பாம்புன்னு எடுத்துக்கிட்டோமுன்னா, நம்மள்ல நெறைய பேருக்கு நல்லா தெரிஞ்ச, பிரபலமான(?) ஒரு பாம்புன்னா அது நல்ல பாம்பு/ராஜ நாகம் அப்படீன்னு சொல்லலாம். நல்ல பாம்பு நான் சில முறை பார்த்தப்போ, அது என்னவோ நம்மள நல்லா உத்து பார்க்குது போலிருக்கு அப்படீன்னுதான் எனக்குத் தோனும்!
ஆக, பாம்புக்கு கண்கள் இருக்கு. அது நல்லாவும் பார்க்கிற மாதிரி நமக்குத் தோனுது(?). பாம்பைப்பத்தின இன்னொரு சந்தேகம், பாம்புக்கு காது இருக்கா? எனக்குத் தெரிஞ்சவரைக்கும் “பாம்பின்கால் பாம்பறியும்” அப்படீன்னு ஒரு பழமொழிதான் இருக்கேத் தவிர கண்ணுக்குத் தெரியுற மாதிரி பாம்புக்கு காது/கால் இதெல்லாம் இல்லைன்னுதான் நெனைக்கிறேன்!
அடுத்த சந்தேகம், பாம்புக்கு மூக்கு இருக்குதா? யாராவது பார்த்து/கேள்விப்பட்டு இருக்கீங்களா? கண்டிப்பா எனக்குத் தெரியாதுப்பா! சரி, நம்மளுக்குத் தெரியாதுங்கிறதுக்காக பாம்புக்கு காது/மூக்கு இருக்கு/இல்லைன்னு அர்த்தமில்ல. இல்லீங்களா? அப்படீன்னா, உண்மைதான் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்னதான் பதில்?
கேள்வி: பாம்புகளுக்கு கண்கள் உண்டா?
பதில்: உண்டு. ஆனால் சில பாம்புகளை (நல்ல பாம்பு போன்றவை) தவிர மற்றவைக்கு நன்கு பார்க்கும் திறன் இல்லை!
கேள்வி: பாம்புகளுக்கு காதுகள் இருக்கின்றனவா?
பதில்: உண்டு. ஆனால், அவை தலையினுள் இருப்பதால் வெளியில் தெரிவதில்லை!
கேள்வி: பாம்புகளுக்கு மூக்கு இருக்கிறதா?
பதில்: உண்டு. ஆனால், பாம்புகளின் மூக்கு நமக்கு இருப்பவை போல கண்களுக்கு இடையில் அல்ல. பாம்புகளின் மூக்கு என்பது ஆங்கிலத்தில் ஜேக்கப்சன்ஸ் ஆர்கன் (Jacobson’s organ) என்றழைக்கப்படுகிறது. இந்தப் பகுதி வாயின் மேற்புறத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!
விளக்கம்: பகல் நேரத்தில் இரையை வேட்டையாடும் பழக்கமுள்ள சில பாம்புகளைத்தவிர மற்ற எல்லாப் பாம்பினங்களுக்கும், தெளிவான பார்வைத் திறன் இல்லை.அவை வடிவங்களைப் பார்க்க முடியுமே தவிர விவரங்களை அல்ல! இதன் காரணம், பாம்புகளின் பரிணாம நிலையான பொந்துகளில், இருட்டில் வாழும் தன்மையே. ஏனென்றால் இருட்டில் பார்வைக்கான அவசியம் மிகக் குறைவு என்பதால்!
Pit vipers எனும் வகையைச் சேர்ந்த பாம்புகள், இரவினில் நன்கு பார்ப்பதற்கான ஒரு பிரத்தியேகத் திறனைக் கொண்டவை! அதாவது, இவ்வகைப் பாம்புகளின் தலையின் இருபுறமும் இருக்கும் குழிகள் (Pits) வெப்பத்தை (இன்ஃப்ரா ரெட், Infra red) உணரும் சக்தி படைத்தவை. இந்தக் குழிகள் (கண்களல்ல) இவ்வகைப்பாம்புகளின் மூளைக்கு இரையின்(விலங்கின்) வடிவங்களை அனுப்பும் சக்தி கொண்டவை என்கிறார்கள் ஆய்வாளர்கள். யப்பா….!!
