என்னங்க, அப்படி பார்க்குறீங்க? தலைப்பைப் படிச்சா கண்ணைக் கட்டி காட்டுல விட்டது மாதிரி இருக்குதுங்களா? கவலைய விடுங்க, விவரம் என்னன்னு நான் சொல்றேன். இதுவரைக்கும் வலைப்பதிவாளனா இருந்து, உங்க எல்லாருடைய குட்டுகள், ஊக்கங்கள், பாராட்டுகள், வாழ்த்துக்கள் இப்படி எல்லா வகையான எதிர்வினை/மறுமொழிகள் மூலமா தன்னையும், தன் எழுத்துக்களையும் மேம்படுத்தி/மெருகேற்றிக்கொண்ட உங்கள் மேலிருப்பான்/பத்மஹரி…..
மேலே தலைப்புல நீங்க படிச்ச வரிகளையே தலைப்பாகக் கொண்ட, தரமான, எல்லாதரப்பினரும் வாசிக்கவேண்டிய/வாசிக்கக்கூடிய கருத்துக்களடங்கிய ஒரு நூலை எழுதும் வாய்ப்புப்பெற்று, அந்த நூல் (பார்க்க படம், கீழே) இன்று தமிழக மாவட்டங்களின் புத்தக கடைகளிலெல்லாம் கிடைக்கும் நிலையில், எழுத்தாளன் என்னும் தகுதியுயர்வு பெற்று, இன்று உங்கள்முன் எழுத்தாளர் பத்மஹரியாய் பணிவுடன் நிற்க்கிறேன்!
இந்த நூலைப்பற்றிய ஒரு சிறு அறிமுகத்துடன், என்னை உங்களின் ஆதரவென்னும் அன்பினால் வலைப்பதிவுலகில் காலூன்றச்செய்ததுபோலவே, தமிழ் எழுத்துலகிலும் காலூன்றச்செய்ய உதவவேண்டும் என்ற வேண்டுதலையும் முன்வைக்கவே இந்தப் பதிவு! வாங்க, என்னன்னு விவரமாப் பார்ப்போம்……
நூலின் முன்னுரை:
வாசகர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். செக்ஸ் என்னும் தலைப்பைப் பார்த்தவுடன், “ஓ….இது அந்த மாதிரி புத்தகமா?” என்று ஒரு அவசரமான முடிவுக்கு வந்துவிடவேண்டாம்!
இந்த நூலின் அடிப்படை நோக்கமே, செக்ஸ் குறித்த தவறான புரிதல்கள், குழப்பங்கள், மர்மங்கள், பயங்கள், கவலைகள் மற்றும் மருத்துவக் குறைபாடுகள் போன்றவற்றைப் பற்றி நவீன ஆய்வுகள் என்ன சொல்கின்றன, இக்கருத்துக்களைக் கொண்டு பாமரர் முதல் படித்தவர் வரையிலான சமுதாய மக்களின் பாலியல் அறிவை மேலும் வளர்த்து, செக்ஸ் குறித்த தவறான புரிதல்களை ஓரளவுக்கேனும் களைய முடியுமா என்பதே! அந்த முயற்ச்சிக்கான முதற்படிதான் இந்த நூலில் நீங்கள் வாசிக்கவிருக்கும் கட்டுரைகளும், செய்திகளும்!
முழுக்க முழுக்க பாலியல் ஆரோக்கியத்தை நோக்கிய பாதையில், நம் உறவுகள், பாலியல் பழக்கவழக்கங்கள், தேர்வுகள் ஆகியவற்றை நேர்படுத்திக்கொள்ள உதவும் வண்ணம் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளையே இனிவரும் பக்கங்களில் நீங்கள் வாசிக்கவிருக்கிறீர்கள்!
மனித சமுதாயத்தில் செக்ஸ் என்ற வார்த்தையைச் சுற்றி, மர்மங்கள், பயங்கள், ரகசியங்கள், குழப்பங்கள் இப்படி பலவகையான சுவர்கள் கட்டி எழுப்பப்பட்டு, அது காலம் காலமாய் சந்ததிகளால் பாதுகாக்கப்பட்டும் வருகிறது. விளைவு, செக்ஸ் சம்பந்தமான நல்லது, கெட்டது இப்படி இரண்டுவகையான கருத்துக்களுமே ரகசியமாகவும், மறைமுகமாகவும், எந்த ஒரு தருணத்திலும் பாலியல் மருத்துவரல்லாத ஒருவருடன் பேசக்கூடாத ஒன்றாகவும் மாறிப்போனது.
