“கோரி ஹாஸுக்கு ஏழு வயதானபோது, அவன் கூடவே பிறந்த கண் பார்வை சம்பந்தமான நோய், அவன் பார்வையை கிட்டத்தட்ட முழுவதுமாய் அழித்துவிட்டிருந்தது. அதன்பின்னர் கோரி என்னையோ, என் மனைவியையோ சார்ந்தே வாழ வேண்டியதாயிற்று” என்கிறார் கோரி ஹாஸின் தந்தை ஈதன் ஹாஸ்!
அன்றிலிருந்து கோரி பெரும்பாலும் ஒரு பிரம்பின் உதவியோடும், பெரியவர்களின் உதவியுடனுமே அன்றாடப் பொழுதுகளை கழிக்க ஆரம்பித்தான்.
பள்ளியில் கரும்பலகையின் எழுத்துகளை பார்க்க இயலாததால் ஒரு ஆசிரியரின் உதவியோடு, ஒரு பெரிய கணினித் திரைக்குமுன்னெ தன் பள்ளிப்பொழுதுகளைக் கழித்தான்!
வெளியுலகத்திற்கு கண்பார்வையற்றவனான கோரி, சிறிது காலங்களில் தன் பார்வை முழுவதையும் இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான். 13 மாதங்கள் கழித்து, தன் எட்டாவது பிறந்த நாளுக்குப்பின் ஒரு நாள், சோதனை முறை ஜீன் தெரபிக்கு உள்ளாகி தன் இடது கண்ணில் ஒரு ஊசி போட்டுக்கொண்டான் கோரி!
என்ன ஆச்சரியம், கோரியின் இடது கண் பார்வை நன்றாக தெரிய ஆரம்பித்திருந்தது!
தற்போது 9 வயதாகும் கோரி, நியூயார்க்கின் ஹாட்லி நகரில் பேஸ்பால் ஆடுகிறான், நடைவண்டி ஓட்டுகிறான், பள்ளியின் கரும்பலகைகளின் எழுத்துகளை வாசிக்கிறான். மேலும் தன் கண் பார்வை மிக நன்றாக இருப்பதாக சொல்கிறான்!
ஆமாம், பிறவியிலிருந்து கண் பார்வை இழந்த ஒரு சிறுவனுக்கு திடீரென்று எப்படி கண் பார்வை கிடைத்தது? இது எப்படிச் சாத்தியமாயிற்று? இதுதானே உங்கள் கேள்வி?!
இந்த அதிசயத்திற்கு காரணம் “கண்களுக்கான ஜீன் தெரபி”! கண் பார்வை இல்லாத எத்தனை பேருக்கு இந்த வகையான ஜீன் தெரபி சிகிச்சை பலனளிக்கும் என்பது இன்னும் தெரியவில்லையென்றாலும், இந்த சிகிச்சை முறையானது கண்டிப்பாக சில வகை கண்பார்வை நோய்களுக்கு நிறைந்த பலனளிக்கும் என்று நம்பிக்கையூட்டுகிறார்கள்!
“லான்செட்” என்னும் இங்கிலாந்து நாட்டு அறிவியல் இதழில் ( journal Lancet) வெளியாகியுள்ள இந்த ஆய்வில் கலந்து கொண்ட 5 குழந்தைகள் மற்றும் 7 பெரியவர்களுக்கு “லெப்பர்ஸ் கான் ஜெனிட்டல் அமாரோசிஸ்” (Leber’s congenital amaurosis) என்னும் பிறவிக்கண்பார்வை நோய் “ஜீன் தெரபி சிகிச்சை” மூலம் குணமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!