அந்த அதிசயத்த, கீழே இருக்குற அற்புதமான இந்தக் காணொளியில நீங்களே பாருங்க……
நல்ல பாம்பினைப் பற்றிய ஒரு சுவாரசியமான(?) தகவல் என்னன்னா, அதோட கண்கள் எதிரியின் கண்களை குறி பார்த்து தன் விஷத்தைக் கக்கும்(செலுத்தும்) திறன் கொண்டவை என்பதுதான்! அதுமட்டுமில்லாம, தன்னோட விஷம் எதிரி யோட (மனுசனும்) கண்களைக் குருடாக்கிவிடும் என்பது நல்லாத் தெரியுமாம் நல்ல பாம்பிற்கு! அதுசரி, நல்ல பாம்புங்க நம்ம வடிவேல் மாதிரி “எதையுமே ப்ளான் பண்ணிதான் பண்ணனுமுன்னு” கெளம்பி இருக்குங்க போலிருக்கு!? எதுக்கும் நாம ஜாக்கிறதையா இருந்துக்குவோம் சாமீ…!
ராஜ நாகத்தைப் பத்தின ஒரு அட்டகாசமான காணொளிய கீழே பாருங்க……
பாம்புகளுக்கு வெளிப்படையான, பெரிய காதுகள் இல்லைன்னாலும் தலைக்கு உள்ளே கேட்கும் திறனுள்ள காதுகள்(?) இருக்கு. அதனால, காற்றில் எழும் பல அதிர்வுகளை துள்ளியமாக உணரும் திறன் படைத்தவையாம் பாம்புகள்! இன்னொரு சுவாரசியமான விஷயம், பாம்புகள் ஏற்படுத்தும் மிகப் பிரபலமான(?) “உஸ்ஸ்ஸ்ஸ்…..” அப்படீங்கிற சத்தம். இந்த சத்தத்தை பாம்புகள் ஏற்படுவதற்கான காரணம், பிற விலங்கு/எதிரிகளை எச்சரிக்கை செய்வதற்க்காகவே!
ஒரு பாம்பு எந்த அளவுக்கு “உஸ்ஸ்ஸுங்கும்னு” நீங்களே பாருங்க…..
பாம்புகளுக்கு சிறந்த பார்க்கும்/கேட்கும் திறன் இல்லாததை சரிப்படுத்தும் விதமாக இயற்கை (இறைவன்?) பாம்புகளுக்கு, மிகச்சிறந்த நுகரும் திறனை அளித்திருக்கிறது. ஆக, தங்களின் ஜேக்கப்சன்ஸ் ஆர்கனினால் பாம்புகள் மிகத்துள்ளியமாக நாற்றங்களை உணர்ந்து தங்களின் இரையை தேர்ந்தெடுக்கின்றன/காத்துக்கொள்கின்றன!
பாம்புகளைப் பற்றிய இத்தகவல்கள் எல்லாத்தையும் விட மிக சுவாரசியமான, பாம்புகள்னாலே நமக்கெல்லாம் நியாபகத்துக்க்கு வர்ற ஒரு விஷயம் இருக்கு. அது என்னன்னு தெரியுமா உங்களுக்கு? கண்டிப்பா உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நம்பறேன். அதுக்கும், பாம்புகளோட நுகரும் தன்மைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கு! அது வேற ஒன்னுமில்லீங்க, பொதுவா பாம்புகள் தங்களோட நாக்கினை வெளியில் நீட்டி பின் சட்டென்று உள்ளிழுத்துக்கொள்வதை நாம் எல்லாரும் பார்த்திருப்போம். அது எதுக்குன்னு தெரியுமா உங்களுக்கு?