இதுவரை தமிழிலுள்ள பாலியல் சார்ந்த நூல்கள், பாலியல் உறவுகள் பற்றியும், அவற்றில் எழும் சிக்கல்கள் பற்றியும் விளக்கமளிக்கும் வண்ணம் எழுதப்பட்டிருப்பதாகவே அறிகிறேன். அத்தகைய நூல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, உடலுறவு மற்றும் செக்ஸ் செயல்பாடுகளுடன் தொடர்புடைய உடல் உபாதைகள், ஹார்மோன்களுடன் தொடர்புடைய சில நோய்கள், பாலியல் உறவுகளின் இயல்பு, பாலியல் வக்கிரங்கள், குற்றங்கள் போன்றவற்றையும், அரவாணிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், பாலியல் குற்றவாளிகள் போன்றோர் உருவாகக் காரணம் என்ன என்பதையும், சமீபத்திய ஆய்வு முடிவுகளின் துணையுடன், மரபனுவியல், நரம்பியல், உளவியல் ஆகிய அறிவியல் துறைகளின் அடிப்படையில் அணுகி, இவற்றுக்கான ஒரு முழுமையான விளக்கத்தை கொடுக்க முயன்றுள்ளேன்.
இத்தகையச் செய்திகளைத் தாங்கிவரும் தமிழின் முதல் நூலாகவும் இந்நூல் இருக்குமென்று நம்புகிறேன்! பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள், செய்திக்கோப்புகள், மருத்துவ மாத இதழ்கள், உளவியல் நூல்கள், பாலியல் மருத்துவ மாத இதழ்கள், மருத்துவத்துறை இணையதளங்கள் என எல்லா ஊடகங்களிலும், பல்கலைக்கழக நூலகத்திலும், பலமாதகாலம் செலவிட்டு, தீவிர தேடலின் பயனாக சேகரித்த ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் செய்திகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகளின் கருத்தாழமிக்க, சுவாரசியமானக் கலவையே இந்த நூல்! சுமார் இரண்டுமாத காலம் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறு ஆய்வின் குழந்தைதான் நீங்கள் வாசிக்கவிருக்கும் இந்த நூல்! வாசித்தபின் தங்களின் மேலான கருத்துகளை அறிய ஆவலாய் உள்ளேன்!
இந்த நூலை எழுதுவதற்க்கான ஆர்வமும், உழைப்பும் என்னிடம் இருந்தபோதும், என் திறமையை அங்கீகரித்து, ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகம் மூலமாக வெளியிடும் அரியதொரு வாய்ப்பை, எனக்களித்து ஊக்குவித்த ஆசிரியர் திரு.யாணன் அவர்களுக்கும், பதிப்பாளர் திரு.பிலால் அவர்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்!
நூலின் உள்ளே…..
பாலியல் சுவாரசியங்கள்!
முத்தமும் வைரசும்…..
மதுவும் செக்ஸும்…..
அரிதான பாலியல் உடலியக்கங்களும், விளைவுகளும்!
திருநங்கைகள்/அரவாணிகள் பற்றிய முழுவிவரங்கள்; அறிவியல் பின்புலத்திலிருந்து மருத்துவம் வரை…..
ஓரினச்சேர்க்கையாளர்கள்; ஏன் பிறக்கிறார்கள், எப்படி உருவாகிறார்கள் இன்னும் பல தகவல்கள்…..
சமுதாயத்தின் சில பாலியல் பேரவலங்கள்/வக்கிரங்களும், தீர்வுகளும்!
கள்ள உறவுகள்; அதிர வைக்கும் அறிவியல் பின்புலம், உளவியல் காரணங்கள் மற்றும் தீர்வுகள்…..
பீடோஃபீலியா; குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை: காரணங்கள், தீர்வுகள்…..
பாலியல் புதிர்கள்!
உச்சகட்டம்; புதிரா புனிதமா?: உச்சகட்டம் குறித்த பலவகையான விளக்கங்கள் மற்றும் பயன்கள்…..
