என்று எண்ணுவேன்… நேரம் இன்மையால் இயலாமல் போய் விடும். ஒரு வரி பின்னூட்டத்தில் எனக்கு விருப்பம் இல்லை. உங்கள் பதிவை பற்றி கருத்துகள் என்று சொல்லவந்தால் அதுவே ஒரு தனி பதிவாகி விடும். :)))
உங்கள் தளம் மாதிரியான நல்ல விழிப்புணர்வு எழுத்துக்கள் பலரை சரியாக சென்று அடைவதில்லை என்பது எனது ஆதங்கம்…..இதை வைத்து தான் நான் ‘எது விழிப்புணர்வு..?’ என்று ஒரு போஸ்ட் எழுதினேன். அந்த போஸ்ட் உங்கள் தளத்தை மனதில் வைத்து தான் எழுதினேன். நேரம் இருந்தால் படித்து பாருங்கள். மிக எளிய முறையில் தான் எழுதி கொண்டு வருகிறேன்…
தவறுகள் இருப்பின் சுட்டி காட்டினால் மகிழ்வேன்.
கழுகு வலை தளத்தில் என் கேள்விற்கு பதில் சொன்னதுக்கு நன்றி.
padmahari
ஒக்ரோபர் 11, 2010
வாங்க கௌசல்யா,
ஊக்கத்துக்கும், முதல் வருகைக்கும் நன்றிகள் பல. மேலிருப்பானை ஆதரிப்போரின் பட்டியலில், மறுமொழி மூலம் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளாத எத்தனையோ நல்லுள்ளங்களில் நீங்களும் ஒருவர் என்றறிவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு வரி பின்னூட்டமென்பதில் எனக்குமே விருப்பம் இருப்பதில்லை. ஆனால், உங்களைப் போன்றோரின் பதிவுகளுக்கு ஒருவரி பின்னூட்டமிடுவதற்க்கு பதில் சும்மா இருந்துவிடுவதே மேல் என்பதே என் நிலைப்பாடு. என் எழுத்துக்கள் உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. மேலும், என் தளத்தை மனதில் வைத்துதான் விழிப்புணர்வு எனும் ஒரு அழகான பதிவை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்றறியும்போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆறுதலாகவும் இருக்கிறது. பதிவுலகில் அறிவியலை முழுமையாக எழுதத்தொடங்கிய காலத்திலிருந்தே, என் எழுத்துக்கள் அதிகமான மக்களை சென்றடையவேண்டும், ஆனால் அதற்க்கு எழுத்து மட்டுமே போதாது, திரட்டிகளில் ஆதரவும் வேண்டும் என்று தெரிந்தபின் இணைத்தபோதிலும், கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்ற நிலை சற்று பின்னடைவைத் தந்ததென்னவோ உண்மைதான். பக்குவமடைந்த பின்னாளில் என்னை ஆதரிக்கும் ஒரு சிலருக்காகவேணும் இத்தளம் உயிரோடு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், மிகுந்த ஆய்வுப்பணிகளுக்கிடையிலும் இன்றுவரை என் வலைப்பயணம் தொடர்கிறது! உங்களைப் போன்ற சமூகப்பொறுப்புள்ள சகபதிவர்களை சந்தித்தபின், எனக்கான (வலைப்பயணக்) கடமைகள் கூடிவிட்டிருப்பதை உணரமுடிகிறது. நன்றி!
உங்களுடைய எழுத்துக்கள் அழகானவை, தவறுகள் இருப்பின் நிச்சயம் அறியத்தருவேன். செவ்வனே தொடருங்கள்! வாழ்த்துக்கள். என் பிற எழுத்துக்கள் பற்றிய உங்கள் கருத்துகளை நேரம் இருப்பின் அறியத்தாருங்கள். நன்றி, மீண்டும் சந்திப்போம்!
படைப்பாளி
ஒக்ரோபர் 11, 2010
நல்ல பதிவு நண்பரே..எவ்வளவு செய்திகள்..அவ்வளவும் தெளிவாய்..அவ்வளவும் பயனுள்ளத் தகவல்கள்..ஏதோ எழுதினோம்..தோணுனத எழுதினோம் என்றில்லாமல்,எழுதுவது சமுதாயத்திற்கு பயனளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எழுதும் தங்கள் சேவை அளப்பரியது….அருமை..அருமை
padmahari
ஒக்ரோபர் 14, 2010
உங்களைப் போன்ற ஒரு சக படைப்பாளியின் பார்வையிலிருந்து, என் எழுத்துக்கள் ஒரு அளப்பரிய சேவை என்றழைக்கப்படுகிறது என்றறியும்போது ஒரு மகிழ்ச்சி கலந்த திருப்தி ஏற்படுகிறது என்றாலும், என் புரிதலின்படி “சேவை” எனும் வார்த்தைக்கு தகுதியானவையாக என் எழுத்துக்களை என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை! காரணம், இந்தத் தளத்தின் சில எழுத்துக்கள் ஒரு பாமர தமிழனை சென்றடைந்து, அவருடைய அன்றாட வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில், ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதை நானறியும்வரை, என் வலைப்பயணமும் எழுத்துப்பயணமும், தேவையான திருத்தங்களை அவ்வப்போது செய்துகொண்டு பயணிக்கவேண்டும் என்று விழைகிறேன். அத்தகைய பயணத்தில், தங்களைப்போன்ற நண்பர்களின் ஊக்கமும், தவறிருப்பின் இடித்துறைத்தலும் சேர்ந்து இருக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
Abarajithan
ஒக்ரோபர் 15, 2010
@பத்மஹரி சார்,
//இதுக்கான உங்களோட புரிதல் எப்படின்னு எனக்குத் தெரியலை. ஒரு உதாரணம் சொல்ல முடியுமா? ஏன்னா, விஞ்ஞானம் அல்லது ஆய்வு என்பதே இயற்கைக்கு அப்பாற்பட்டு ( இயற்கையை பயன்படுத்தி) செய்ய வேண்டிய ஒன்று என்பதே என் புரிதல்.//
ஓகே. உதாரணமா..
1.முதல்ல மருத்துவத்தை எடுத்துக்கலாம்.. பண்டைய காலத்தில் (இயற்கையோடு ஒன்றி) கண்டுபிடிக்கப்பட்டு, இற்றைப்படுத்தப்பட்டு (இயற்கையிலிருந்து சிறிது சிறிதாக விலகி) வந்துள்ள மருந்துகளும், சிகிச்சை முறைகளும் பலகோடி மக்களை, மிக அதிக எண்ணிக்கையில் காப்பாற்றி, இயற்கையின் வழக்கமான நடைமுறையான, இயற்கை சமநிலையை பேணுவதற்கு நோய்கள் பரவுதல், பிரசவத்தின்போதும் அதன் பின்னரும், சுகாதாரக் கேடாலும், எதிரி விலங்குகளாலும் தவறுதலாக மரணங்கள் நிகழ்தல் போன்றவற்றின் விளைவுகளை பெருமளவில் குறைத்து, மனித ஜனத்தொகை இயற்கைச் சமநிலையை உடைத்துக்கொண்டு அதிவேகத்தில் பெருகியதற்கு மிக முக்கியமான காரணங்களாக அமைந்தன.
2.ஆயுதங்கள் : இதுவும், பண்டைய காலத்தில் விலங்குகளிடமிருந்து நம்மை காக்கவும் விலங்குகளை நம் வசதிப்படி கொல்வதற்காகவும் (இயற்கையோடு ஒன்றி) கண்டுபிடிக்கப்பட்டு (வில் அம்பு, வேல்) இற்றைப்படுத்தப்பட்டு (இயற்கையிலிருந்து சிறிது சிறிதாக விலகி) வந்துள்ள ஆயுதங்கள், இன்று சூழலை மாசுபடுத்தும் முக்கிய காரணியாக , இயற்கையை அழிப்பதிலும் முன்னிற்கிறது.. (வியட்னாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய காடழிப்பு ஆயுதமான ப்ளு-82, 2nd Wolrd war இல் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டுகள் என்பன உதாரனத்திற்குள் உதாரணங்கள்)
3.வேதியியல்: இதுவும்,பண்டைய காலத்தில் இயற்கையோடு ஒன்றி வளர்ந்து பின் இயற்கையை எதிர்த்து, இன்று பாலிதீன், கிருமிநாசினி, பூச்சிக்கொல்லி, CFC, வேதியல் ஆயுதங்கள் என வளர்ந்து நிற்கிறது..
4.விண்வெளி ஆய்வு: இது மட்டும்தான் செய்முறை ஆய்வுகள் ஆரம்பித்த காலத்திலிருந்தே இயற்கைக்கு ஆப்பு வைக்கிறேன் பேர்வழி எனக் களத்தில் குதித்த துறை.. (உதாரணம் தேவையில்லை என நம்புகிறேன்)
5.உயிரியல்: இது ரொம்ப முக்கியம். இதுவும் வழக்கம்போல இயற்கையுடன் ஒன்றி உயிர்களை இனம்பிரிக்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து படிப்படியாக வளர்ந்து, இன்று அப்பாவி எலிகளில் ஆய்வு செய்வதும், ஜெனடிக்ஸ் என்று இயற்கையின் வேலையை கையிலெடுக்கிறேன் என, புது உயிர்களை உருவாக்குவதும், பின் அவற்றைத் திருத்துவதுமாக ஏதோ சாப்ட்வேர் ப்ரோக்ராமிங் செய்வதுபோல பேட்ச் ஒட்டிக் கொண்டும், சர்விஸ் பேக் போட்டுக்கொண்டும், “அத எடுத்து இங்க போடு, இத எடுத்து அங்க போடு” என்று ஒரு சில “மனிதனுக்கு தேவையில்லாத” பிராணிகளை ஒழிக்க அவற்றின் எதிரிகளை எடுத்து இவற்றோடு கலப்பதும், பின் புது உயிர்கள் தமது புது சூழலில் எதிரிகள் இல்லாத காரணத்தினால் இயற்கை சமநிலையை மீறி பல்கிப் பெருகுவதும், பின் அவற்றின் மட்டுப்படுத்தப்பட்ட உணவு தீர்ந்ததும் வேறு ஒரு புது உணவை (பெரும்பாலும் மனிதனின் செல்லப்பயிர்கள்) பெருமளவில் தின்று தீர்ப்பதும், உடனே உயிரியல், ஐயையோ.. எனக் கூவிக்கொண்டு இப்புது உயிர்களின் எதிகளை சூழலில் கலப்பதும் என இயற்கையுடன் விளையாடுவதில் படு பிஸியாக இருக்கிறது.
எனக்கு இப்போது நினைவுக்கு வரும் துறைகள் இவ்வளவுதான்.. அத்துடன் இடம், நேரம் மற்றும் உங்கள் பாண்ட்வித் கருதி இத்துடன் உதாரணங்களை முடித்துக்கொள்கிறேன்.
padmahari
ஒக்ரோபர் 15, 2010
//இந்தப் பின்னூட்டங்களை நான் சிறிது கோபத்துடன்தான் எழுதினேன். (நான் ஒரு தீவிர ப்ளூ க்ராஸ் ஆளு) எனவே ஏதாவது மரியாதை குறைவாகப் எழுதியிருந்தாலோ அல்லது உங்களது மனது புண்படும்படியாக எழுதியிருந்தாலோ என்னைத் தயவு செய்து மன்னியுங்கள்…//
உங்க மறுமொழிகளில் அவ்வப்போது (அங்கம் இங்குமாய்) சில மரியாதை மீறல்கள் இருக்கத்தான் செய்கிறது. உங்களின் வயதையும், ஆர்வமிகுதியையும் கருத்தில்கொண்டு நான் அவற்றை பெரிதுபடுத்துவதில்லை! ஆனால், ஒரு விஷயம். கருத்துப்பரிமாற்றத்தின்போது, தான் என்ற அகங்காரமோ, எனக்கு எல்லாம் தெரியும் என்ற மனோபாவமோ வருவது இயல்பு. அதை உணர்ந்து தவிர்த்துவிட வேண்டும். செய்துவிட்டு வருந்துவதிலோ, மன்னிப்புக் கேட்பதிலோ பயனேதுமில்லை! என்னைப்பொறுத்தவரை எல்லாம் தெரிந்தவரென்று யாரும் இந்த உலகில் இல்லை. அப்படி ஒருவர் எண்ணுவது, அவரின் அறியாமையையே காட்டும். மேலும், யார்மீது உங்களுக்கு கோபம்? என் மீதா இல்லை இந்த சமுதாயத்தின்மீதா? யார் மீதாயினும் அதை நாகரீகமாக வெளிப்படுத்த முயற்ச்சிக்க வேண்டும். இது ஒரு கருத்துப்பரிமாற்றத்திற்க்கான களம் மட்டுமே! இங்கு விவாதங்கள் முன்னேற்றப்பாதைய நோக்கியே இருத்தல் நலம்! அதேசமயம் விவாதங்கள் பொதுவாக இருக்க வேண்டும். தனிமனித அடிப்படையில் அல்ல! அதுமட்டுமில்லாமல், இந்த உலகம் பெரும்பான்மையை முதன்மையாக்கி செயல்படும் தன்மையுடயது. சத்தியத்துக்கு சக்தி குறைவு! ஆக, சொல்ல வரும் கருத்தை நிதானமாகவும், நாகரீகமாகவும், ஆதாரங்களுடனும் சொல்ல வேண்டியது அவசியம்! மத்தபடி, உங்களோட வெளிப்படையான, ஈடுபாடுள்ள கருத்துப்பரிமாற்றம் வரவேற்கத்தக்கதே! வாழ்த்துக்கள்…..
