ஃபேஸ்புக் மாதிரி வலைப்பின்னல் தளங்கள், என்னதான் நமக்கு சந்தோஷம், உற்சாகம் எல்லாம் கொடுத்தாலும், அப்பப்போ நம்ம வாழ்க்கையில கொஞ்சம் விபரீதமாக்கூட விளையாடிடும் போலிருக்கு! ஆமாங்க, கனடாவைச் சேர்ந்த நேதாலிக்கு, அப்படித்தாங்க ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கு!
நேதாலி ப்ளான்சர்டு கனடா நாட்டு ஐ.பி.எம் நிறுவனத்துல வேலை செய்றாங்க. மனச்சோர்வு நோயால பாதிப்பட்டு கடந்த ஒரு வருஷமா பணியிலிருந்து தற்காலிக விடுமுறை எடுத்துருக்காங்க. ஆனா, மனச்சோர்வு நோய் காரணமா விடுமுறை எடுத்துக்கிட்டதுனால, “மனு லைஃப்” அப்படிங்கிற காப்பீட்டு நிறுவனத்துல இருந்து அவங்களுக்கு உபாதை விடுமுறை சலுகைகள் (பணம்) வாங்கிக்கிட்டு இருந்துருக்காங்க.
திடீர்னு அவங்களுக்கு வந்துக்கிட்டிருந்த விடுமுறைச் சலுகை பண உதவி சில மாதங்களா வரல. உடனே அவங்க மனு லைஃப் நிறுவனத்துக்கு தொலைபேசி மூலமா அழைச்சு ஏன் பணம் வரலன்னு கேட்டிருக்காங்க. அந்த நிறுவனத்துல இருந்து வந்த பதில் பெரும் அதிர்ச்சியா இருந்துருக்கு!
அப்படி என்ன சொன்னாங்க அந்த நிறுவனத்துல? நேதாலிக்கு உடல்நிலையில எந்த கோளாரும் இல்ல, அவங்க நல்ல ஆரோக்கியத்தோடதான் இருக்காங்க. அதனால அவங்க வேலைக்கு போகலாம். இந்தக் காரணத்துனால பண உதவி நிறுத்தப்பட்டது அப்படின்னு சொல்லிருக்காங்க மனு லைஃப் நிறுவனத்துல!
இதக் கேட்ட நேதாலிக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி! ஏன்னா, அவங்க இன்னும் மனச்சோர்வு நோயிலிருந்து முழுசா குணமடையல. ஆமா, நேதாலிக்கு உடல் நிலை சரியாயிருக்கா/இல்லையான்னு அவங்க சொல்லாம எப்படி மனு லைஃப் நிறுவனத்துக்கு தெரிஞ்சது? யாரு சொல்லிருப்பாங்க? இதானே உங்க கேள்வி/குழப்பம்?
இங்கதான் நம்ம ஃபேஸ்புக் நேதாலியோட வாழ்க்கையோட விபரீதமா வெளையாடியிருக்கு! எப்படின்னு கேக்குறீங்களா?
அதாவது, மனு லைஃப் நிறுவனம் நேதாலியோட ஃபேஸ்புக் ப்ரொஃபைல்ல இருக்கிற அவங்களோட சமீபத்திய புகைப்படங்களைப் பார்த்திருக்காங்க. அதுல அவங்க ரொம்ப சந்தோஷமா இருக்கிற, பிறந்த நாள் கொண்டாடுற, பார்ல தண்ணி அடிச்சிக்கிட்டு குதூகலமா இருக்கிற மாதிரியெல்லாம் இருக்கிற புகைப்படங்கள பார்த்துட்டுதான், அவங்களுக்கு உடல் நிலை பூரண குணமாயிடுச்சி அப்படிங்கிற முடிவுக்கு வந்து, நேதாலியோட உதவித்தொகைய ரத்து பண்ணிட்டாங்க!
அடக்கொடுமையே….அப்படிங்கிறீங்களா? உண்மைதாங்க, கொடுமைதான்! உண்மையில நேதாலிக்கு மனச்சோர்வு நோய் இன்னும் குணமாகலை! ஆனா தன்னோட மருத்துவரின் ஆலோசனைப்படி அவங்க சந்தோஷமா இருக்க முயற்ச்சி பண்ணியிருக்காங்க. அப்படி அவங்க இருந்தப்போ எடுத்த புகைப்படங்கள தன்னோட ஃபேஸ்புக் கணக்குல அப்லோட் பண்ணியிருக்காங்க!