இன்னும் பல சுவாரசியமான, பாலியல் புரிதலை நேர்படுத்த உதவும் பல தகவல்கள், என இந்த நூல் விதவிதமான செய்திகளை நீங்கள் விரும்பும் மேலிருப்பானின் நகைச்சுவை நடையில், உங்களுடைய நண்பன் போல உங்களுடன் பகிர்ந்துகொள்ளும்…..
இந்த நூல் கிடைக்குமிடம்:
Blackhole Media Publication Limited,
No.7/1, 3-rd Avenue, Ashok nagar,
Chennai-600 083. India
Cell: (+91) 9600086474, 9600123146
Email: admin@blackholemedia.in
Website: http://blackholemedia.in/
நன்றி…..
இன்று நான் இந்தப் பதிவை எழுதும் அளவுக்கு என்னை வளர்த்துவிட்டது, இந்த வலைத்தளத்தில் என்னை ஆதரித்து வாசித்த முதல் வாசகர் தொடங்கி, தரத்தைப்பற்றி கவலைப்படாமல் என் முயற்ச்சியை ஊக்குவித்து மறுமொழி எழுதிய வாசகர்கள், ஆக்கப்பூர்வமான விவாதங்களை உருவாக்கிய வாசகர்கள், தமிழிஷில் எனக்காக வாக்களித்த வாசகர்கள் என எல்லா தரப்பு வாசகர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
“வாசகர்கள் அனைவருக்கும் மேலிருப்பானின் பல கோடி நன்றிகள்”
இந்த நூல் பாலியல் குறித்து இருப்பதுபற்றி சிலருக்கு ஒரு சந்தேகம் எழலாம். அது, மருத்துவம் குறித்த நான் ஏன் ஒரு நூலை எழுதவில்லையென்று. உண்மைதான், காரணம் பாலியல் குறித்து தெளிவாக, அறிவியல் பின்புலத்துடன் எழுதவேண்டிய அவசியமும், அப்படி எழுதுபவர்கள் தமிழ் எழுத்துலகில் மிக மிக அரிது என்பதும்தான்! ஆனால் இனி வரவிருக்கும் என் அடுத்த நூல் மருத்துவம் பற்றியதே!
இறுதியாக, இந்த நூலை எழுதும் அரிய வாய்ப்பை எனக்கு நல்கிய ப்ளாக்ஹோல் மீடியாவின் ஆசிரியர் யாதவ நாராயணன் (யாணன்) அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்நூல் குறித்த விமர்சனங்கள்:
ஜெகதீஸ்வரன்
நவம்பர் 19, 2010
வாழ்த்துகள்…
padmahari
நவம்பர் 19, 2010
மிக்க நன்றிங்க….
kousalya
நவம்பர் 19, 2010
wow excellent friend…..!
மிகவும் சந்தோசமாக உணருகிறேன். நீங்கள் ஒரு எழுத்தாளராக மாறியதுக்கு முதலில் வாழ்த்துகள் சொல்லிகிறேன். அப்புறம் இந்த மாதிரி ஒரு நூலை எழுதியதிற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எங்கள் ஊரில் இருக்கிறதா என்று விசாரித்து வாங்கிவிடுவேன். முடிந்தால் பலரை வாங்க சொல்வேன். பலருக்கும் உதவியாக இருக்கும் என்று நான் அறிவேன்.
மேலும் பல படிகள் உயர என் பிராத்தனைகளும் வாழ்த்துக்களும்…!
padmahari
நவம்பர் 20, 2010
மிக்க நன்றிங்க தோழி! உங்களைப்போன்ற நண்பர்களின் ஊக்கமே இந்த நூலின் வருகைக்கு முதல் காரணம். உங்களோட ஆதரவுக்கும், தொடர்ந்த ஊக்கத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள். என் போன்றவர்களும், என்னைவிட திறமைசாலிகளும் நம் தமிழகத்தில் இன்னும் ஏராளம் உண்டு. அவர்களும் எழுத்துலகுக்கு வந்து சமுதாய மாற்றத்துக்கு வித்திட வேண்டும் என்பதே என் ஆசை. என் போன்றவர்களின் முயற்ச்சிக்கு கிடைக்கும் ஆதரவு இன்னும் பலரையும் உந்தும் என்று நம்புகிறேன். என்னை தொடர்ந்தும் ஆதரிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
ramanans
நவம்பர் 20, 2010
வாழ்த்துக்கள் ஹரி, வளர்க. மென்மேலும். சாதனைகள் படைத்துச் சிறக்க. ஆமாம், அடுத்த நூல் புற்று நோய் பற்றித்தான் இல்லையா? குட்.