பாம்புகளின் நாக்கு பிளவுபட்டது போன்றிருக்கும். அந்த நாக்கினை வெளியில் சுழற்றும்போது பாம்புகள், காற்றில் உள்ள நாற்றத் துகள்களை உள்ளிழுத்துக்கொள்கின்றன. பிளவுபட்டது போன்ற நாக்கின் இரு புறங்களும் ஜேக்கப்சன்ஸ் ஆர்கனின் இரு துவாரங்களில் மாட்டிக்கொண்டு விடுகின்றனவாம். பின் நாற்றத்தின் தன்மையை உணர்ந்துகொள்ளுமான் பாம்பு! அடேங்கப்பா….!
படிச்சிட்டாப் புரிஞ்சிடுமா என்ன? அதனால இந்தக் காணொளியில பாருங்க…..
பாம்புகள் தங்கள் இரையை எப்படி தாக்கி, பின் அவற்றைத்க் தங்களின் உணவாக்கிக் கொள்கின்றன என்பதை மிகத்துள்ளியமாகக் காட்டும் இந்த அற்புதமான காணொளியையும் பாருங்க…… நம்பவே முடியலைங்க என்னால!!
என்னங்க, அசந்துபோய் உக்காந்துட்டீங்க? இதுக்கே இப்படின்னா, இன்னும் வரப்போற பாம்புகள் பத்தின காணொளிப்பதிவுகளப் பார்த்துட்டு என்ன செய்வீங்கன்னு தெரியலையே? சரி, பொறுத்திருந்து பார்ப்போம்!
தொடர்புள்ள மற்றுமொரு பதிவு:
பாம்பு: அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள்!
Sri
பிப்ரவரி 27, 2010
Super sir……Good Article About Snacks
padmahari
பிப்ரவரி 28, 2010
வாங்க ஸ்ரீ,
முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்தும் இணைந்திருங்கள். மீண்டும் மற்றுமோர் பதிவில் சந்திப்போம்!
ஆடுமாடு
பிப்ரவரி 28, 2010
பயமாத்தானிருக்கு!
padmahari
மார்ச் 1, 2010
வாங்க நண்பரே,
உண்மைதான். எனக்கும் பதிவிலுள்ள சில காணொளிகளைப் பார்க்க மிகவும் பயமாகத்தானிருந்தது! இன்னொரு சோகமான விஷயம், பல வகைப் பாம்புகளால் பல்லாயிரக்கணக்கானோர் உலகில் தினம் இறந்துகொண்டிருக்கிறார்கள் என்பது!
முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம்!
aarveeyem
பிப்ரவரி 28, 2010
nalla pathivu
padmahari
மார்ச் 1, 2010
வாங்க ஆர்.வீ.எம்,
முதல் வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து இணைந்திருங்கள். மீண்டும் சந்திப்போம்!
வெங்கடேஷ்
மார்ச் 1, 2010
பாம்புகளுக்கு விழிகள் நம்மைப்போல் அசைவதில்லை நிலையாகத்தான் இருக்கும் என்றும் எதிரில் உள்ள உருவங்களின் அசைவால் மட்டுமே அவை உணர்கின்றன
எனறு ஒரு புத்தகத்தில் போட்டிருந்தார்கள் அது உண்மையா
நண்பரே
padmahari
மார்ச் 1, 2010
முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதாவது, பாம்புகளின் வாழ்விடம்/வாழ்க்கை முறையைப் பொறுத்து அதன் பார்வைத்திறன்/முறை மாறும் என்பது ஆய்வுச்செய்தி.