இப்போ தன்னோட சலுகைப் பண உதவிய திரும்ப வாங்குறதுக்கு சட்டப்பூர்வமா முயற்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க. மனு லைஃப் நிறுவனமும் நேதாலியோட உண்மை நிலவறத்த புரிஞ்சிக்கிட்டு தங்களோட முடிவ மறுபரிசீலனை செய்யறதா சொல்லியிருக்காங்க!
பாருங்க….ஃபேஸ்புக் நம்ம வாழ்க்கையோட எப்படியெல்லாம் வெளையாடுத்துன்னு! அதுக்காக ஃபேஸ்புக் கணக்கு வச்சிருக்கிற எல்லாருக்குமே இப்படி எதாவது நடக்குமுன்னு சொல்ல முடியாது. ஆனா, எந்த பிரச்சினை எந்த விதத்துல வரும்னு யாருக்குமே தெரியாதுங்கிறதுதான் நிதர்சனம்.
அதனால, நம்ம சொந்த விஷயங்கள ஃபேஸ்புக் மாதிரியான வலைப்பின்னல் தளங்கள்ல குறைவா வெளியிடறதுதான் நமக்கு நல்லதுன்னு நான் நெனக்கிறேன்!
ஃபேஸ்புக் தொடர்பான விபரீதம் பற்றிய என்னுடைய இன்னொரு பதிவ நீங்க இங்க படிக்கலாம்
ஆமா, உங்களுக்கு இது மாதிரியான அனுபவங்கள் எதாவது ஏற்பட்டிருக்கா? இந்த மாதிரியான பிரச்சினையைப் பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க?




“கோரி ஹாஸுக்கு ஏழு வயதானபோது, அவன் கூடவே பிறந்த கண் பார்வை சம்பந்தமான நோய், அவன் பார்வையை கிட்டத்தட்ட முழுவதுமாய் அழித்துவிட்டிருந்தது. அதன்பின்னர் கோரி என்னையோ, என் மனைவியையோ சார்ந்தே வாழ வேண்டியதாயிற்று” என்கிறார் கோரி ஹாஸின் தந்தை ஈதன் ஹாஸ்!
சோராஸ்ட்ரிய மக்களின் குல வழக்கப்படி, ஒரு பிணமானது தூய்மையற்றது என்பதால் அது சுற்றுச்சூழலை பாதிக்கும் வண்ணம் எறிப்பதும், புதைப்பதும் முற்றிலும் தவறு என்பது அவர்களின் நம்பிக்கை! அதனால், இறந்தவர்களின் உடல்களை “அமைதியின் சிகரங்கள்” என்று சொல்லக்கூடிய, உயர்ந்த மலைமுகடுகளில் அமைந்திருக்கும் இடங்களுக்கு கொண்டு சென்று, விலங்குகளும் பிற உயிரினங்களும் புசிக்கும் வண்ணம் விட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள். பின்னர், சூரிய ஒளியில் நன்கு உலர்ந்த, சுத்தமான எலும்புகளை சேகரித்து அதை எலுமிச்சை சாரில் கரைத்து வைத்துக்கொள்கிறார்கள்!
மரப்பெட்டியில் அடக்கம் செய்வது தெரியும், அது என்ன மர அடக்கம் என்கிறீர்களா? உலகின் சில பண்டைய பழங்குடியினர் வழக்கப்படி, பிணங்களை சமபகுதியான பூமியில் புதைப்பதை விட, மிகவும் உயர்ந்த இடங்களில் சவஅடக்கம் செய்வதே பாதுகாப்பான, சிறந்த வழி என நம்புகிறார்கள்! ஆஸ்திரேலியா, ப்ரிட்டிஷ் கொலம்பியா, சைபீரியா நாடுகளைச்சேர்ந்த பழங்குடியினர் இவ்வழக்கத்தை கடைபிடிக்கின்றனர். அதாவது, பிணங்களை ஒரு துணியில் சுற்றி அதை ஒரு கொக்கியில் மாட்டி , உயரமான மரத்தில் தொங்கவிட்டுவிடுகிறார்கள்! என்ன கொடுமை சரவணன் இது?!