யாணன் கல்கியிலும் குமுதம் ரிப்போர்ட்டரிலும் பணியாற்றியவர், சரிதானே?
இது போன்ற நூல்கள் சமூகத்துக்கு அவசியம் தேவை. அப்புறம் பிளாக் ஹோல் இணைய தள லிங்க் நீங்கள் சரியாக இணைப்பு கொடுக்கவில்லை போலிருக்கிறது. அதை சரி செய்யுங்கள். மிக்க நன்றி! மேலும் பல நல்ல நூல்கள் எழுத வாழ்த்துகள்!
padmahari
நவம்பர் 20, 2010
அய்யா, பாராட்டுக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி. அடுத்த நூல் புற்றுநோய் பற்றியதுதான் 🙂
//யாணன் கல்கியிலும் குமுதம் ரிப்போர்ட்டரிலும் பணியாற்றியவர், சரிதானே? //
ஆம், மிகச்சரியாக சொன்னீர்கள்.
//அப்புறம் பிளாக் ஹோல் இணைய தள லிங்க் நீங்கள் சரியாக இணைப்பு கொடுக்கவில்லை போலிருக்கிறது. அதை சரி செய்யுங்கள்.//
அய்யா சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. இப்போது சரிசெய்துவிட்டேன். என்னை வாழ்த்தியமைக்கும் நன்றிகள் பல…..
jmms
நவம்பர் 20, 2010
ரொம்ப உப்யோகமான புத்தகமா இருக்கணும்..
நன்றிங்க அறிமுகத்துக்கு.
padmahari
நவம்பர் 23, 2010
ரொம்ப நன்றிங்க தோழி. நூலை வாசிக்காமலேயே இப்படியொரு ஊக்கம் கொடுப்பதற்க்கு. வாசித்துவிட்டு சொல்லுங்கள்…..
வெங்கடேஷ்
நவம்பர் 20, 2010
முதலில் வாழ்த்துக்கள் நண்பரே. தங்களுடைய எழுத்து திறமைக்கு இந்த நூல் ஒரு முதல் படியாக இருக்கும் என்று நம்புகிறேன்.சில விஷயங்களில் மேலோட்டமாக கருத்தைச் சொல்லிவிடலாம் ஆனால் இதைப்போல உணர்வுப்பூர்வமான விஷயங்களில் கருத்தை சொல்வது அவ்வளவு சுலமமல்ல ஆனால் தாங்கள் ஆராய்ச்சியாளர் என்பதோடு மட்டுமல்லாமல் மனிதர்களின் நாடியையும் அறிந்தவர் என்பதால், (அது எப்படி தெரியும் என்கிறீர்களா .தங்களின் பல பதிவுகளைப் பார்க்கும் போதே புரிகிறது மனிதர்களின் நாடியையும் அறிந்தவர் என்பதை) அதனால் தாங்கள் இந்த புத்தகத்தி்ல் அனைத்தையும் அலசியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் இந்த விஷயத்தை பற்றி பேசுவதே சிலர்,பலர், தேசத்துரோகம் போல எண்ணுகிறார்கள் அவர்களுடைய எண்ணங்கள் இந்த புத்தகத்தை படிப்பதால் மாறும் என்றால் அது உண்மையாகவே நல்ல மாற்றமாகத் தான் இருக்கும். செக்ஸ் என்பது வெறும் உடல் இச்சை சம்மந்தப்பட்டது மட்டுமல்லாமல் மனித இனத்தின் மூல நாடியே அது தான் ஆனால் அதிலே தான் மனிதர்களுக்குள்ளே பல சந்தேகங்கள். செக்ஸ் என்பது உடலில் ஏற்படும் சில ரசாயண மாற்றங்களால் ஏற்படுகிறது என்கிறார்கள். ரசாயணம் என்றாலே அறிவியலோடு தொடர்புடையதாகி விடுகிறது
ம் மனிதனுடைய பிறப்பே அறிவியலோடு தொடர்புடையதாக இருக்கும் போது அதைப்பற்றி அறிவியல் தெரிந்த தாங்கள் எழுதுவது சரியாகத் தான் இருக்கும்
மேலும் மேலும் தங்களுடைய பதிவுகள் தொடரவேண்டும் நண்பரே நன்றி
padmahari
நவம்பர் 23, 2010
என்னங்க விட்டா நாடி ஜோசியர்னு சொல்லிடுவீங்க போலிருக்கு 😉
ரொம்ப நன்றிங்க. நூலை படிச்சிட்டு உங்க கருத்தை சொன்னா சந்தோஷப்படுவேன். என்னோட பதிவுப்பயணம் நிச்சயம் தொடரும்! கருத்துக்கு மிக்க நன்றிங்க…..