Abarajithan
ஒக்ரோபர் 16, 2010
//உங்க மறுமொழிகளில் அவ்வப்போது (அங்கம் இங்குமாய்) சில மரியாதை மீறல்கள் இருக்கத்தான் செய்கிறது. உங்களின் வயதையும், ஆர்வமிகுதியையும் கருத்தில்கொண்டு நான் அவற்றை பெரிதுபடுத்துவதில்லை! //
உண்மைதான் சார், இவற்றைப் பொருட்படுத்தாதது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஆனால் எனது தவறுகள் திருத்தப்பட வேண்டியவை. திருத்த முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்…
padmahari
ஒக்ரோபர் 16, 2010
பெருந்தன்மையெல்லாம் இல்ல. அது ஒரு பக்குவம்! அந்தப் பக்குவத்தை இந்த வலையுலக பயணமே எனக்கு கற்றுக்கொடுத்தது. என் கல்லூரி வாழ்க்கையின்போது (இப்போதும்கூடத்தான்), உங்களைவிட அதிகமான, குசும்பு, நக்கல், நையாண்டி, கிண்டல் எல்லாம் செய்யறவந்தான் நானும். இந்தக் (வலைத்தளம்) களம் அழகானது. அதை என் பக்குவமின்மையால் கெடுத்துவிடக்கூடாது என்பதில் மிக மிக கவனமாயிருக்கிறேன். அதையே என் வாசகர்கள்/மறுமொழியாளர்களிடன் எதிர்பார்க்கிறேன்! நீங்கள் திருந்துவதெல்லாம் உங்கள் பிரச்சினை. இந்த வலையில் மரியாதை மீறல்களை, இனி நான் சகித்துக்கொண்டிருக்க மாட்டேன்! புரிதலுக்கு நன்றி….
Abarajithan
ஒக்ரோபர் 16, 2010
//ஆனால், ஒரு விஷயம். கருத்துப்பரிமாற்றத்தின்போது, தான் என்ற அகங்காரமோ, எனக்கு எல்லாம் தெரியும் என்ற மனோபாவமோ வருவது இயல்பு. அதை உணர்ந்து தவிர்த்துவிட வேண்டும். செய்துவிட்டு வருந்துவதிலோ, மன்னிப்புக் கேட்பதிலோ பயனேதுமில்லை//
உண்மைதான்.. திருத்திக்கொள்கிறேன்…
Abarajithan
ஒக்ரோபர் 15, 2010
//**தனது தவறுகளை குறைந்த காலத்தை எடுத்துக்கொண்டு சரி செய்யும் இயற்கை, தனக்கு அப்பாற்பட்ட விஷயத்தால் ஏற்படும் பாதிப்பை நீக்க நிச்சயம் அதிக காலம் எடுக்குமல்லவா? **
உதாரணமாக….???//
ரைட்.. இது ஒரு நல்ல கேள்வி.. உதாரணமாக.. காட்டுச் சூழலில் ஒரு விலங்கினத்தின் (x) எண்ணிக்கை திடீரென அதிகரிக்கிறது என வைத்துக்கொள்வோம். (இதற்கு, எதிரிகள் குறைந்தமை, உணவுக்கான போட்டி குறைந்தமை போன்றவற்றை காரணங்களாக கொள்ளலாம்) இப்போது, குறைந்த கால அவகாசத்தில், அதாவது (x)இனத்தின் உணவாகும் பிற இனங்கள் முழுதாக அழியும் முன்னரே, தானாக, (x)இனத்தின் எதிரிகள் அதிகரிப்பது மூலமோ, ஒரே இனத்துக்குள்ளேயே உணவுக்காக போட்டி அதிகரிப்பது மூலமோ, தொற்று நோய்களின் வேகமான பரம்பல் மூலமோ, இயற்கை அழிவுகள் (காட்டுத்தீ, நிலநடுக்கம்) மூலமோ (x) ஐக் கட்டுப்படுத்தி, மீண்டும் தன் சமநிலையை நிலைநாட்டும்..
ஆனால், மனிதன் விடயத்திலோ, நாம், இயற்கைக்கு பரிச்சயமற்ற முறைகளை (நவீன தொழில்நுட்பம்) பயன்படுத்தி, எமது எதிரிகளையும், சக உணவுப் போட்டியாளர்களையும் வீழ்த்தி நமது ஜனத்தொகையை வெற்றிகரமாக அதிகரிக்கிறோம். எனவே, இயற்கை தனது வழக்கமான அஸ்திரங்களை பிரயோகித்துப் பார்த்தாலும் நாம் அவற்றை பெரும்பாலும் முறியடிக்கிறோம் (ஒரே இனப் போட்டி- GM Food, தொற்றுநோய்-மருத்துவம், அழிவு-தொழிநுட்ப ஆரூடங்கள், etc…) எனவே, இயற்கை தனது சமநிலையை மீளக் கொண்டுவர முட்டி மோதி அதிக காலம் எடுத்துக் கொள்கிறது. (கவலைப்படாதீர்கள்.. என்றாவது ஒருநாள் இயற்கை, மனிதனை அழித்து புவியைக் காக்கத்தான் போகிறது)
**அத்தோடு, உலகை(மனித இனத்தை)க் காப்பதற்காக பூமியை அழிக்க முற்படும் (அல்லது, என்ன நடக்கப்போகிறது என்பதே தெரியாத) முயற்சிகளை தவிர்ப்பது தானே நியாயம்?**
//உண்மைதான்! வரவேற்கத்தக்க ஒன்றும்கூட….//
ஆனால் அதே போல்தான் உயிரியல் ஆய்வுகளும். இயற்கைச் சமநிலை என்பது, ஒரு புத்தகத்திற்குள் அடக்கக் கூடிய அளவு எளிதானதல்ல.. அது உலகின் எல்லாக் கணினிகளின் மூலமோ அல்லது எல்லா மனிதர்களின் சிந்திக்கும் திறனையும் ஒன்று சேர்த்தாலும் கணக்கிட முடியாத, ப்ரோட்டான் முதல் பிரபஞ்சம் வரை பரவியுள்ள, ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட மிகச் சிக்கலான சமன்பாடுகள் நிரம்பியது. இப்படிப்பட்ட இயற்கைச் சமநிலையில், நாம் எமது நன்மைக்காக, இயற்கைக்கு அப்பாற்பட்டு, இயற்கைக்கு பரிச்சயமல்லாத ஒரு சிறு மாற்றத்தை உண்டாக்கினாலும் அது மிகப்பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, ஆண் மையப் பார்வை கொண்ட அறிவியல்கள் எல்லாமே இவ்வாறன எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். இதற்கு உயிரியல் விதிவிலக்கல்ல..
**Jurassic Park**
//அதெல்லாஞ்சரி, இதிலிருந்து நீங்க என்ன சொல்லவர்றீங்க?//
இன்னும் புரியலையா? மேற்குறிப்பிட்ட கருத்து உயிரியலில் எவ்வாறு நிகழ்கின்றது என்பதை இந்த வசனம் காட்டுகின்றது. உயிரியல் ஆய்வுகளின் விளைவுகள், நாம் எதிர்பார்த்தது போல நேர்மறையாக, எமது பூரண கட்டுப்பாட்டுக்குள் இருக்காது என்பதனையும் இது கூறுகின்றது.
எனவே: **அத்தோடு, உலகை(மனித இனத்தை)க் காப்பதற்காக பூமியை அழிக்க முற்படும் (அல்லது, என்ன நடக்கப்போகிறது என்பதே தெரியாத) முயற்சிகளை தவிர்ப்பது தானே நியாயம்?** எனும் கொள்கையின்படி, இவ்வாறான உயிரியல் ஆய்வுகளை தவிர்ப்பது தானே நியாயம்?!
padmahari
ஒக்ரோபர் 15, 2010
////அதெல்லாஞ்சரி, இதிலிருந்து நீங்க என்ன சொல்லவர்றீங்க?//
இன்னும் புரியலையா? மேற்குறிப்பிட்ட கருத்து உயிரியலில் எவ்வாறு நிகழ்கின்றது என்பதை இந்த வசனம் காட்டுகின்றது. உயிரியல் ஆய்வுகளின் விளைவுகள், நாம் எதிர்பார்த்தது போல நேர்மறையாக, எமது பூரண கட்டுப்பாட்டுக்குள் இருக்காது என்பதனையும் இது கூறுகின்றது.//
உண்மைதாங்க, உங்க அளவுக்கு எனக்கு ஆங்கில புலமை இல்லாததைக்கூட இது காட்டலாம்! ஆனா, ஒவ்வொரு கருத்துக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பரிமாணங்கள், பார்வைகள், புரிதல்கள் இருக்கலாம். அது ஒவ்வொருவரின் அணுகுமுறையைப் பொறுத்து மாறுபடலாம் என்னும் என்னோட பக்குவமில்லாத (?) புரிதலினால் உங்களோட தனிப்பட்ட கருத்தைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். உதாரணமாக, அந்தக் கருத்து…..
//Dr. Ian Malcolm: If there is one thing the history of evolution has taught us it’s that life will not be contained. Life breaks free, expands to new territory, and crashes through barriers, painfully, maybe even dangerously.”//
“பரிணாமக்கொள்கையின்படி, உயிர்களைக் கட்டுப்படுத்தவோ, ஒரு வரையறைக்குட்படுத்தவோ முடியாது. மாறாக, ஒரு உயிரின் தன்மையானது, கட்டுடைத்து, பல்கிப்பெருகி, வரையறைகளை தகர்த்தெரிந்து புதிய பரிணாமங்களை அடையக்கூடியது. அந்தப் பாதையில், பூதாகரமாக வளர்ந்து பெருகவும், வரையறைகளை உடைக்க முயன்று, தோற்று, அபாயத்தில் துன்பகரமான நிகழ்வுகளுக்கு உட்பட்டு முடிந்துபோவதும் உண்டு”
உலகின் எல்லா அறிவியல் துறையைச்சார்ந்த விஞ்ஞானிகளும், (க்ரெய்க் வெண்டர் போல) உயிரை கட்டுப்படுத்த, ஒரு வரையறைக்குட்படுத்த முயலவில்லை! மாறாக, ஒரு உயிரின் இயற்கையை, இயங்குதன்மையை புரிந்துகொண்டு, அதை உலக நன்மைக்காக (சில கட்டுப்பாடுகளுக்குட்பட்டு) விஞ்ஞான முயற்ச்சிகளை மேற்கொள்கிறார்கள்…..இதுவே என் புரிதல்! (உங்களுடைய புரிதல் என்னன்னு தெரிஞ்சிக்கதான் கேட்டேன். சரியா? அதுக்காக நக்கல், நையாண்டியாத்தான் பதில் சொல்லுவீஙகன்னா, அதைவிட நக்கலாவும், ஏளனமாகவும் ஒரு பதிலை சொல்வது எனக்கு மிக மிகச் சுலபம். ஆனால், அது பக்குவப்பட்ட தன்மையாகாது என்பதாலேயே ரொம்ப சாதுவா பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன். அதை கையாளாகத்தனம்னு தப்புக்கணக்குப் போட்டா அது உங்களோட அறியாமை. அதனால எனக்கு ஒன்னும் நஷ்டமில்லை. சரிங்களா?!)