எட்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த, ஸ்கேண்டினேவியாவின் கடல் கொள்ளையர்களை “வைக்கிங்” என்று அழைக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கடலிலேயே இறந்துவிடுவது வழக்கமாம். அப்படி இறப்பவர்களின் (செல்வந்தர்கள்) உடல்களை ஒரு பெரிய கப்பலில் வைத்து, அக்கப்பலில் உணவு, ஆபரணங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றையும் நிரப்பி, சமயங்களில் சேவகர்கள், மற்றும் விலங்குகளையும் உடன் சேர்த்து, இறந்தவர்களின் இறப்புக்குப் பின்னான வாழ்வில் உதவும்படி இருக்கட்டும் என்று, இறுதியில் அந்த கப்பலை கடலுக்கு அனுப்பி வைப்பார்களாம்! ஆஹா…..இது நல்லா இருக்கே! குடுத்துவச்சவங்கெ?!
உங்களில் யாருக்காவது பறக்கும் ஆசை இருந்தால் (வாழும்போது அல்ல!?) முதலில் திபெத்து நாட்டுக்கு செல்லுங்கள்! ஆம், திபெத்து நாட்டில் ஒவ்வொருவரும் இறந்தபின், பிணங்களை நிலங்களில் புதைப்பதற்கு பதிலாக, மலை உச்சிக்கு (பறந்து சென்று?!) அனுப்பி வைக்கிறார்கள்! அப்படிச் செய்வதால், கழுகளுக்கு இரையாகிறது மனித உடல். அது மட்டுமல்லாமல், சமயங்களில் பிணங்களினுள்ளே பாலையும், மாவையும் கலந்து வைத்து அனுப்புவார்களாம். ஏனென்றால் அதை உண்ணும் கழுகுகள் , ஒரு துண்டு கூட மீதம் வைக்காமல் முழுமையும் உண்டு அவ்விடத்தை சுத்தமாக விட்டுச்செல்ல வேண்டுமென்பதற்காக! இதுக்கெல்லாம் இவிங்க…..ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ??!
வட ஐரோப்பாவில், சேறும் சகதியும் நிறைந்த பகுதிகளை கடக்கும் சுற்றுலாப் பயணிகள், சமயங்களில் அதில் சிக்கி இறந்துவிடுவதுண்டு. அப்படி இறப்பவர்களின் உடல்களையே (அவ்வப்போது வேண்டுமென்றே, சில வயதானவர்களின் பிணங்களை இது போன்ற சேற்றில் புதைத்தும் விடுவார்களாம்!) சிக்கிய உடல்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அத்தகைய உடல்களை ஆய்வுக்காகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள் ஐரோப்பியர்கள்!
சுமார் 100,000 வருடங்களுக்கு முன்பு, பிணங்களை நிலத்தில் சவ அடக்கம் செய்யும் முறையை அறியாத நியான்டர்தால் மனிதர்கள், பிணங்களை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் நீண்ட குகைகளில் போட்டு விடுவார்களாம்! சில அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நியான்டர்தால் மனிதர்கள், ஒருவரின் ஆத்மாவானது இறந்தபின் வேறு உலகத்திற்கு செல்ல ஏதுவான இடம் குகைகளே என்று நம்பினார்களாம்! நல்லாத்தான்யா கெளப்புறாங்க பீதிய?!
ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி கந்தர் வான் ஹேகென்ஸின், பிணங்களின் பதப்படுத்தல் முறையில், பிணங்களை துண்டு துண்டாக வெட்டி பின் ஆய்வுகளுக்கு ஏற்றவாறு பல கோணங்களில் வைத்து, பல வேதியல் திரவங்களைக் கொண்டு அவற்றை பதப்படுத்தி விடுவார்களாம்! அப்படிப் பதப்படுத்தப்பட்ட பிணங்களை உலகில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களுக்கு அனுப்புவார்களாம்! இங்க பாருய்யா!?
இப்பொழுதும் வழக்கில் இருக்கும் இந்த வகையான சவ அடக்கத்தில், இறந்தவர்களின் உடல்களை உடனே திரவ நைட்ரஜன் என்னும் திரவத்தில் (-198 டிகிரி சென்டிக்ரேடு!) இறந்தவரின் உடல் மீண்டும் உயிர்ப்பெரும் நிலையைமுழுமையாக இழக்கும்வரை விட்டுவிடுவார்கள். இதுவே ஆங்கிலத்தில் க்ரையோனிக்ஸ் எனக் கூறப்படுகிறது!