Ashok
நவம்பர் 20, 2010
சூப்பர், வாழ்த்துக்கள்.
padmahari
நவம்பர் 23, 2010
நன்றி அஷோக் 🙂
Karthik
நவம்பர் 20, 2010
congrats friend
padmahari
நவம்பர் 23, 2010
வாங்க கார்த்திக்,
முதல் வருகைக்கும், ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றிங்க. அடிக்கடி வலைப்பக்கம் வாங்க….
Thanigasalam
நவம்பர் 23, 2010
வாழ்த்துகள் ஹரி! பதிவாளராயிருந்து நூலாசிரியராக உயர்ந்துள்ளீர்கள். உங்களுடைய ஆய்வு அனுபவங்கள் இன்னும் புதுப்புது நூல்கள் எழுத உங்களுக்குக் கைகொடுக்கும். மேலும் தொடருங்கள். எங்கள் நாட்டில் உங்கள் நூல் கிடைக்க வாய்ப்பிருந்தால் வாங்கிப் படித்து பயனடைகிறேன். என்னுடைய நண்பர்களையும் வாங்கத் தூண்டுவேன்.
padmahari
நவம்பர் 23, 2010
ரொம்ப நன்றிங்க 🙂
மலேஷியாவில் விரைவில் கிடைக்க முயற்ச்சி செய்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவும் ஊக்கமும் என் எழுத்துப்பயணத்திற்க்கு வலு சேர்க்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கு நன்றிங்க….
ramanans
திசெம்பர் 7, 2010
ஹரி, விமர்சனம் படித்தேன். வாழ்த்துகள். மேலும் எழுதிச் சிறக்க.
அன்புடன்
ரமணன்
padmahari
திசெம்பர் 13, 2010
ரொம்ப நன்றிங்க!
thisaikaati
திசெம்பர் 23, 2010
ஆராய்ச்சியாளர் பத்மஹரிக்கு நான் நண்பன். எழுத்தாளர் பத்மஹரிக்கு நான் வாசக நண்பன் என்பதில் பெருமையாகத்தான் இருக்கிறது.
தொடர்ந்து பற்பல புத்தகங்கள் எழுதிட என் மனமார்ந்த வாழ்த்துகள் ஹரி.
இந்த மேலிருப்பான் ஊர்க்காரன் எப்போதும் மேலிருப்பான். 🙂
padmahari
திசெம்பர் 27, 2010
ரொம்ப ரொம்ப நன்றி ரோஸ்விக். உங்கள மாதிரி வாசக நண்பர்களோட ஊக்கம்தான் என்னோட இந்த முன்னெற்றத்துக்கு முதல்புள்ளி. அதனால நீங்க எல்லாரும் இல்லைன்னா, என்னோட எழுத்துலக பிரவேசமே சாத்தியப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. என்னோட நன்றிகள் எப்போதும் உங்களுக்கு…..
//இந்த மேலிருப்பான் ஊர்க்காரன் எப்போதும் மேலிருப்பான்.//
உங்க அன்புக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்களும், நன்றிகளும் ரோஸ்விக்……
suriya
ஜனவரி 29, 2011
all the best
padmahari
ஜனவரி 31, 2011
Welcome Suriya,
Thanks for the first visit and encouragement. Keep visiting and encouraging meliruppan…..
Arthamullainiyamanam DrBalasubramanian
ஓகஸ்ட் 31, 2013
பாராட்டுகள் ஹரி..தொடரட்டும் உங்கள்பயணம்..