உதாரணமாக, புற்றுகளில் வாழ்வது/சுதந்திரமாக திரிந்து வாழ்வது. இரவில் உணவு தேடுவது/பகலில் உணவு தேடுவது போன்றவை. இது தவிர, பிட் வைப்பர் (Pit viper) போன்ற பாம்புகள் இன்ஃப்ரா ரெட் கதிர்களை உணரும் திறன் கொண்டவையாதலால், பார்வைத் திறனில் அதிநவீன முன்னேற்றம் அடைந்தவை!
இப்போ உங்க கேள்விக்கு வருவோம். சில பாம்புகள் தங்களில் விழிகளை (Lens) முன்னும் பின்னுமாக மாற்றி பார்க்கின்றன என்கிறது ஆய்வு. இன்னும் சில வகைப் பாம்புகள், விழிகளை அகலத்திறந்து பார்க்கின்றனவாம்.
மேலும் விரிவான விளக்கத்துக்கு இங்கு செல்லுங்கள் வெங்கடேஷ்!
http://en.wikipedia.org/wiki/Snake
http://www.petplace.com/reptiles/reptile-senses-understanding-their-world/page1.aspx
நன்றி!
வெங்கடேஷ்
மார்ச் 1, 2010
தகவலுக்கு நன்றி நண்பரே
மேலும் தாங்கள் கொடுத்த இணையதளத்தில் தகவல்கள் ஏராளமாக இருந்தது ஆனால் என்னால் தான் புரிந்து கொள்ள
முடியவில்லை நண்பரே. எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக புரியாது இருந்தாலும் தாங்கள் அளித்த விளக்கமே மிகவும்
பயனுள்ளதாக இருந்தது நன்றி நண்பரே
யூர்கன் க்ருகியர்
மார்ச் 1, 2010
மகுடி ஊதினா பாம்பு ஆடுதே எப்படி??
அசைவுகைளை பார்த்து பாம்பு ஆடுதுன்னா மகுடி ஊத ஆரம்பித்ததும் எங்கயோ ஒரு பொந்தில் இருக்கும் பாம்பு ஓடி வந்துடுதே ஏன் ?
சமீபத்தில் எங்க ஊரு ஸ்கூல் இல் இருந்து இருபது பாம்புகளை பாம்பாட்டிகள் பிடித்து கொண்டு போனார்கள்… இது எப்படி சாத்தியம்?
மற்றபடி உங்க பதிவு செய்திகளும் வீடியோகளும் சூப்பர் !
Thx 4 sharing!
padmahari
மார்ச் 1, 2010
வாங்க யூர்கன்,
பாம்புகள், மகுடியைப் பார்த்துதான் ஆடனும்னு எந்தக் கட்டாயமும் இல்லை. சத்தத்தைக் கேட்டால் மட்டுமே போதும்! (பதிவு முழுவதையும் ஒரு முறை ஊன்றிப் படித்தால் உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும்!)
மேலும் (ஒவ்வொரு) பாம்பினங்களைப் பொறுத்து அதன் தேவைக்கேற்ப பார்க்கும்/கேட்கும்/நுகரும் திறன்கள் பெரிதும் மாறுகின்றன என்கிறது ஆய்வு! ஆக, மகுடி சத்தத்துக்கு ஆடும் நல்ல பாம்புக்கு கேட்கும்/பார்க்கும் திறன் பிற பாம்புகளைவிட மிக மிக அதிகம். உதாரணமாக, பாம்புகளிலேயே நல்ல பாம்பு ஒன்று தன் இரை/எதிரியின் கண்களை குறிவைத்து (கச்சிதமாக) தன் விஷத்தைக் கக்கித் தாக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது!
கீழுள்ள என் மற்றுமோர் பதிவை படியுங்கள் புரியும்
முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி. மீண்டும் சந்திப்போம்!
Surendran
மார்ச் 1, 2010
அருமையாகவும் ஆச்சர்யமூட்டும் தகவல்களை தந்ததற்க்கு நன்றி நண்பரே…
padmahari
மார்ச் 1, 2010
உங்க பாராட்டுக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி சுரேந்திரன்!