விவாதத்துக்கு மிக்க நன்றி!
Abarajithan
ஒக்ரோபர் 16, 2010
//அதுக்காக நக்கல், நையாண்டியாத்தான் பதில் சொல்லுவீஙகன்னா, அதைவிட நக்கலாவும், ஏளனமாகவும் ஒரு பதிலை சொல்வது எனக்கு மிக மிகச் சுலபம். ஆனால், அது பக்குவப்பட்ட தன்மையாகாது என்பதாலேயே ரொம்ப சாதுவா பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன். அதை கையாளாகத்தனம்னு தப்புக்கணக்குப் போட்டா அது உங்களோட அறியாமை. அதனால எனக்கு ஒன்னும் நஷ்டமில்லை. சரிங்களா?!)//
சார், நான் முன்னைய பத்திகளிலே கிண்டலாகப் பதில் எழுதியது உண்மைதான். ஆனால் இந்தப் பந்தியில் நிஜமாவே சீரியஸாக எழுதியிருக்கேன் சார். அந்த “இன்னும் புரியலையா” தவிர..
padmahari
ஒக்ரோபர் 16, 2010
//சார், நான் முன்னைய பத்திகளிலே கிண்டலாகப் பதில் எழுதியது உண்மைதான். ஆனால் இந்தப் பந்தியில் நிஜமாவே சீரியஸாக எழுதியிருக்கேன் சார். அந்த “இன்னும் புரியலையா” தவிர..//
இனிமே சீரியஸா மட்டும் எழுதுங்க, அது போதும்! கிண்டலையெல்லாம் உங்க டைரிக்குறிப்புல எழுதி படிச்சி சிரிச்சுக்குங்க சரியா?
Abarajithan
ஒக்ரோபர் 16, 2010
உங்களுடைய மொழிமாற்றம் சரியானதுதான்.. ஆனால், “Life breaks free, expands to new territory, and crashes through barriers, painfully, maybe even dangerously” என்பதற்கு நீங்கள் “மாறாக, ஒரு உயிரின் தன்மையானது, கட்டுடைத்து, பல்கிப்பெருகி, வரையறைகளை தகர்த்தெரிந்து புதிய பரிணாமங்களை அடையக்கூடியது. அந்தப் பாதையில், பூதாகரமாக வளர்ந்து பெருகவும், வரையறைகளை உடைக்க முயன்று, தோற்று, அபாயத்தில் துன்பகரமான நிகழ்வுகளுக்கு உட்பட்டு முடிந்துபோவதும் உண்டு” என மொழிமாற்றியிருக்கிறீர்கள். ஆனால் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தின்படி,
“மாறாக, ஒரு உயிரின் தன்மையானது, கட்டுடைத்து, பல்கிப்பெருகி, வரையறைகளை தகர்த்தெரிந்து புதிய பரிணாமங்களை அடையக்கூடியது. அந்தப் பாதையில், (எதிர்பாராத விதத்தில்) கவலைக்கிடமாகவும், சில வேளைகளில் மிக ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது” என்றே நான் புரிந்து கொண்டேன். “துன்பகரமான நிகழ்வுகளுக்கு உட்பட்டு முடிந்துபோவதும் உண்டு” எனும் பொருள்தரும் சொற்றொடர் அவ்வாக்கியத்தில் இல்லை என நான் எனது சிற்றறிவுக்குட்பட்டு நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
//உலகின் எல்லா அறிவியல் துறையைச்சார்ந்த விஞ்ஞானிகளும், (க்ரெய்க் வெண்டர் போல) உயிரை கட்டுப்படுத்த, ஒரு வரையறைக்குட்படுத்த முயலவில்லை! மாறாக, ஒரு உயிரின் இயற்கையை, இயங்குதன்மையை புரிந்துகொண்டு, அதை உலக நன்மைக்காக (சில கட்டுப்பாடுகளுக்குட்பட்டு) விஞ்ஞான முயற்ச்சிகளை மேற்கொள்கிறார்கள்…..//
உண்மைதான்.. எல்லாரும் இவ்வாறு செய்வதில்லை. ஆனால் பெரும்பாலானோர் செய்கின்றனர்..
இதற்கும் உதாரணமாக, இலங்கையில், பொன்னாங்காணியுடன் கலப்படம் செய்வதற்காக வெளிநாடுகளில் கால்வாய்களில் வளர்ந்து தொல்லை கொடுக்கும் ஒரு தாவரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வியாபாரத் துறை. பின், இந்த தாவரம் இலங்கையின் நீர்ப்பாசனத்தையும் குழப்ப முற்பட்டதனையடுத்து இதனை அழிக்க வல்ல ஒரு பூச்சியினமொன்றை, ஐக்கிய அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தனர். இது உயிரியல். அவர்கள், இப்பூச்சியினத்தை இங்கு பரவ விட்டதனையடுத்து அது மனிதன் விளைவிக்கும் சில பயன் தரும் தாவரங்களுக்கு ஆப்பு வைக்கத்தொடங்கியது. இப்போது அதனை அழிக்க என்ன செய்யலாம் என இலங்கையின் என்டமோலஜிஸ்ட்கள் அனைவரும் கலந்து பேசி வருகின்றனர்.
இதில், ஒரு உயிரின்(கால்வாய்த் தாவரம்) இயற்கையை, இயங்குதன்மையை அரைவேக்காட்டுத்தனமாக புரிந்துகொண்டு, அதை மனித நன்மைக்காக, (ஒரு கட்டுப்பாட்டிற்குள் உள்ளடக்க முயன்று) விஞ்ஞான முயற்சியொன்றை மேற்கொண்டனர். விளைவு? அவ்வுயிர் கட்டுடைத்து, பல்கிப்பெருகி, வரையறைகளை தகர்த்தெரிந்து நாம் எதிர்பார்க்காத, எமக்குப் பாதகமான ஒரு புதிய பரிணாமத்தில் தன்னை முன்னெடுத்தது…
இன்னொன்று, நமது உடலைத் தாக்கி அதில் இனம்பெருக்கும் வைரஸ்கள். நமது மருத்துவ உலகம், சில தசாப்தங்களாக வைரஸ்களின் தாக்கங்களை குறைப்பதற்கு, வைரஸ்களின் இயற்கையை, இயங்குதன்மையை சரியாகப் புரிந்துகொள்ளாமல், அதை மனித நன்மைக்காக, (கட்டுப்பாட்டிற்குள் உள்ளடக்க முயன்று) ஆண்டிபயாட்டிக் மருந்துகள் எனும் விஞ்ஞான முயற்சியொன்றை மேற்கொண்டனர். விளைவு? அவ்வுயிர் கட்டுடைத்து, பல்கிப்பெருகி, வரையறைகளை தகர்த்தெரிந்து நாம் எதிர்பார்க்காத, எமக்குப் பாதகமான பல புதிய பரிணாமங்களை தினமு முன்னெடுக்கிறது. எமது மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தியை நாள்தோறும் அது அதிகரித்து வருகின்றது. மருத்துவர்களும் நாள்தோறும் வீரியம் கூடிய ஆண்டிபயாட்டிக் மருந்துகளை உருவாக்குகின்றனர்.
எனில், இதுதான் உயிரியலா? விஞ்ஞானமா? என்னைப் பொறுத்தவரை, விஞ்ஞானம் என்பது மனிதனின் சொந்த ஆர்வத்தின் (Curiosity)இன் காரணமாக, ஒரு இருண்ட மைதானத்தின் நடுவே, ஒரு சிறிய மெழுகுவர்த்தியுடன் கட்டிப்போடப்பட்டிருக்கும் ஒருவனைப் போல, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது, ஏன் நடக்கிறது என அந்தச் சிறு மெழுகுவர்த்தியின் துணையோடு மிக மிக மெதுவாக அறிதலும், கணித சூத்திரங்கள் மூலமும், பரிசோதனைகள் மூலமும் அறிந்தவற்றை நிரூபிப்பதுமே விஞ்ஞானமாகும். அவ்வாறு நிரூபிக்கப்பட்டவற்றை, பயன்படுத்தி ஏதோ ஒரு வழியில் மனிதனின் குறுகிய கால நன்மைக்காக மட்டும் புது கருவிகளையும், முறைகளையும் கண்டுபிடித்தல் தொழில்நுட்பம் எனப்படுவதாகும். எனது புரிதலிலும் தவறுகள் இருக்கலாம்.. ஆனால் தவறுக்குப் பயந்தால் சரியானதை என்றுமே நாம் கற்றுக்கொள்ள முடியாது.
padmahari
ஒக்ரோபர் 16, 2010
//ஆனால் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தின்படி,
“மாறாக, ஒரு உயிரின் தன்மையானது, கட்டுடைத்து, பல்கிப்பெருகி, வரையறைகளை தகர்த்தெரிந்து புதிய பரிணாமங்களை அடையக்கூடியது. அந்தப் பாதையில், (எதிர்பாராத விதத்தில்) கவலைக்கிடமாகவும், சில வேளைகளில் மிக ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது” என்றே நான் புரிந்து கொண்டேன். “துன்பகரமான நிகழ்வுகளுக்கு உட்பட்டு முடிந்துபோவதும் உண்டு” எனும் பொருள்தரும் சொற்றொடர் அவ்வாக்கியத்தில் இல்லை என நான் எனது சிற்றறிவுக்குட்பட்டு நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? //
அபராஜிதன்…..ஏன் இப்படி??? ஆஹா….இது அவன் இல்ல மாதிரி திரும்பத் திரும்ப ஆரம்பிக்கிறீங்க? முதல்ல, நான் அந்த ஆங்கில வரிகள மொழிமாற்றம் செய்யல. ஆனா, அவை உணர்த்தும் கருத்துக்கள் பற்றிய என் புரிதல் என்றே ஒரு கருத்தை முன்வைத்தேன்! சரி உங்க வழிக்கே வர்றேன். அந்த வரிகளுக்கான உங்களோட (தமிழ்) மொழிமாற்றத்தில் இருக்குற, “கவலைக்கிடமாகவும்”, “சில வேளைகளில்”, “விளைவுகளையும்”, “எதிர்பாராத விதத்தில்” (இன்னும் சில) வார்த்தைகளுக்கான இணையான ஆங்கில வார்த்தைகள அந்த வரியில சுட்டிக்காட்ட முடியுமா? ஆக, நீங்களும் ஒரு குத்துமதிப்பாத்தான் அந்த வரிகள் உணர்த்தும் கருத்தை எழுதியிருக்கீங்க! இப்படி சில்லறைத்தனமா குத்தம் கண்டுபிடிச்சிக்கிட்டு இருக்குறது உங்களுக்கு வேணுமுன்னா, அழகாவும், பொழுதுபோக்காவும் இருக்கலாம். எனக்கு அதுக்கான நேரமுமில்லை, இப்படிச்சில்லறைத்தனமான விஷயங்களுக்கான களமும் மேலிருப்பானல்ல!