அறிவியல் எல்லாம் வல்லது என்று சொல்லமுடியாதென்றாலும், “பிறவியிலேயே இழந்த பார்வையைக் கூட மீட்டுத்தற வல்லது”, என்று நிச்சயம் நம்பலாம் என்பதையே காட்டுகிறது இந்த ஆய்வு! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இச்செய்தியை மேலும் விரிவாக படிக்க இங்கு செல்லுங்கள்
சரவணப் பெருமாள்
மே 27, 2011
ஸ்டெம் செல் மற்றும் மரபணு ஆராய்ச்சி பற்றிய செய்திகளை அறிய ஆர்வமான இளைஞன் நான்…… ஒரு விடயம் பற்றி அறிய ஆவல்…… காது கேளாதோருக்கான மரபணு மற்றும் ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் உடைய தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நிலைமை குறித்து அறிய ஆவல்…………. தயவு செய்து அதனை பற்றிய ஒரு ஆய்வறிக்கை மட்டும் கட்டுரை எழுதவும்………. ஏனெனில், நானும் காது கேளாமையால், பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன்…… என் எதிர்கால பாதை சிறக்க என் செவி செல்வம் எனக்கு மிகவும் அவசியம்………… அதனால் தான் கேட்கிறேன்………. தயவு செய்து எழுதவும்………….
padmahari
மே 28, 2011
//காது கேளாதோருக்கான மரபணு மற்றும் ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் உடைய தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நிலைமை குறித்து அறிய ஆவல்…………. தயவு செய்து அதனை பற்றிய ஒரு ஆய்வறிக்கை மட்டும் கட்டுரை எழுதவும்………. ஏனெனில், நானும் காது கேளாமையால், பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன்…… என் எதிர்கால பாதை சிறக்க என் செவி செல்வம் எனக்கு மிகவும் அவசியம்………… அதனால் தான் கேட்கிறேன்………. தயவு செய்து எழுதவும்………….//
கண்டிப்பா எழுதுறேங்க. கொஞ்சம் கால அவகாசம் கொடுங்க, விரிவான ஒரு பதிவை நிச்சயம் எழுதுறேன். முனைவர் பட்ட ஆய்வு முடியும் தருவாயிலிருப்பதால் வேலைப்பளு மிக மிக அதிகமாக இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சரவணன். உங்க குறைபாடு விரைவில் நீங்கப்பெற்று நீங்களும் என்னை மாதிரி செவிச்செல்வத்தை முழுமையா அனுபவிக்கப்போறீங்க பாருங்க. அதற்கான என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம்…..,
நன்றி.
சரவணப் பெருமாள்
மே 28, 2011
உங்களுடைய மென்மையான பதிலுக்கு முதற்கண் நன்றி………. என் குறைபாடு நீங்கும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்……………
விரைவில் சந்திப்போம்………..
நன்றி
சரவணப் பெருமாள்
மே 28, 2011
உங்களின் முனைவர் பட்ட ஆய்வு இனிதே நிறைவேற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்………. உங்கள் ஆய்வு பணிகள் முழுவதும் முடிந்தவுடன், நீங்கள் செய்த முயற்சிகள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வறிக்கை குறித்து எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்………..
மிக்க நன்றி…….
விரைவில் சந்திப்போம்…….
padmahari
ஜூன் 20, 2011
கண்டிப்பாக சரவண பெருமாள்……
padmahari
ஜூன் 20, 2011
நானும்தான் சரவண பெருமாள்…… நன்றி 🙂
சரவணப் பெருமாள்
ஓகஸ்ட் 19, 2011
மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்…… ஸ்டெம் செல் (காது கேளாமை)பற்றி தற்போதைய மற்றும் எதிர்கால நிலைமை பற்றி தகவல் மற்றும் உங்களுடைய முனைவர் பட்ட ஆய்வறிக்கை மற்றும் முயற்சிகளுக்கான தகவலுக்காக….
padmahari
ஓகஸ்ட் 19, 2011
கண்டிப்பாக சரவணப்பெருமாள். என் ஆய்வுப்பணிகள் முடிந்து இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். பணிகள் முழுவதும் முடிந்து நேரம் கிடைக்கையில் நிச்சயமாக எழுதுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்தும் இணைந்திருங்கள்