22-ஆம் நூற்றாண்டுலயும் நம்ம ஊடகங்கள் இப்படியேதான் இருக்கும் போலிருக்கு?! என்னங்க ஒன்னும் புரியலியா? அட, அது வேற ஒன்னுமில்லீங்க, கடந்த மாதம் 22-ஆம் தேதி, தமிழகத்தின் புதிய சூப்பர் ஸ்டார் அப்படீன்னு ஒரு தலைப்புல CNN ஹீரோக்களுள் ஒருவரான, தமிழரான திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்கள் 2010 ஆம் ஆண்டின் உலகின் தலைசிறந்த ஹீரோக்கள்ல ஒருத்தரா தெரிவாகியிருக்காரு, அவருக்கு நிறைய ஓட்டு போட்டு, உலகின் தலைசிறந்த ஹீரோவாக்குங்க அப்படீன்னு கேட்டிருந்தேன்.
அவருக்கு ஓட்டுப்போட்டுட்டு, அதுக்கப்புறம் நானும், நீங்களும் நம்ம வேலையில மூழ்கிட்டோம். இன்னிக்கு சக பதிவர் மீனாட்சி நாச்சியார், நம்ம கிருஷ்ணன் உலக அரங்குல, CNN 2010 தலைசிறந்த 10 ஹீரோக்கள்ல ஒருத்தரா கேடயம் வாங்கினதப் பத்தி எழுதியிருக்கறத பார்க்க/படிக்க நேர்ந்தது. முன்னாடி நான் கிருஷ்ணன் அவர்களப்பத்தி எழுதினதும், இவர் பதிவு படிச்சபின்னாடிதான். வேலைப்பளுவுல, இந்த செய்திய நான் பார்க்கல!
ஆனா, நானும் அனேகமா உங்கள்ல பல பேரும், இவரப்பத்தி தெரிஞ்சிக்க முடியாததுக்கு காரணம் நம்ம ஊடகங்கள்தான்! செய்தித்தாளாகட்டும், இணையமாகட்டும் நம்ம ஆளுங்க எல்லாரோட கவனத்துக்கும் கொண்டுவர்ற செய்திகள்ல பிரதானமானது, எனக்குத் தெரிஞ்சவரைக்கும் ரெண்டு. ஒன்னு, சினிமா இன்னொன்னு அரசியல். இது ரெண்டுத்துக்கப்புறமா, இருக்கவே இருக்கு கள்ளக்காதல் செய்திகள். இதுலயே மூழ்கடிச்சிடுறாங்க மக்கள! அப்புறம் எப்படி, கிருஷ்ணன் மாதிரியானவங்க உலக அரங்குல ஜொலிக்கிறது நமக்கு தெரிய வரும்???
அது சரி, நம்ம இசைப்புயல் ரெண்டு ஆஸ்கார் வாங்கினத மட்டும் கம்பியூட்டரு தேயுற வரைக்கும் இணையத்துல பரப்புன ஊடகங்களும், வலையுலகமும் இதை ஏன் வாசகர்கள் கவனத்துக்கு கொண்டு வரல? இப்படி கேட்டா, ஒன்னும் சொல்றதுக்கில்லன்னு சொல்றதத்தவிர, நம்மால வேற என்ன செய்ய முடியும்? அவங்கவங்களா திருந்தினாதான் உண்டு! சரி அத விடுங்க, நாம நம்ம நிஜ ஹீரோ கிருஷ்ணன், தமிழுக்கும், தமிழர் கருணைக்கும் ஒரு உலக அங்கீகாரத்தை வாங்கிக்கொடுத்த தருணத்தைப் பார்ப்போம் வாங்க……
“தமிழனென்று சொல்லடா (கிருஷ்ணன் மாதிரி தொண்டுகள் செய்து, உலக அரங்கில்) தலை நிமிர்ந்து நில்லடா”
“தனியொருவருக்கு உணவில்லையெனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்”, அப்படீன்னு சொன்ன நம்ம பாரதியாரோட வாக்கினை, அஹிம்சை வழியில பின்பற்றி, தன் எதிர்காலக் கனவுகளை அழித்துக்கொண்டு, புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்கு தினமும் உணவளிக்கும் நம்ம தல நாராயணன் கிருஷ்ணன், உலகின் தலைசிறந்த ஹீரோக்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு, எப்படி அந்தக் கேடயத்தை வச்சிகிட்டு தலை நிமிர்ந்து நிக்கிறாருன்னு கீழே இருக்குற காணொளியில பாருங்க…..