எப்படி எப்படி….”எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தின்படி”…..உங்களுக்குத் தெரிந்த ஆங்கிலம்னா எது? திசாரஸ், ஆக்ஸ்ஃபோர்டு, மெர்ரியம் வெப்ஸ்டர் இதெல்லாம்னு எடுத்துக்கலாமா? ஏம்ப்பா…ஏன்? விட்டா என்னையும், பள்ளிக்கூடத்துல திரும்பவும் படிக்க உக்கார வச்சிடுவே போலிருக்கே நீ? அதனால……
//“துன்பகரமான நிகழ்வுகளுக்கு உட்பட்டு முடிந்துபோவதும் உண்டு” எனும் பொருள்தரும் சொற்றொடர் அவ்வாக்கியத்தில் இல்லை என நான் எனது சிற்றறிவுக்குட்பட்டு நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? //
நான் என்ன நினைக்கிறேன்னா, இப்படியெல்லாம் எனக்கு ஆங்கிலப்பாடம் எடுக்குறத விட்டுட்டு, போய் படிக்கிற வேலையப்பாருங்க. எனக்கு இருக்குற ஆங்கில அறிவு போதுமுன்னுதான், தமிழ் படிக்கிறதுக்காக இந்த வலைத்தளத்தையே ( நேரமேயில்லைன்னாக்கூட) சிரமப்பட்டு எழுதிக்கிட்டு இருக்கேன். என்னையும் இப்படி வெட்டியா (எதிர்வினை) மறுமொழி எழுத வச்சிட்டியே அபராஜிதன்? இனிமே ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்கு ஆதாரமாயில்லாத மறுமொழிகளுக்கு இப்படி பதில் எழுதவும் மாட்டேன், அதற்க்கு அடிப்படையான மறுமொழிகளை பிரசுரிக்கவும் மாட்டேன். சரியா…..? உங்ககிட்ட இருக்குற நேரத்தை சீரிய சிந்தனைகள்ல செலவழிக்க முயற்ச்சி பண்ணுங்க (அதை ஓரளவுக்கு நல்லாவே செய்றீங்க நீங்க), அதைவிட்டுட்டு இந்தக் கிண்டல், நக்கல், நையாண்டியெல்லாம் இங்கே வேணாம். புரியுதா?
padmahari
ஒக்ரோபர் 16, 2010
//உண்மைதான்.. எல்லாரும் இவ்வாறு செய்வதில்லை. ஆனால் பெரும்பாலானோர் செய்கின்றனர்.. //
பெரும்பாலானோர்னா……? உதாரணத்துக்கு, ஒரு புள்ளிவிவரம் சொல்லுங்களேன்?! எங்கேயோ, யாரொ ஒரு சில பேர் செய்யுற தப்புல இருக்குற ஒரு உதாரணத்தை மட்டும் வச்சிக்கிட்டு, ஒட்டுமொத்த ஆய்வுலகத்தையும் இவரு நோகாம குத்தம் சொல்லிட்டும், (பத்தாவது படிக்கும்போதே) முனைவர் பட்டமெல்லாம் வாங்கி, பலவருட ஆய்வு அனுபவமுள்ள ஆய்வாளர்களை அரைவேக்காடுன்னு தரக்குறைவா திட்டிட்டும் போவாராம், நாங்க அதைப் பார்த்துட்டு, அதையும் பிரசுரம் பண்ணி பதிலெழுதனுமாம்?! இது எப்படி இருக்கு?! அய்யா….”அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை…….???
இனிமே ஒன்னைப் புரிஞ்சிக்குங்க, இதுமாதிரியான தரக்குறைவான வார்த்தைப்பிரயோகங்களுள்ள மறுமொழி எழுதினீங்கன்னா, அது நேரா குப்பைத்தொட்டிக்குத்தான் போகும். ஏன்னா, என் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறீங்க நீங்க!!
ஆயிரமே ஆய்வாளர்கள் தவறேகூட செய்திருக்கட்டுமே, அவர்களை அரைவேக்காடு என்று பேசுமளவுக்கு தகுதி முதலில் உங்களுக்கு இருக்கிறதா? அவர்களைவிட அந்த உயிரின் இயங்குதன்மையை மிகச்சரியாக உங்களால் புரிந்துகொள்ள முடியுமா? புரிந்துகொண்டு, ஒரு நல்ல ஆய்வை செய்து, இந்த உலகத் தாவரத்தை (வரும்காலங்களிலேயேகூட) காப்பாற்றிக்காட்டுங்களேன் பார்ப்போம்?! அதற்க்காக அவர்கள் ஒரு உயிருடன் விபரீதமாக விளையாடுவதை சரியென்று வக்காலத்து வாங்க நான் வரவில்லை! எல்லாம் தெரிந்த ஞானியாகேவேகூட இருந்தாலும், நாகரீக அணுகுமுறையும், தன்னடக்கமும் இல்லைன்னா, யாரையுமே ஒரு புழுவைவிட கேவலமாதான் இந்த உலகம் நடத்தும் அதைப் புரிஞ்சிக்குங்க முதல்ல! யாகாவாராயினும்….அப்படீன்னு தொடங்குற ஒரு குறள் இருக்கு! அதை அடிக்கடி நீங்க படிக்கனும் போலிருக்கு?!
//இன்னொன்று, நமது உடலைத் தாக்கி அதில் இனம்பெருக்கும் வைரஸ்கள். நமது மருத்துவ உலகம், சில தசாப்தங்களாக வைரஸ்களின் தாக்கங்களை குறைப்பதற்கு, வைரஸ்களின் இயற்கையை, இயங்குதன்மையை சரியாகப் புரிந்துகொள்ளாமல், அதை மனித நன்மைக்காக, (கட்டுப்பாட்டிற்குள் உள்ளடக்க முயன்று) ஆண்டிபயாட்டிக் மருந்துகள் எனும் விஞ்ஞான முயற்சியொன்றை மேற்கொண்டனர். விளைவு?//
விளைவு என்ன? நீங்களே கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாருஙகளேன் புரியும்! அத்தோட விளைவுதான், அன்னிக்கு ஒன்னுக்கு பத்து தடுப்பூசியா நம்ம அப்பா அம்மா போட்டதுனால, சின்னம்மை உயிர்க்கொல்லி நோய் மாதிரியான நோய்கள் தாக்காம, நான் நோகாம வலைப்பதிவு எழுதிக்கிட்டும், அதுக்கு நீங்க நோகாம மறுமொழி எழுதிக்கிட்டும், இன்னும் நம்ம உறவினர், சுற்றத்தார், மற்றும் இதர உலகத்தார் எல்லாம் உயிரோட இந்த பூமியில சுத்திகிட்டு இருக்கோம்! புரியுதா?!
இப்போ வைரஸ் விஷயத்துக்கு வருவோம்…..
ஆமா, வைரஸ் மாதிரியான “உயிர் மாதிரி ஆனா உயிரல்ல” அப்படீங்கிற வட்டத்துக்குள்ள ஒய்யாரமா இயங்கிகிட்டு இருக்குற ஒரு விஷயத்தை படிக்கிறது என்ன, ஒரு அரசாங்கமும், பல ஆசிரியர்களும் உக்காந்து தொகுத்த ஒரு உயிரியல் புத்தகத்தை, நோகாம படிச்சிட்டு, பள்ளிக்கூடத்துல பாஸ் மார்க் வாங்குறது மாதிரி நெனச்சிட்டீயலோ?! இல்லீங்க சாமீ, என்னோட சிற்றறிவுக்கு எட்டியவரை, வைரஸ் பத்தி நீங்களும் நானும் நோகாம படிச்சிட்டு, இப்படி உக்காந்து மறுமொழியில மேற்கோள் காட்டிட்டுப் போறதுக்கு வசதியா, பல ஆயிர விஞ்ஞானிகளுடைய, சில நூற்றாண்டுகால உழைப்பு, தியாகம், இழப்பு இப்படி பலவகையான செங்கற்களால் கட்டி எழுப்பப்பட்ட ஒரு வைரஸ் கலைக்களஞ்சியம்! ஆனால், நிதர்சனம் என்னன்னா, இன்னும் பல நூற்றாண்டுகாலம் செலவு செஞ்சு, ராப்பகலா ஆய்வு செஞ்சாலும் எந்தக் கொம்பனாலயும், வைரஸ் பத்தின முழுப்புரிதல்பெற முடியாது! ஏன்னா, அது ஒரு புரியாத புதிர். படிக்கிற மனுசனுக்கு பல கோடி வருஷங்களுக்கு முன்னாடி தோன்றின ஒரு மூதாதையர்! .
அதுக்காக, உங்கள மாதிரி உக்காந்துக்கிட்டு, முடிஞ்சா முழுசாப்புரிஞ்சிக்கிட்டு ஆராய்ச்சி பண்ணு, இல்லைன்னா ஊத்தி மூடிட்டு, ஏறக்கட்டிட்டு கெளம்பு காத்து வரட்டும்னு யாரு வேணுமுன்னாலும் சொல்லிக்கிட்டு உக்காந்திருக்கலாம். வைரஸ் ஆய்வாளர்களும் அப்படியே உக்காந்திருந்தாங்கன்னா, உலக மனுசங்க எல்லாரும் செத்த இடத்துல புல் பூண்டெல்லாம் முளைச்சிருக்கும். அதுக்குமேல ரெண்டு வைரஸ் உக்காந்துக்கிட்டு, “இந்த மனுசனுங்க என்னா ஆட்டம் போட்டானுங்க. இப்பப் பாத்தியா, இருந்த இடமே அடையாளம் தெரியாம போய்ட்டானுங்க” அப்படீன்னு பேசிக்கிட்டு இருக்கும்! (இப்பக்கூட அப்படி பேசிக்கிட்டு இருக்கலாம், யாருக்குத்தெரியும்). அதனால, சின்னம்மையை அறவே ஒழிச்சுக்கட்டின மாதிரி, எய்ட்ஸ் மாதிரியான வைரஸ்கள ஒழிச்சுக்கட்ட (அதுங்க திரும்ப திரும்ப வந்தாலும்கூட) தொடர்ந்து ஆராய்ச்சி செஞ்சிக்கிட்டேதான் இருக்கனும், இருக்காங்க…இருப்பாங்க! நீங்களும் இப்படி மறுமொழி எழுதிக்கிட்டே இருங்க……
அதெல்லாஞ்சரி, எனக்கு ஒரு சின்ன ஆசை…..
இவ்வளவு சீரிய சிந்தனையோட பேசுறீங்களே…..,
1. இதுவரையிலான வைரஸ் ஆய்வுகள் முன்வைக்கும், வைரஸ் பத்தின புரிதல்களோட ரத்தினச்சுருக்கமான ஒரு கட்டுரையை எழுதி அனுப்ப முடியுமா?
(அதை அப்படியே இந்த மேலிருப்பான் தளத்துல பிரசுரம் செய்யுறேன் (அது தரமுடையதாய் இருக்கும்பட்சத்தில்!). அப்புறம் இன்னும் விரிவா நாம வைரஸ் பத்தி பேசுவோம். உங்களோட புரிதல அடிப்படையா வச்சி……என்ன சரிதானே?)
(முடிஞ்சா) அதேமாதிரி,
2. ஏன் தாவர, விலங்குகளை வைத்து ஆராய்ச்சி செய்யக்கூடாது?
3. அப்படிச்செய்வதற்க்கு பதிலான மாற்று ஏற்பாடு என்ன?
4. ஓருயிர்–தாவர–விலங்குகளை வைத்து செய்வதாலாகும் பயன்களை தவிர்த்தபின்னும், எப்படி 21 நூற்றாண்டு சுகபோகமான மனிதவாழ்க்கையை வாழ்வது? அதுக்கான பரிந்துரைகள் என்னென்ன?
{இதையெல்லாம் பத்தி ஒரு விளக்கமான கட்டுரையையும் எழுதி அனுப்புங்க (இன்னும் நெறைய இருக்கு, ஆனா அதெல்லாத்தையும் இப்பத்திக்கு விட்டுடுவோம்). மக்களுக்கு உங்களோட பரிந்துரைகளை சொல்லித்தான் பார்ப்போமே, என்ன செய்கிறார்கள் என்று? என்ன…..அனுப்புறீங்களா? அனுப்புங்க முதல்ல, அப்புறம் மத்தத பேசுவோம்……)
ஆனா, சும்மா சொல்லக்கூடாது….உங்களோட சில அழகான புரிதல்கள ரசிச்சு படிச்சேன்! பத்தாம் வகுப்பிலேயே இப்படி ஒரு புரிதல் அழகு….அதுக்கான என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! (முடிஞ்சா) உங்களோட கட்டுரைகளோட மீண்டும் சந்திப்போம். நன்றி (நான் கொஞ்சம் கோபப்பட்டிருக்கலாம், அதுக்கு உங்க அணுமுறைதான் காரணம்!)