உலகத்தின் பிணங்களிலேயே மிகவும் பிரபலமானது எகிப்து நாட்டின் மம்மியாகத்தானிருக்கும்! மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே மேற்கொள்ளும் சவ அடக்க முறையான இந்த மம்மியை உருவாக்க, இறந்தவர்களின் உடலில் உள்ள எல்லா பாகங்களையும் எடுத்து, (மூளையை மட்டும் மூக்கு வழியாக ஒரு கொக்கியை விட்டு இழுத்துவிடுவார்களாம்……யப்பா!?) பின்னர், வெற்றுடலை மரத்துகள்களைக் கொண்டு அடைத்து, இறுதியில் ஒரு வகையான நாற்றைக்கொண்டு உடல் முழுவதையும் இறுகச்சுற்றி விடுவார்களாம்! அப்படி உருவாக்கப்படும் மம்மிகளுக்குள்ளே அந்த ஆத்மாவானது இறப்புக்குப் பின்னான வாழ்வுக்குள் பயணப்படுகிறது என்பதே எகிப்தியரின் நம்பிக்கையாம்!
நீங்க கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க, பல மாசத்துக்கு சாப்பிடாமலே இருந்துக்கிட்டு, ஆனா உயரமா வளர்ந்துகிட்டு எந்தத் தொந்தரவும் இல்லாம இருந்தா….அட அட அட, அந்த சொகமே தனிதான்! ம்ம்ம்….என்னத்த சொல்ல, அந்த குடுப்பனை நமக்கு இல்ல! குடுத்துவச்சது…..பாம்பச்சொன்னேங்க!
உலகத்துல இருக்கிற பாம்புகள்லியே, ரொம்பச் சின்ன பாம்பை 2008-ல “பார்படோஸ்”, அப்படிங்கிற இடத்துல கண்டுபிடிச்சாங்களாம். அதோட அளவு என்ன தெரியுமா, வெறும் 10 செ.மீ தானாம்! இன்னொரு உபரித்தகவல், இந்த பாம்பை நம்மச் சென்னையிலதான் முதல்ல கண்டுபுடிச்சாங்களாம்! அது எவ்வளவு சின்னதா இருந்தா என்ன? பார்த்தா பயமாருக்கும்ல?!
சில வகை நல்ல பாம்புகள “துப்பும் நாகம்” (Spitting cobras) அப்படின்னு சொல்றாங்க. இந்த வகை நல்ல பாம்புகள், விஷத்த கிட்டத்தட்ட 2 மீட்டர் தூரம் வகை துப்பக்?! கூடிய சக்தி படைச்சவையாம். அடேங்கப்பா! அதுமட்டுமில்லாம, இந்த பாம்பு கண்ணைக் குறி வச்சுத்தான் விஷத்தத் துப்புமாம். அப்படி துப்புற விஷம் நம்ம கண்ணுல பட்டா, உடனே கண் குருடாயிடும்னு 2005-ல கண்டுபிடிச்சிருக்காங்க. யப்பா சாமி !கீழே இருக்கிற காணொளியில நீங்களே பாருங்க அந்த அநியாயத்த?!
மலைப்பாம்புங்க மாசக்கணக்குல சாப்பிடாமலே இருக்குமாம். ஆனா அதேசமயத்துல, சாப்பிடும்போது ஒரு சின்ன துண்டு கூட விடாம, நம்ம காம்ப்ளான் பையன் மாதிரி ” அப்படியே” சாப்ட்ருமாம்! அதுக்கு காரணம் என்னன்னா, பாம்புங்களுக்கு எலும்பைக்கூட செரிக்க வைக்கிற அளவுக்கு சிறப்பான உடலமைப்பாம்! இத நான் சொல்றத விட நீங்களே பாருங்க புரியும்!
இதுவரைக்கும் நான் பூமிதான் நம்மள சுத்தி வரும்னு நெனச்சுகிட்டு இருந்தேன். ஆனா இப்பதான் தெரியுது, பூமியக்கூட நாம சுத்தி வரலாமுன்னு! சும்மாவா சொன்னாங்க பெரியவங்க, “காலம் கலிகாலமா போச்சுன்னு”!