முக்கியமா, ஏ.ஆர் ரகுமானுக்கு அடுத்தபடியா, தனக்கு கிடைத்த உலக அங்கீகாரத்தை ஒரு தமிழனாக பதிவு செய்ய, “எல்லாப்புகழும் இறைவனுக்கே” அப்படீன்னு தமிழுக்கும், தமிழரின் கருணைக்கும் ஒரு உலக அங்கீகாரத்தை வாங்கிக்கொடுத்திருக்காரு நம்ம கிருஷ்ணன். அதுக்காக அவருக்கு ஒரு தலைவணக்கம். ஆனா, உலகம் முழுதும் வியாபித்திருக்கும் நம்மவர்கள், எல்லாரும் ஓட்டுப்போட்டிருந்தாங்கன்னா, இந்த வருடத்தின் தலைசிறந்த ஹீரோவா வந்திருப்பாரு நம்ம கிருஷ்ணன். அதுக்குக் காரணம் ஊடக விளம்பரமின்மையும், அலட்சியப்போக்கும்தான்னு தோனுது!
முந்தைய பதிவுல சொன்ன மாதிரியே, இந்த அங்கீகாரம் அவருக்கு 25,000 டாலர் பணத்தை பெற்றுத்தந்ததன் மூலம், அவர் தொண்டு செவ்வனே தொடர்வதுடன், மேலும் பலருக்கு அவர் தொண்டு செய்யவும், நம்மையும் தொண்டுசெய்யத தூண்டவும் பயன்படும் என்று நம்புவோமாக! இந்த சந்தோஷத்தை நாம எல்லாரும் கண்டிப்பா கொண்டாடியே ஆகனும். அதனால, இந்த காணொளிய உங்க நண்பர்கள் பலருக்கும் அனுப்புங்க, செய்தியப் பகிர்ந்துக்குங்க நண்பர்களே!
அதுமட்டுமில்லாம, நீங்களும் ஒரு வலைப்பதிவர்னா, தயவு செஞ்சு உங்க வலைப்பக்கத்துல இந்தச் செய்திய கண்டிப்பா பதிவு செய்யுங்க. இது தமிழன்னு பெருமைப்பட்டுக்கிறதுக்காக இல்ல, கிருஷ்ணனோட சந்தோஷத்தை நாம எல்லாரும் கொண்டாடுறதுக்காகவும், அவரை மாதிரி இன்னும் பலர் உருவாக பலரை ஊக்கப்படுத்துறதுக்காகவும்தான். நம்மில் பல கிருஷ்ணன்கள் இன்னும் உருவாகனும்ங்க. அதுக்கு இந்த உலக அங்கீகாரமும், கிருஷ்ணன் அவர்களுக்கு கிடைத்த இந்த வெளிச்சமும் முதற்படியா அமையும்னு நம்புவோம்.
எல்லாத்தையும் சொல்லிட்டு, இந்த வருடத்தின் உலகின் தலைசிறந்த ஹீரோவாக CNN ஆல் தேர்ந்தடுக்கப்பட்ட திரு.அனுராதா கொய்ராலா பத்தி சொல்லலைன்னா தப்பாயிடும். அவங்கள மாதிரி ஒரு தைரியமும், உத்வேகமும் இருந்தா இந்த உலகத்துல பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நிறையவே குறையவும், இல்லாமற்போவதற்க்கும்கூட வாய்ப்பிருக்கு. அவங்க நேபாலத்திலிருந்து வெளி நாடுகளுக்கும், உள் நாட்டிலும் விபசாரத்திற்க்கு உட்படுத்தப்படும் இளம் பெண்களை அந்த நரகத்திலிருந்து மீட்கவும், அவர்கள் விபசாரத்திற்க்கு செல்லாமல் தடுக்கவும் பல வருஷமா போராடிக்கிட்டு வர்றாங்க. அவங்களுக்கும் நம்மோட தலைவணக்கம். இன்னும் பல அனுராதா கொய்ராலாக்கள் உருவாகட்டும் இந்த உலகில்…….