Abarajithan
ஒக்ரோபர் 17, 2010
//இப்படி சில்லறைத்தனமா குத்தம் கண்டுபிடிச்சிக்கிட்டு இருக்குறது உங்களுக்கு வேணுமுன்னா, அழகாவும், பொழுதுபோக்காவும் இருக்கலாம். எனக்கு அதுக்கான நேரமுமில்லை, இப்படிச்சில்லறைத்தனமான விஷயங்களுக்கான களமும் மேலிருப்பானல்ல!//
சார். நான் உங்கள் மொழியறிவில் குற்றம் கண்டுபிடிக்கறத்துக்காக அப்படி சொல்லல.. உங்களுடைய கருத்து, கட்டுப்படுத்தப்பட்ட உயிர் மனிதனை மீற முயன்று தோற்கிறது என்பதாகும். நான் சொன்னது, உயிரைக் கட்டுப்படுத்த முயன்று மனிதன் தோற்கிறான் என்பதாகும். (மீண்டும் வாசித்துப்பாருங்கள்)
இதைவிட்டு, ஸ்டெம்செல் ஆராய்ச்சியை ஜப்பானில் முடித்து முனைவர் பட்டம் பெற்று, அறிவியல் வலைப்பதிவுகளை சுடச்சுட தரும் ஒரு ஆராய்ச்சியாளருக்கு ஆங்கில மொழிவளம் இல்லை என்று என்னால் கூறமுடியுமா?
Abarajithan
ஒக்ரோபர் 17, 2010
//ஆய்வு அனுபவமுள்ள ஆய்வாளர்களை அரைவேக்காடுன்னு தரக்குறைவா திட்டிட்டும் போவாராம்//
//அவர்களைவிட அந்த உயிரின் இயங்குதன்மையை மிகச்சரியாக உங்களால் புரிந்துகொள்ள முடியுமா?//
சார். நீங்க மறுபடியும் என்னை தப்பாவே புரிஞ்சுக்கறீங்க.. இதுவரைக்கும் யார்தான் இயற்கையை முழுதாக புரிந்திருக்கிறார்கள்? இயற்பியல் மாமேதை ஐன்ஸ்டைன் கூட அனைத்து விதிகளையும் அடக்கிய கொள்கையொன்றை உருவாக்க முயன்று தோற்றவர்தானே? இவ்வாறு ஒரு உயிரை முழுதாகப் புரிந்து கொள்ளாமல் அதை மாற்றவோ, கட்டுப்படுத்தவோ முனைவது, கத்தியைப் பயன்படுத்தத் தெரியாமல் கையை வெட்டிக்கொள்வது போலாகும்.
இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பாளர்களின் திறமையோடு வெறும் பள்ளிப் பாடப்புத்தகத்திலும் நெட்டிலும் அடுத்தவர் சொன்னதை மட்டுமே தெரிந்து கொள்ளும் மூடனான என்னை ஒப்பிடுவது மகா பாவம். இருந்தாலும், மன்மோகன் சிங்குங்கற ஒரு நாட்டையே ஆளமுடிந்த பிரதமர் லட்சம் லட்சமாக கொள்ளையடிக்கிறார் என்றும், வெளிநாட்டாவரின் பின்னால் செல்கிறார் என்றும் சாதாரண குடிமகன்களான நாம், அவருடைய தவறுகளைப் பற்றி பேசுகிறோமே.. அவரைப் போல நம்மால் ஒரு நாளேனும் பாரத தேசத்தை ஆள முடியுமா? இருந்தும், எவ்வளவு பெரியவர் குற்றம் செய்தாலும் அதைத் தட்டிக் கேட்கும் உரிமை, அக்குற்றத்தால் பாதிக்கப்படுவோருக்கு உண்டு. அவ்வாறுதான் வெறும் பத்தாம் ஆண்டு மாணவனான நானும் உயிரியலாளர்களை தவறென்று சொல்கிறேன்…
//நாகரீக அணுகுமுறையும், தன்னடக்கமும் இல்லைன்னா, யாரையுமே ஒரு புழுவைவிட கேவலமாதான் இந்த உலகம் நடத்தும் அதைப் புரிஞ்சிக்குங்க முதல்ல! யாகாவாராயினும்….அப்படீன்னு தொடங்குற ஒரு குறள் இருக்கு! அதை அடிக்கடி நீங்க படிக்கனும் போலிருக்கு?!//
ஐயா.. ஜெனீவாவில் ஒரு மாபெரும் இயந்திரத்தை வைத்துக்கொண்டு இயற்பியல் அறிஞர்கள் ஆய்வு செய்கிறார்கள். அவ்வியந்திரத்தால் என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது. சிலவேளை உலகமே அழியும் அபாயம் உள்ளது என இயற்பியல் விதிகள் சொல்கின்றன.. இவ்வளவு ஆபத்தான ஆராய்ச்சியை, அதனால் பாதிக்கப்படக் கூடிய உலக மக்களிடம் அனுமதி பெறாமல், தன்னிச்சையாக திட்டமிட்டு நடத்தும் ஆய்வாளர்களுக்கு இல்லாத நாகரிகம் எனக்கு எதற்கு?
அறிவு வளர வளர பண்பும் அடக்கமும் வளர வேண்டும் என திருவள்ளுவரும் நீங்களும் சொல்கிறீர்கள்.. இதுதான் மரியாதையா? இதுதான் பணிவா? ஒரு ஜனநாயக உலகில், ஒரு மாவட்டத்தை ஆளும் கலெக்டரைக் கூட ஆயிரம் பேரிடம் அனுமதி வாங்கி தேர்வு செய்யும் உலகில், உலகையே அழிக்கும் என நம்பப்படுகின்ற உயிரியல், இயற்பியல் ஆய்வுகளை தன்னிச்சையாக செய்யும் விஞ்ஞானிகளை விட நான் பண்பில், பணிவில் குறைந்தவனல்ல என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.
padmahari
ஒக்ரோபர் 27, 2010
//இருந்தாலும், மன்மோகன் சிங்குங்கற ஒரு நாட்டையே ஆளமுடிந்த பிரதமர் லட்சம் லட்சமாக கொள்ளையடிக்கிறார் என்றும், வெளிநாட்டாவரின் பின்னால் செல்கிறார் என்றும் சாதாரண குடிமகன்களான நாம், அவருடைய தவறுகளைப் பற்றி பேசுகிறோமே.. அவரைப் போல நம்மால் ஒரு நாளேனும் பாரத தேசத்தை ஆள முடியுமா? இருந்தும், எவ்வளவு பெரியவர் குற்றம் செய்தாலும் அதைத் தட்டிக் கேட்கும் உரிமை, அக்குற்றத்தால் பாதிக்கப்படுவோருக்கு உண்டு. அவ்வாறுதான் வெறும் பத்தாம் ஆண்டு மாணவனான நானும் உயிரியலாளர்களை தவறென்று சொல்கிறேன்…//
சில வருடங்கள் ஒரு நாட்டை ஆளும், (அதுவும் தலையாட்டி பொம்மைபோன்ற?) ஒரு நாட்டின் பிரதமரும், தன் வாழ்நாளையே உயிர்களின் இயங்குதன்மையை புரிந்துகொள்ள அர்ப்பணிக்கும் விஞ்ஞானிகள்/உயிரியலாளர்களும் ஒப்பிடக்கூடியவர்களா? அந்த ஒப்புமை ஏற்புடையதா? இல்லை என்பதே என் வாதம்!!
Abarajithan
ஒக்ரோபர் 17, 2010
// வைரஸ் பத்தின முழுப்புரிதல்பெற முடியாது! ஏன்னா, அது ஒரு புரியாத புதிர். படிக்கிற மனுசனுக்கு பல கோடி வருஷங்களுக்கு முன்னாடி தோன்றின ஒரு மூதாதையர்!//
அப்படி வயதிலும் அனுபவத்திலும் மூத்த ஒரு மூதாதையரை சிறியோரான நாம் கட்டுப்படுத்த முடியுமா?
//வைரஸ் ஆய்வாளர்களும் அப்படியே உக்காந்திருந்தாங்கன்னா, உலக மனுசங்க எல்லாரும் செத்த இடத்துல புல் பூண்டெல்லாம் முளைச்சிருக்கும். //
சரி, சிம்பன்சிகளுக்கும் மனிதனுக்கும் உள்ள ஒரு வித்தியாசம் மூளைத்திறன். மனிதனுக்கு மூளையை விட்டால் சொல்லிக்கொள்ளும்படியாக உறுப்பு ஏதுமில்லை.. தற்காப்புக்கும் மூளைப் பலனைத் தவிர வேறொன்றுமில்லை.. மனிதனுக்கு வரும் சவால்கள் அனைத்தையும் மூளையை வைத்தே சமாளிக்கிறோம். ஆனால் அந்த மூளைத்திறன் கூட இல்லாத சிம்பன்சிகள் எதை வைத்து தம்மை தற்காத்துக்கொள்கின்றன? ஆண்டிவைரஸ்கள் பயன்படுத்தாமலே அவற்றின் சமாதியில் புல் முளைக்கவில்லையே?
மனிதனுக்கு வியாதிகள் அதிகம் பரவக் காரணம், நமது சனத்தொகையும் ஜனத்தொகை நெருக்கடியும்தான்.. ஜனத்தொகை குறையும்போது வைரஸ்களின் பாதிப்புக்களும் குறைந்துவிடும்..
//“இந்த மனுசனுங்க என்னா ஆட்டம் போட்டானுங்க. இப்பப் பாத்தியா, இருந்த இடமே அடையாளம் தெரியாம போய்ட்டானுங்க” அப்படீன்னு பேசிக்கிட்டு இருக்கும்! //
ஆய்வாளர்கள் எவ்வளவு செய்தும், இதுதான் நடக்கப் போகிறது (ஜனத்தொகையைக் குறைக்காவிடின்).
padmahari
ஒக்ரோபர் 27, 2010
//அப்படி வயதிலும் அனுபவத்திலும் மூத்த ஒரு மூதாதையரை சிறியோரான நாம் கட்டுப்படுத்த முடியுமா?//
அதுக்காக தேமேன்னு உக்காந்துக்கிட்டு இருந்துட்டு, உலக வாழ்க்கையை ஒரு வைரஸுக்கிட்ட இழந்துட்டு சாக முடியாது தம்பி……
//சிம்பன்சிகளுக்கும் மனிதனுக்கும் உள்ள ஒரு வித்தியாசம் மூளைத்திறன். மனிதனுக்கு மூளையை விட்டால் சொல்லிக்கொள்ளும்படியாக உறுப்பு ஏதுமில்லை.. தற்காப்புக்கும் மூளைப் பலனைத் தவிர வேறொன்றுமில்லை.. மனிதனுக்கு வரும் சவால்கள் அனைத்தையும் மூளையை வைத்தே சமாளிக்கிறோம். ஆனால் அந்த மூளைத்திறன் கூட இல்லாத சிம்பன்சிகள் எதை வைத்து தம்மை தற்காத்துக்கொள்கின்றன? ஆண்டிவைரஸ்கள் பயன்படுத்தாமலே அவற்றின் சமாதியில் புல் முளைக்கவில்லையே?//
சிம்பன்சிகள் எதிர்கொள்ளும் வைரஸ்களும் மனிதர்கள் எதிர்கொள்ளும் வைரஸ்களும் முற்றிலும் ஒன்றானவையல்ல! அவற்றில் இருக்கும் இடம், வாழ்வியல் முறை, பிற உயிர்களுடனான உறவு (இன்னும் சில….) ஆகிய பல்வேறு காரணங்களைப் பொறுத்து வைரஸ் தாக்குதல் மாறுபடும். அதனால், மனிதர்களையும் சிம்பன்சிகளையும் இங்கே ஒப்பிடுவது ஏற்புடையதாகாது!
Abarajithan
ஒக்ரோபர் 17, 2010
உங்கள் முதல் மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில்தான்.
முடியாது..
ஏனெனில், என்னுடைய துறை உயிரியல் இல்லை. எட்டாம் வகுப்பில் கடைசி இடம் எடுக்கும் மாணவன், பாடப்புத்தகத்தில் மனப்பாடம் செய்த தகவல்களில் கணிசமானவை எனக்குத் தெரியாது. ஆனால் உயிரியலின் அடிநாதம் எனக்கு ஓரளவு வாசிப்பு மூலம் தெரியும். அதுதான் பரிணாமம். பரிணாமத்தின் சில விதிகளையும், கண்டுபிடிப்புக்களையும் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். பல படைப்புவாத நண்பர்களுடனும் விவாதித்திருக்கிறேன்.. அவ்வளவுதான்..
என்னுடைய துறைகள் கொள்கைரீதியான இயற்பியலும், தகவல் தொழில்நுட்பமும் தான். (தகவல் தொழிநுட்பம் பூமியை மாசுபடுத்துகிறது என உணர்கிறேன். ஆனால் எனது ஆழ்மனதிற்கு அது பிடித்திருக்கின்றது. புறமனதிற்குப் பிடிக்கவில்லை. ஆழ்மனது லாஜிக் பார்ப்பதில்லை அல்லவா?) இயற்பியலில் தூரம் நேரம் பொருள் விசை சக்தி பற்றியெல்லாம் படித்திருக்கிறேன். இணையத்திலும் பலருடன் விவாதித்திருக்கிறேன்.. (ஆனால் ஒரு விஞ்ஞானி அளவிற்கு அறிவு துளியும் இல்லை) இயற்பியல் கடவுள் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்-ஐயே குருவாக நினைத்து வருகிறேன்!
4.தவிர்க்க வேண்டியதில்லை.. ஜனத்தொகையைக் குறைத்தால் போதும். பிரச்சினைகள் குறைய, தீர்வுக்கான தேடல்களும் குறையும் அல்லவா?
//ஆனா, சும்மா சொல்லக்கூடாது….உங்களோட சில அழகான புரிதல்கள ரசிச்சு படிச்சேன்! பத்தாம் வகுப்பிலேயே இப்படி ஒரு புரிதல் அழகு….அதுக்கான என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! (முடிஞ்சா) உங்களோட கட்டுரைகளோட மீண்டும் சந்திப்போம். நன்றி (நான் கொஞ்சம் கோபப்பட்டிருக்கலாம், அதுக்கு உங்க அணுமுறைதான் காரணம்!)//
மிக்க நன்றி. வசிஷ்டர் கையால பிரம்மரிஷின்னு சொல்லுவாங்களே அது மாதிரி இருக்கு. (ஆனா நான் விஸ்வாமித்திரர் அளவு பெரிய ஆள் இல்லை) கட்டுரை மட்டும் முடியாத காரியம். ஆனால் நான் வலைக்கு வந்தபின் எனது இயற்பியல், தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகளையும் உயிரியலில் பரிணாமம் சார்பான கட்டுரைகளையும், கடவுள் மற்றும் மதம் தொடர்பான புரிதல்களையும் காணலாம்..
உங்களைக் கோபப்படுத்துவது எனது நோக்கமல்ல, ஆனால் உயிரியலாளர்கள் தொடர்பான எனது புரிதல்களைக் கொட்ட இது ஒரு நல்ல களமாக அமைந்தது. என்னையும் மதித்து விவாத்தித்ததற்கு மிக்க நன்றி..
padmahari
ஒக்ரோபர் 27, 2010
//வசிஷ்டர் கையால பிரம்மரிஷின்னு சொல்லுவாங்களே அது மாதிரி இருக்கு.//
அவ்ளோ சீன் எனக்கும் சத்தியமா இல்ல!
//ஆனால் நான் வலைக்கு வந்தபின் எனது இயற்பியல், தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகளையும் உயிரியலில் பரிணாமம் சார்பான கட்டுரைகளையும், கடவுள் மற்றும் மதம் தொடர்பான புரிதல்களையும் காணலாம்.. உங்களைக் கோபப்படுத்துவது எனது நோக்கமல்ல, ஆனால் உயிரியலாளர்கள் தொடர்பான எனது புரிதல்களைக் கொட்ட இது ஒரு நல்ல களமாக அமைந்தது. என்னையும் மதித்து விவாத்தித்ததற்கு மிக்க நன்றி..//
வரவேற்கிறேன். உங்களுடனான கேள்விகளை முன்வைத்த என் விவாதத்தின் ஒரு நோக்கம் இதுவே…. 🙂
Abarajithan
ஒக்ரோபர் 15, 2010
//இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், ஒட்டுமொத்த உயிரியல் ஆய்வுலகமும் இப்படித்தான் என்று சொல்வதும் தவறு, அதற்க்கான ஆதாரங்களும் இல்லை! (இருந்தால் குறிப்பிடுங்கள் தெரிந்துகொள்வோம்). ஆனால், சில விஞ்ஞானிகள்/ஆய்வாளர்களின் அணுகுமுறை வேண்டுமானால் இப்படி இருக்கலாம். அது விதிவிலக்கு, மாற்ற முயற்ச்சிக்கலாம்.//
முழுமையாக இல்லை.. நான் குறிப்பிட்ட தமிழ் பேப்பர் கட்டுரையிலேயே சில நல்ல உயிரியலாலர்களின் வரலாறு காணப்படுகின்றது.
http://www.tamilpaper.net/?p=471
ஆனால் பெரும்பாலான உயிரியலாளர்கள் இப்படித்தான் என நான் அடித்துக் கூறுகின்றேன். (உதாரணம்: நம்ம ஜி.எம். சகாக்கள்)
// மாறாக (என் புரிதலின்படி), இயற்கையின் அடிப்படையை பல நூற்றாண்டுகால ஆய்வினடிப்படையில் கற்றுணர்ந்து, தவறு செய்து பின் திருத்தம் செய்து, //
ஆனால்.. தவறு செய்து பின் திருத்தம் செய்வதற்கு இயற்கை ஒன்றும் ஆய்வுக்கூட அப்பாவி எலியல்ல… இங்கு தவறுக்கு பல காலம் கழித்தாவது கண்டிப்பாக தண்டனை கிடைத்தே தீரும். (நாம் தவறுகளை சரிசெய்ய முற்பட்டாலும், அதற்குள் எமது தவறு, நாம் அறியாத பல்வேறு பரிமாணங்களைப் பெற்று இயற்கையின் மற்ற கூறுகளையும் குழப்பிவிடுகிறது. நாமோ, அடிப்படைத் தவறை சரிசெய்துவிட்டு, பிரதான பின்விளைவு வெற்றிகரமாக நீங்கியதும், தவறி திருத்தி விட்டோம் எனக் கூறிக்கொள்கிறோம்.
//படிப்படியாக வளர்ந்து, இயற்கையை மனிதகுல மேம்பாட்டுக்காக,//
இங்கு மனிதகுல மேம்பாடு எனும் சுயநல நோக்கிலேயே சிந்திப்பதால்தான் இங்கு இயற்கை சீர்கெடுகின்றது.
// நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட கட்டுப்பாடுகளுக்குட்பட்டு, பயன்படுத்தி வெற்றிகாண்பதே விஞ்ஞானம் (உயிரியலாளர்களின் ஆய்வு)//
இங்கு.. இயற்கையைக் கட்டுப்படுத்தி வெற்றி காண்பதுதான் விஞ்ஞானம் எனில், மனிதகுலம் என்றுமே விஞ்ஞானிகளை உருவாக்க முடியாது.
Abarajithan
ஒக்ரோபர் 15, 2010
//ஒரு பள்ளி மாணவப்பருவத்துக்கேயுறிய (premature conclusion) அவசர முடிவுக்கு வரும் தன்மை உங்கள் மறுமொழியில் தெளிவாகத்தெரிகிறது! //
ஹிஹி.. உண்மைதான் சார். நான் எழுதி முடித்து பப்ளிஷ் பண்ணதுக்கப்புறம் வாசிச்சுப் பாத்தா எனக்கும் அப்பிடித்தான் தோணுது..
//திரு. க்ரீகர் ஜொஹான் மெண்டல் அவர்கள் தன் புரிதலுக்கேற்ப பட்டானிப்பயிர்களை இனப்பெருக்கம் செய்து, பல்வேறு ஆய்வுகளை செய்யாமலிருந்திருந்தால், இன்று இந்த உலகம் “மரபனுக்கள்/டி.என்.ஏ” எனும் மைல்கல்/அற்புதத்தைக் கண்டுபிடித்து, மனிதனை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த சின்னம்மை உள்ளிட்ட நோய்களை வேரறுத்திருக்கவோ, மரபனுக்கோளாறுகளால் உயிரிழக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் உயிரை, ஜீன்தெரபி என்னும் உயிரியல் மந்திரக்கோலுடன் மீட்டுத்தந்திருக்கவோ முடியாது என்பதை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்!//
இதுதான் சார், உங்களுக்கும் எனக்குமுள்ள வித்தியாசம். நீங்க மனிதகுல முன்னேற்றத்திக்கு விஞ்ஞானம் அவசியம் அப்படிங்கறீங்க.. நானோ பூமியையும் பிற உயிர்களையும் முன்னிலைப்படுத்தி அவற்றைக் காக்க இவ்வாறான ஆய்வுகளை தடைசெய்யுங்கள் என்கிறேன்..
உலகில் ஆயிரக்கணக்கில் மக்கள் சாவதைப் பற்றிச் சிந்திக்கும் நீங்கள், கோடிக்கணக்கில் உயிரினங்கள் விஞ்ஞானத்தால் சாவதை நினைப்பதில்லையே. ஏனெனில், (எனது கருத்துப்படி) நீங்கள் வெளியில், மனிதனும் ஒரு விலங்குதான் என்பதை ஒத்துக்கொண்டாலும் உங்கள் அடிமனம் இதை ஏற்பதில்லை.. கடவுளின் படைப்பின் உச்சமே மனிதன் எனவும், பிற உயிர்கள் யாவும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டன எனக்கூறும் ஆபிரகாமியக் கொள்கையையே நீங்கள் அடிமனதால் ஏற்றுக் கொள்கிறீர்கள் என நான் நினைக்கிறேன். (இதுவும் என் (premature conclusion) ஆக இருக்கலாம். ஆனால் நான் என் கருத்துக்களை சொல்லத் தயங்குவதில்லை.. தவறுகள் இருந்தால் மன்னித்து திருத்தவும்)
நீங்கள் ஒரு இந்து என நினைக்கிறேன். எனில், உலகின் மறுகோடியில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதை, நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இந்தியனான நீங்கள், இலங்கையில் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதை ஆதரித்தீர்களா? இல்லைதானே?
எனில், சக நாட்டவருக்கும், சக மதத்தவருக்கும் நீங்கள் காட்டும் கருணையும், மதிப்பும், அபிமானமும் ஏன் சக இனங்களான விலங்குகளிடம் காட்டுவது இல்லை? நாசிக்கள் யூதர்கள் மீது அவர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொடூரமாக ஆய்வுகள் செய்ததை கேட்கும்போது உங்கள் நெஞ்சம் துடிக்காதா? யூதர்களுக்கு இருந்த அதே வலிதானே ஆய்வுக்கூட எலிகளுக்கும் சிம்பன்சிகளுக்கும்?! விலங்குகளால் தெளிவாகச் சிந்திக்க முடியாத காரணத்தினாலேயே அவை ஜடங்கள் ஆகிவிடுமா? உண்மையில், தாங்கள் ஏன் எதற்கு கொல்லப்படுகின்றோம் எனத் தெரிந்து சாகும் யூதர்களை விட, தெரியாமல், கத்த முடியாமல், உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் சாகும் எலிகளும் சிம்பன்சிக்களும்தான் அதிக வலியை அனுபவிக்கின்றன.
//சில விஞ்ஞான முயற்ச்சிகளில் ஆபத்தும், பின்னடைவும் இருக்கவே செய்யும், அவற்றின் பாதிப்புகளின் அளவையும், அவற்றால் ஏற்படும் நன்மைகளின் அளவையும் கணக்கிட்டு, நன்மைகள் அதிகமிருப்பின், முயற்ச்சிகளை மேற்கொள்வதே ஆரோக்கியமான விஞ்ஞானம். //
நன்மைகளின் அளவு என்கிறீர்களே.. யாருக்கு நன்மை? மனிதனுக்கா? இயற்கைக்கா?
//அதைவிடுத்து, இயற்கையை பயன்படுத்துவது தவறென்று தூங்கிக்கொண்டிருந்தால், பதிவின் தொடக்கத்தில் சொல்லியது போல மீண்டும் கற்கால வாழ்க்கைக்கே திரும்ப வேண்டியதுதான்! வாழ்க்கையின் அடுத்த தளத்துக்கு முன்னேறுவதே பரிணாமத்தின் அடிநாதம்! //
உண்மைதான், கத்தியை பாவிக்கத் தெரியாவிட்டால் அதை வைத்துவிடுவதே நல்லது, அதை தவறாகப் பயன்படுத்தி உயிரைப் போக்குவது முட்டாள்த்தனமானது. அதுபோல இயற்கைப் பாதிக்காமல் அதை பயன்படுத்த தெரியாவிட்டால்.. மீண்டும் கற்கால வாழ்வுக்குத் திரும்புவது உசிதம்.. பரிணாமத்தில் முன்னேற, நாம் நமக்கு வரும் சவால்களை உரிய வழியில் தடுத்து முன்னேறுவதே சரி. அதை விட்டுவிட்டு நாம் சவால்களைத் தேடிப் போய் தீர்ப்பது இயற்கைக்கு எதிரானது.