மேலும், நாராயணன் கிருஷ்ணனுக்கு நிதியுதவி செய்ய நீங்க விரும்பினா, நாராயணன் கிருஷ்ணன் அவர்களின் தொண்டு நிறுவன முகவரி இங்கே (http://www.akshayatrust.org/index.php)
தொடர்புடைய சில பதிவுகள்:
மீனாட்சி நாச்சியார்
நவம்பர் 26, 2010
அசத்திடீங்க.. நான் வேலைப்பளு காரணமா அந்த பதிவில் அதிகம் எழுத முடியல. என் மனக்குறைய தீர்த்துட்டீங்க. நான் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்ட ஒவ்வொரு வரிகளும் உங்களின் பதிவில் இருந்தது. ஆயிரம் நன்றிகள் நண்பரே
மீனாட்சி நாச்சியார்
நவம்பர் 26, 2010
பதில் என்பதை பதிவில் என்று திருத்த வேண்டுகிறேன்
padmahari
நவம்பர் 26, 2010
வாங்க மீனாட்சி நாச்சியார்,
உங்க முதல் வருகை நல்வரவாகுக. நன்றியை நாந்தான் உங்களுக்குச் சொல்லனும், ரெண்டு முறை! நன்றி, நன்றி 🙂
ஏன்னா, என்னோட கவனத்துக்கு கிருஷ்ணன் அவர்கள கொண்டுவந்ததே நீங்கதான்! உங்களுக்கு பிடிச்சமாதிரி பதிவு வந்திருக்குறதுல எனக்கும் மிக்க மகிழ்ச்சியே. இதுமாதிரியான பதிவுகளை தொடர்ந்து நீங்களும் எழுதுங்க. தமிழ் மக்கள திருத்துற பல பதிவுகளையும் தொடர்ந்து எழுதுங்க 😉 அவதூறு பேசுறவங்க பேசிக்கிட்டே இருக்கட்டும்.
முதல் வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி. உங்க ஆதரவு தொடரட்டும்….
படைப்பாளி
நவம்பர் 26, 2010
அருமை நண்பரே.ஆரோக்கியமான கட்டுரை
padmahari
நவம்பர் 26, 2010
ஊக்கத்துக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
வெங்கடேஷ்
நவம்பர் 27, 2010
பொது வாழ்வில் ஈடுபடுவோர்களை மக்களுக்கு அறியச்செய்வது ஊடகங்களின் வேலைகளுள் ஒன்று ஆனால் அவை லாப நோக்கம் ஒன்றை மட்டும் பார்ப்பதால் இந்த மாதிரியான நல்ல விஷயங்கள் அவர்களுடைய கண்ணுக்கு தெரியாது.
திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்கள் 2010 ஆம் ஆண்டின் உலகின் தலைசிறந்த ஹீரோக்கள்ல ஒருத்தரா தேர்வாகியிருக்கிறதை தங்கள் மூலமமாக அறிந்தது ரொம்பவே சந்தோஷமா இருக்கு நண்பரே. அத்தோடு திரு.அனுராதா கொய்ராலா அவர்களுக்கும் நம்முடைய வாழ்த்துக்கள் நேபாளம் போன்ற சிறிய நாட்டில் இருந்து இப்படியொரு தைரியசாலியான பெண்மணியை பார்ப்பது மிகவும் அரிது
மீண்டும் ஒரு முறை நன்றி நண்பா திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்களை மறக்காமல் ஞாபகபடுத்தியதற்கு. நண்பர் மீனாட்சி நாச்சியார், அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்
padmahari
நவம்பர் 29, 2010
நாங்கூட இந்தப் பதிவை ஆரம்பிச்சிட்டு, அடடா நமக்கு ஊடகங்களைக் குறை சொல்றதே ஒரு பொழப்பாப் போச்சேன்னு நெனச்சேன். ஆனா, என்ன செய்ய உண்மை அதுதானே…..
கருத்துப்பதிவுக்கு நன்றிங்க….
Ashok
நவம்பர் 27, 2010
நானும் பார்த்தேன் CNN hero நேரடி ஒளிபரப்பு. மிக நெகிழ்வா இருந்தது. உங்களுக்கு ஓட்டு போட இண்ட்லியில போனா, எல்லா பதிவிற்கும் அதிகபட்சமாக 10-20 ஓட்டுக்கள் மட்டும்தான் .ஆனால் இந்திய திரை நாயகிகளின் புத்தம் புதிய புகைப்படங்கள் பதிவிற்கு மட்டும் 158 ஓட்டுக்கள். திருந்தவே மாட்டோம் நாம். இந்தியா இப்ப இருக்கிற அரசியலும், மக்கள் மனம் இப்படியே இருந்தால் Dr.அப்துல் கலாம் கண்டது வெறும் கணவாகவே போய்விடும் என்று பயமா இருக்கு.
padmahari
நவம்பர் 29, 2010
சினிமா நம்ம வாழ்க்கையில அவ்வளவு ஆழமா பதிஞ்சிருக்கு அஷோக். ஆனா, அந்தச் சினிமா இன்றைய காலகட்டத்துல, நடிகைகளின் ஆபாசத்தை மட்டுமே நம்பியிருக்குற மாதிரி மாறிப்போனதுதான் முக்கியமான பிரச்சினை. நல்லவை நிலைக்கும், ஆனா ஜொலிக்க கொஞ்சம் நாளாகும். உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி…..