இந்தப் பின்னூட்டங்களை நான் சிறிது கோபத்துடன்தான் எழுதினேன். (நான் ஒரு தீவிர ப்ளூ க்ராஸ் ஆளு) எனவே ஏதாவது மரியாதை குறைவாகப் எழுதியிருந்தாலோ அல்லது உங்களது மனது புண்படும்படியாக எழுதியிருந்தாலோ என்னைத் தயவு செய்து மன்னியுங்கள்…
padmahari
ஒக்ரோபர் 15, 2010
//இதுதான் சார், உங்களுக்கும் எனக்குமுள்ள வித்தியாசம். நீங்க மனிதகுல முன்னேற்றத்திக்கு விஞ்ஞானம் அவசியம் அப்படிங்கறீங்க.. நானோ பூமியையும் பிற உயிர்களையும் முன்னிலைப்படுத்தி அவற்றைக் காக்க இவ்வாறான ஆய்வுகளை தடைசெய்யுங்கள் என்கிறேன்..//
நம்ம ரெண்டுபேரோட விவாதம் எல்லாமே இந்த ஒரு வித்தியாசத்தைச் சுத்தித்தான்னு (உங்ககூட விவாதம் செய்ய ஆரம்பிச்ச முதல் பதிவு முதல் இதுவரைக்கும்) தெரிஞ்சிதான் நான் விவாதமே செஞ்சுகிட்டு இருக்கேன். இங்கே ஒரு அடிப்படை விஷயத்தை நீங்க ஏத்துக்க மறுக்குறீங்கன்னு நான் நெனக்கிறேன்?! அதாவது, “பூமியையும் பிற உயிர்களையும் முன்னிலைப்படுத்தி” நீங்க யோசிக்க ஆரம்பிச்சீங்கன்னா, நீங்க காலையில எந்திரிச்சது முதல் இரவு உறங்கச்செல்லும்வரையிலான பல விஷயங்களை தலைகீழா மாத்திக்க வேண்டிவரும். {உதாரணமா, நீங்க உங்க தினசரி வாழ்க்கையில பயன்படுத்துற இயற்கை சாராத, இயற்கைக்கு எதிரான, இயற்கையை பாதிக்கிற, இயற்கைச் சமநிலையை ஏதோ ஒருவகையில் (சில சமயங்களில் irreversible-ஆக) பாதிக்கக்கூடிய பல பொருட்களை தவிர்க்க வேண்டும்). அதுக்கு நீங்க தயாரா? ரைட்டு…. நீங்க ப்ளூ க்ராஸ் ஆளுங்கிறதால பரவாயில்லப்பா. சரின்னுகூட பல்லைக்கடிச்சிக்கிட்டு மாத்திக்கிறீங்கன்னு வச்சிக்குவோம்! மத்தவங்களப் பத்தி கொஞ்சம் யோசிங்க. அவ்வளவு ஏங்க, உங்க குடும்பத்தாரோட அணுகுமுறையை முதல்ல உங்களால மாத்த முடியுமா? சரி, உங்களோட குடும்பம், சுற்றம், நட்பு இவர்கள்ல எத்தனைபேரு ப்ளூ க்ராஸ் எண்ணங்கள் உடையவர்கள்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?
இங்கெ இன்னொரு விஷயத்தையும் நீங்க புரிஞ்சிக்கனும். நான் Human/Mankind centered-ஆன ஆளுன்னு நீங்க நெனக்கிறீங்க, அதனால அப்படியொரு ஆளாவே என்னை பாவிச்சு, சித்தரிக்கவும் ஆரம்பிச்சிட்டீங்க. (அதுக்காக நீங்க கோபத்தோட எழுதின மாதிரி நானும் எழுதுறேன்னு சொல்ல வரல. ஏன்னா, அப்படிக் கோபப்பட்டா உங்க மறுமொழிய குப்பைத்தொட்டியில போட்டுட்டு, அலட்டிக்காம போய்க்கிட்டே இருப்பேன்!) நானும் அடிப்படையில ப்ளூ க்ராஸ் ஆளுதான். ஆனா, உலகத்தோட நிதர்சனம், யதார்த்தத்தை யாரும் மறைக்கவோ, மறுக்கவோமுடியாதுன்னு உங்களுக்கும் தெரியும்னு நான் நம்புறேன். உதாரணமா, சுயநலம், இனவெறி, கொலைவெறி, பெண்-பொன் பற்று, காமம், க்ரோதம், வக்கிரம் இப்படி எத்தனையோ காரணங்களினடிப்படையில், சக மனிதர்களையே கொன்று குவித்து (இலங்கை ஒரு நெருங்கிய உதாரணம்!) கூச்சப்படாம, உலக அரங்குல நானும் ரவுடிதாங்கிற மாதிரி, ரொம்ப நல்லவனா காட்டிக்கிற எத்தனை நாடுகளையும்/நாட்டவர்களையும் தினசரிகள்ல பார்க்குறீங்க? இப்படிப்பட்ட சக இனமான மனிதருக்குள்ளேயே பல்வேறு காரணங்களைக் காட்டி வேற்றுமை பாராட்டும்/அழிக்கத்துடிக்கும் உலகத்தவரை எப்படிங்க இயற்க்கைச் சமநிலையை, இயற்கையை/தாவர-விலங்குகளைக் காக்க திசைதிருப்பப் போறீங்க? கொஞ்சம் சொல்லுங்க….(அப்படியே நீங்க உங்க முயற்ச்சியில வெற்றியே கண்டாலும், அப்போ நிங்களும், நானும் (மனித இனம்) அழிந்தே போகும்!)
அதுக்காக இப்படியே மனிதனை முன்னிலைப்படுத்தியே இருக்குறதுதான் சரின்னு நான் வாதாடுறேன்னு முடிவுபண்ணிடாதீங்க! பல நூற்றாண்டுகளாக இப்படியே வாழ்ந்து பழகிட்ட, மாற முயலாத மனித மனங்களை முதலில் மாற்ற வேண்டும். பின் அவர்களின் செயல்களை! அது அவ்வளவு சுலபமல்ல, அதனால வாழ்க்கைமுறை மாற்றங்களை சிறுக சிறுக ஏற்படுத்திக்கொண்டு, படிபடியாகத்தான் முயற்ச்சிக்கனும். அதுக்கான ஆயத்தங்கள் உலகுதழுவிய ஆயத்தங்களா இருக்கனும். இலங்கை அபராஜிதனும், இந்திய ஹரியும் வாதிட்டா மட்டும் போதாது. இப்படி இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். நீங்க சொன்ன அதே நேரம், இடம், பொருள் ஏவல் இப்படி பல காரணங்களுக்காக இப்பத்திக்கு நான் முடிச்சிக்கிறேன்.
Abarajithan
ஒக்ரோபர் 16, 2010
எதையும் அவ்வளவு எளிதாக மாற்ற முடியாதென்பது உண்மைதான்.. ஆனால் எதையும் மாற்றாமலே, உலக ஜனத்தொகையை சடுதியாகக் குறைத்தல் மூலம் இயற்கையால் சமாளிக்கக்கூடிய அளவு தொல்லையை மட்டும் கொடுக்க முயற்சிக்கலாம்.. இல்லையா?
padmahari
ஒக்ரோபர் 16, 2010
//எதையும் அவ்வளவு எளிதாக மாற்ற முடியாதென்பது உண்மைதான்.. //
ஆங்…..இப்படிச்சொல்லி மழுப்பிட்டா எப்படி? நான் கேட்டிருந்த சில கேள்விகளுக்கு ஒரு பதிலையும் காணோம், சீரிய சிந்தனையாளர் அபராஜிதனமிருந்து? பதில் சொல்லலையின்னா நாங்க விடமாட்டோமுல்ல….. 😉
1. “பூமியையும் பிற உயிர்களையும் முன்னிலைப்படுத்தி” நீங்க யோசிக்க ஆரம்பிச்சீங்கன்னா, நீங்க காலையில எந்திரிச்சது முதல் இரவு உறங்கச்செல்லும்வரையிலான பல விஷயங்களை தலைகீழா மாத்திக்க வேண்டிவரும். {உதாரணமா, நீங்க உங்க தினசரி வாழ்க்கையில பயன்படுத்துற இயற்கை சாராத, இயற்கைக்கு எதிரான, இயற்கையை பாதிக்கிற, இயற்கைச் சமநிலையை ஏதோ ஒருவகையில் (சில சமயங்களில் irreversible-ஆக) பாதிக்கக்கூடிய பல பொருட்களை தவிர்க்க வேண்டும்). அதுக்கு நீங்க தயாரா?
2. உங்க குடும்பத்தாரோட அணுகுமுறையை முதல்ல உங்களால மாத்த முடியுமா? சரி, உங்களோட குடும்பம், சுற்றம், நட்பு இவர்கள்ல எத்தனைபேரு ப்ளூ க்ராஸ் எண்ணங்கள் உடையவர்கள்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?
3. சக இனமான மனிதருக்குள்ளேயே பல்வேறு காரணங்களைக் காட்டி வேற்றுமை பாராட்டும்/அழிக்கத்துடிக்கும் உலகத்தவரை எப்படிங்க இயற்க்கைச் சமநிலையை, இயற்கையை/தாவர-விலங்குகளைக் காக்க திசைதிருப்பப் போறீங்க? கொஞ்சம் சொல்லுங்க….
4. மனித இனமும், அவற்றுடன் பிற இனமும் அழிவதுதான் இயற்கை, அப்படித்தான் நிகழவேண்டும் என்றால் அதை ஏற்றுக்கொள்பவர்கள் எத்தனைபேர்? அவர்களுக்கு வாழ உரிமையில்லையா?
5. ஒரு துறையினால் ஏற்பட்ட பாதகங்களை மட்டுமே ஊதிப்பெரியதாக்கி, பூதாகரமான விளைவுகளை முன்னிலைப்படுத்தி விஞ்ஞானம்/நவீன ஆய்வுகள் வேண்டாமென்று வாதிடுவது! ஏன் இப்படி?
எனக்கு போதிய இருக்குமேயானால், இன்னும் எண்ணற்ற கேள்விகளை உங்கள் முன் வைக்க என்னால் (மட்டுமல்ல, அறிவியல் கற்ற பலராலும்) இயலும். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் மாற முயலாதவரை அப்படி எழுதுவதில் பயனேதும் பெரிதாக இல்லை என்பதே உண்மை நிலை?! அதுமட்டுமில்லாம, வாய்ப்பேச்சு வீரர்களே இந்த உலகில் அதிகம். மன உறுதியுடன் இறங்கி களப்பணியாற்றும் களப்பணியாளர்கள்தான் குறைவு!
1. இவ்வளவு கேள்விகளை சீரிய சிந்தனையுடன் மாங்கு மாங்கென்று எழுதிக்கேட்கும் நண்பர் அபராஜிதன், இயற்கைக்கெதிரான செயல்பாடுகளையும், செயல்படுபவர்களையும் எதிர்த்து, ஒரு மாணவர்க்குழுவை அமைத்து வீதியில் போராடலாமே? போராடுவாரா?
2. இயற்கைவழி வாழ்க்கைமுறையை அமைத்துக்கொண்டு, மரம், தாவர-விலங்கு அழிவை எதிர்த்து ஒரு மாணவப்பேரனியை நடத்தி, மற்ற மாணவர்களுக்கும், இனிவரும் சந்ததியினருக்கும் ஒரு உலக அழிவு/இயற்கை சமநிலைக்கேடு ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே? செய்வீர்களா?
பிறரை மட்டப்படுத்தி பேசுவது மிகச்சுலபம். ஆனால், இந்த உலக நன்மைக்கு ஒரு பங்களிப்பை (நம் வாழ்வியல் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு) செய்வது மிக மிகக் கடினம். அதனால், பல்வேறு ஆய்வுகளால், இந்த உலகம் இதுவரை கண்ட நன்மைகளையும் கருத்தில்கொண்டு பேசுவது மிகவும் அவசியம். அதை பரந்தவிரிந்த பார்வையோடு பார்க்க வேண்டியதும் அவசியம்! அதனால, மத்தவங்கள குத்தம் சொல்றதுக்கு முன்னாடி, நாம ஏதாவது (செயல்வடிவத்துல) இந்த உலக நன்மைக்காக செஞ்சிருக்கோமான்னு நம்மல நாமே கேட்டுப்பார்த்துக்கனும்! என்ன சரிதானே?
மேலே குறிப்பிட்டுள்ளவை விதண்டாவாதம் என சிலர் எண்ணக்கூடும். கண்டிப்பாக இல்லை! நான் கூறிய அனைத்தும் சாத்தியமே. நாம் மனது வைத்தால்! இந்தியா திரும்பியபின், மேற்க்குறிப்பிட்டக் கருத்துக்களையொத்த சில முயற்ச்சிகளை மேற்கொள்ளும் எண்ணம் எனக்கு இருக்கிறது! காலமும், எதிர்கால வாழ்க்கையும், வாய்ப்பை வழங்குமா, தட்டிப்பறிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
Abarajithan
ஒக்ரோபர் 17, 2010
// சீரிய சிந்தனையாளர் அபராஜிதனமிருந்து? பதில் சொல்லலையின்னா நாங்க விடமாட்டோமுல்ல…..//
அதானே சொல்லிட்டாப் போச்சு..
1.2.3. இது எதையும் நான் செய்யப் போறதில்ல.. ஏன்னா, இவ்வளவு பேசுற எனக்கே, காலைல எழுந்ததும் Oral-B யும் Colgate உம் கேக்குது. நைட்டு இன்டர்நெட் பாக்கலன்னா தூக்கம் வர மாட்டேங்குது. எனவே.. இதுங்கள மாத்திக்க முடியாதுதான். ஒத்துக்கறேன்..
ஆனா, ஜனத்தொகையைக் குறைக்கறது மூலமா நாம செய்யுற தீய விளைவுகளின் பாதிப்புக்களை குறைக்க முயலலாமே? (இயற்கை ஒரு அற்புதமான விஞ்ஞானி. நமது தவறிற்கும் சேர்த்து அதனால் பிராயச்சித்தம் தேட முடியும்) அப்படிக் குறைக்கறது மூலமா, இயற்கை கொஞ்சம் எளிதாக எங்களது தவறுகளையும் சேர்த்து சரி செய்யப் பழகிக்கொள்ளும் இல்லையா?
எனவே, ஜனத்தொகையைக் குறைக்கறதுக்கு நீங்களும், நானும் இயன்றவரை உதவலாம். (அது எப்படிங்கறது எல்லார்க்கும் தெரிஞ்சிருக்கும்) , ஜனத்தொகையைக் குறைத்தால் மீதி எல்லாம் தானாகவே சரியாகும் என நான் முன்னமே சொல்லியிருக்கேன்.
4.5.தொழில்நுட்ப ஆய்வுகள் மூலமாக நாம் தற்காலிகமாக மனித இனத்தைக் காத்து, புவியை அழித்து வருகின்றோம். தொடர்ந்து நாம் இவ்வாறு செய்யமுடியாது.. தொழில்நுட்பம் இல்லாவிடின் மனிதன் இறந்த இடத்தில் புள் பூண்டுதான் முளைக்கும் எனக்கூறும் நீங்கள், தொழில்நுட்பத்தால் புவியை அழித்துவிட்டு, ஸ்டார் வார்ஸ் படத்தில் வருவது போல ஸ்பேஸ் ஷிப்புக்களில் பயணிக்க வேண்டும் என்கிறீர்களா? அப்படி, சுவாசிக்க சுத்தமான காற்று இல்லாமல், கண்ணுக்கு குளிர்ச்சியாக இயற்கைக் காட்சிகள் இல்லாமல், ஓடிப்பிடித்து விளையாட புற்தரை இல்லாமல், ஆசையோடு தூக்கிக் கொஞ்ச நாய் பூனைகள் இல்லாமல், சிறிது பயத்தோடு தூரத்தே பார்த்து ரசிக்க சிங்கங்கள் புலிகள் இல்லாமல், காலையில் அலாரமாக வந்தெழுப்பும் சூரியன் உதிக்காமல், விதம விதமாகச் சாப்பிட காய்கறிகள் இல்லாமல், வெறும் ஊட்டச்சத்து அடங்கிய பேஸ்ட்டை மென்று கொண்டும் தான் மனித இனம் வாழவேண்டுமென்றால் அதைவிட, கற்கால வாழ்வில் சந்தோஷமாக இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ்ந்து வைரஸிற்கு மடிவதே மேல் என்பது மனித இனத்திற்கு எதிர்காலத்தில் தெரியும்.
மீண்டும் சொல்கிறேன். இதற்கு ஒரே வழி ஜனத்தொகையைக் குறைப்பதுதான்.
padmahari
ஒக்ரோபர் 27, 2010
//1.2.3. இது எதையும் நான் செய்யப் போறதில்ல.. ஏன்னா, இவ்வளவு பேசுற எனக்கே, காலைல எழுந்ததும் Oral-B யும் Colgate உம் கேக்குது. நைட்டு இன்டர்நெட் பாக்கலன்னா தூக்கம் வர மாட்டேங்குது. எனவே.. இதுங்கள மாத்திக்க முடியாதுதான். ஒத்துக்கறேன்.. //
புரிஞ்சா சரி 🙂
//மீண்டும் சொல்கிறேன். இதற்கு ஒரே வழி ஜனத்தொகையைக் குறைப்பதுதான்.//
இதுவரைக்கும் ஜனத்தொகையை குறைக்கிறதைப் பத்தி பலதடவை, பல பதிவுகளுடன் சம்பந்தப்படுத்தி எழுதிட்டீங்க! அதைப்பத்தி ஒரு தனிப்பதிவு எழுதி அலசி ஆராய்ஞ்சிடுவோம் வரும்காலங்களில்….. 🙂
Abarajithan
ஒக்ரோபர் 17, 2010
1.2. நீங்களே சொல்கிறீர்கள், என்னால் குடும்பத்தைக் கூட மாற்ற முடியாதென்று. பின் நான் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு மாணவர்களை அழைப்பது? அப்படி அழைத்தாலும் யாரும் வரமாட்டார்கள் என்பது உங்களுக்கே தெரியும். எனவே, ஜனத்தொகையைக் குறைக்க என்னாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது தான்.
//பிறரை மட்டப்படுத்தி பேசுவது மிகச்சுலபம். ஆனால், இந்த உலக நன்மைக்கு ஒரு பங்களிப்பை (நம் வாழ்வியல் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு) செய்வது மிக மிகக் கடினம். அதனால், பல்வேறு ஆய்வுகளால், இந்த உலகம் இதுவரை கண்ட நன்மைகளையும் கருத்தில்கொண்டு பேசுவது மிகவும் அவசியம். அதை பரந்தவிரிந்த பார்வையோடு பார்க்க வேண்டியதும் அவசியம்! அதனால, மத்தவங்கள குத்தம் சொல்றதுக்கு முன்னாடி, நாம ஏதாவது (செயல்வடிவத்துல) இந்த உலக நன்மைக்காக செஞ்சிருக்கோமான்னு நம்மல நாமே கேட்டுப்பார்த்துக்கனும்! என்ன சரிதானே?//
சரிதான். இதுவரைக்கும் ஜனத்தொகையைக் குறைப்பதற்கான என் பங்கைச் செவ்வனே செய்து வருகிறேன். விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் இலங்கையில் ஒரு தமிழன் செய்ய முடியாது. எனவே வலைக்கு வந்தபின்பு அதையும் கவனிக்கிறேன்.
//மேலே குறிப்பிட்டுள்ளவை விதண்டாவாதம் என சிலர் எண்ணக்கூடும். கண்டிப்பாக இல்லை! நான் கூறிய அனைத்தும் சாத்தியமே. நாம் மனது வைத்தால்! இந்தியா திரும்பியபின், மேற்க்குறிப்பிட்டக் கருத்துக்களையொத்த சில முயற்ச்சிகளை மேற்கொள்ளும் எண்ணம் எனக்கு இருக்கிறது! காலமும், எதிர்கால வாழ்க்கையும், வாய்ப்பை வழங்குமா, தட்டிப்பறிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!//
உண்மைதான். உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்..
padmahari
ஒக்ரோபர் 27, 2010
புரிதலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அபராஜிதன்!
Thanigasalam
நவம்பர் 16, 2010
என்னங்க ஹரி, நலமா? உங்கள் பதிவுகள படிச்சு ரொம்ப நாளாச்சு. இப்போதுதான் தொடருகிறேன். உங்கள் ஆய்வுப் பணிகள் எல்லாம் எப்படி? மரபணு மாற்ற பயிர்கள் இன்னும் அதிகமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். நீங்கள் மிகப் பிரபலமான சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டீர்களோ!
padmahari
நவம்பர் 18, 2010
வாங்க, நலமே. நீங்கள் நலம்தானே? என்ன உங்கள இந்தப் பக்கம் ஆளையே காணோம் ரொம்ப நாளா? இருந்தாலும், வந்து எல்லா பதிவுகளுக்கு பின்னூட்டமிடும் உங்கள் ஆதரவுக்கும், ஊக்கத்துக்கும் மனமார்ந்த நன்றிகள். என் ஆய்வுப்பணி மிகவும் வேலைப்பளுவுடன் செல்கிறது. விசாரித்தமைக்கு நன்றிங்க 🙂
உண்மைதான். சர்ச்சைக்குறிய மரபனு பயிர்கள், புதுவரவுகளும் ஏராளம். பாதுகாப்பானவை என்று பரிந்துரைக்கப்பட்டவை மற்றும் அதிக பயன்பாட்டில் இருப்பவற்றை மட்டுமே தொகுத்துள்ளேன். மலேசியாவில் எப்படி?
இராசேந்திரன்
மே 21, 2011
நல்ல விழிப்புணர்வுப் பதிவு. விதையில்லா திராட்சை, அழுகாத ஆப்பில், பெரிய நெல்லிக்காய்,முட்டையிடாத கோழி,ஒரு மாதத்தில் விற்பனைக்கு வரும் பிராய்லர் கோழி முதலியவற்றின் மீது சந்தேகம் வருகிறது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் குழந்தைப்பேறு குறைபாடு ஏற்படும் என்று தோன்றுகிற்து. நண்பரே விளக்குங்கள். நம் மக்கள் விளகிச்செல்ல வழிகாட்டுங்கள்
padmahari
மே 26, 2011
//விதையில்லா திராட்சை, அழுகாத ஆப்பில், பெரிய நெல்லிக்காய்,முட்டையிடாத கோழி,ஒரு மாதத்தில் விற்பனைக்கு வரும் பிராய்லர் கோழி முதலியவற்றின் மீது சந்தேகம் வருகிறது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் குழந்தைப்பேறு குறைபாடு ஏற்படும் என்று தோன்றுகிற்து.//
நேரடியாக இப்படி சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன்?! (இது தொடர்பான செய்தி எதுவும் நீங்க படிச்சிட்டு இப்படி நினைக்கிறீர்களா?) ஆனா உண்மை என்னன்னா, மரபனு மாற்ற பயிர்களை உண்பதால் உடல் ரீதியான உபாதைகள் சில வர வாய்ப்புகளுண்டு என்றும், தற்போது பயன்பாட்டிலிருக்கும் பயிர்கள் அழிந்துபோக கூடிய ஆபத்து இருக்கு அப்படீன்னும்தான் ஆய்வுகள் சொல்கின்றன. இதுவரை குறிப்பிட்டு சொல்லும்படியான உபாதைகளை பற்றி நான் வாசித்ததில்லை. இருந்தாலும், இனி வரும் காலங்களில் கண்டிப்பாக இது தொடர்பான மேலதிக விவரங்கள் மற்றும் பரிந்துரைகளுடன் ஒரு பதிவை இடுகிறேன்.
கருத்துக்கு மிக்க நன்றிங்க.