இன்றைய உடல் நலக் குறிப்பு:
உடல் ஆரோக்கியத்தை குறிக்கும் BMI (உடல் எடை கணக்கு) அளவானது 18.5 முதல் 24.9 வரை இருந்தால் ஆரோக்கியமானது. 25 முதல் 29.9 வரை இருந்தால் உடல் பருமன் அல்லது அதிக எடையுள்ளவர்கள் பட்டியலில் வருவோர் என வரையறுக்கப்பட்டுள்ளது!
இந்த மனுசன் இருக்கானே, உலகத்துலயே எனக்குத்தான் 6 அறிவு இருக்கு, நான் சகல கலா வல்லவன், என்னால இது செய்ய முடியும், அது செய்ய முடியும்னு, இப்படி எப்பப் பார்த்தாலும் ஒரே பந்தாதான்! என்னடா இவன், தனக்கும் மனுசனுக்கும் சம்பந்தமேயில்லாத மாதிரி பேசிக்கிட்டு இருக்கானேன்னு நெனக்கிறீங்களா?
அட நீங்க வேற, நான் சொன்னது என்னையும் சேர்த்துத்தாங்க! ஆமா, ஏன் இப்படியெல்லாம் சொல்றேன்னு யோசிக்கிறீங்களா? அது வேற ஒன்னுமில்லீங்க, பரிணாம வளர்ச்சியில முதலிடத்துல இருக்குறதுனால, மனுசனுக்கு கீழே இருக்குற மத்த விலங்குகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிட்டு, எல்லா வகையிலும் திறமைசாலியா இருக்குறது மனுசந்தான்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன் இதுவரைக்கும்!
மனுசனைப்பார்த்து, “ஏய்…..கொஞ்சம் அடங்குறியா”, அப்படீன்னு கேக்குற மாதிரியும் சில பல விலங்குகள் இருக்குன்னு ஒரு செய்தி படிச்சேன். என்னதான் மனுசன் 6 அறிவோட, எல்லா விலங்குகளுக்கும் சிம்ம சொப்பனமா இருக்குறதா நாம நெனச்சிக்கிட்டு இருந்தாலும், நம்மள பார்த்து “ஐய்ய…..தோடா வண்ட்டுகிறாரு”ன்னு நக்கலா சொல்ற அளவுக்கு, புலனறிவுல நம்மை விட பன்மடங்கு திறமைசாலியான பல விலங்குகள் இருக்குன்னு நெனைக்கும்போது சப்புன்னு ஆகிப்போச்சு!
அதான், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு, அந்த விலங்குகளப் பத்தியும், அதுங்களோட அட்டகாசமான புலனறிவுத்திறன்களைப் பத்தியும் உங்க கூட பகிர்ந்துக்கலாமேன்னு இந்தப் பதிவ எழுதுறேன். வாங்க, புலனறிவுல நம்மளத் தோற்கடிக்கிற அந்த விலங்குகள் என்னென்னன்னு பார்த்துடுவோம்……
1. வவ்வால்கள் (Bats):
எப்பப் பார்த்தாலும் தலைகிழ தொங்கிக்கிட்டிருக்குற இந்த வவ்வால் இருக்குங்களே, அது தான் பறக்கும்போது தன் சிறகுகளில் எதிர்ப்படும் தடைகளைத் தவிர்க்க, ultrasonic squeaks என்னும் ஒரு வகையான ஒலி அலைகளை செலுத்தி, அந்த ஒலி அலைகளின் எதிரொலியைக் கச்சிதமாக கணக்கிட்டு, தடையில்லாமல் பறக்குமாம். இதுக்குப்பேரு “எதிரொலி இடக் கணக்கீடு” அப்படீன்னு சொல்றாங்க. ஆங்கிலத்துல எக்கோலொக்கேஷன் (echolocation). இதே யுக்தியைப் பயன்படுத்தித்தான் டால்ஃபின் மீன்களும் சகதி நிறைந்த பகுதிகளில் நீந்துகின்றனவாம். அது சரி….!
2. சுறா மீன்கள் (Sharks):
நீங்க யாரு கூட வேணா கண்ணாமூச்சி ஆடி ஜெயிச்சிடலாம். ஆனா, நம்ம சுறாக்கிட்ட மட்டும் வேலைக்கே ஆகாதுன்னு சொல்றாங்க. ஏன்னா சுறா மீனோட மூளையில, மத்த உயிரினங்கள் வெளியேற்றும் மின்சார அலைகள மிகத்துல்லியமா கணக்கிடக்கூடிய ஒரு வகையான விசேஷ அனுக்கள் இருக்குதாம்.
இதப் பயன்படுத்தி, மணலுக்குள்ளே மறைஞ்சிக்கிட்டிருக்கிற தம்மாத்தூண்டு மீனோட தசைகள் வெளியிடுற சிறிய அளவு மின்சார சக்தியைப் கூட கணக்கிட்டு, சாப்பிட்டுவிடுமாம் இந்த சுறாக்கள். என்னா ஒரு வில்லத்தனம் பாருங்க…?! வேணாஞ்சாமீ, நமக்கெதுக்கு வம்பு?! வெளையாட்டுக்கு நாம சொல்ல, அதெப்படி ஒரு வாயில்லா சீவன நீ அப்படிச்சொல்லலாமுன்னு, வேணுமுன்னே சண்டைக்கு வருவாங்க சில பேரு!
3. மலைப்பாம்பு (Boa):
மலைப்பாம்புகளுக்கும், ஒரு வகை விரியன் பாம்பான “பள்ள விரியன்” (boas and pit vipers) கண்ணுக்கும் மூக்குக்கு இடையில, பிற உயிரினங்கள் (இரைகள்) வெளியிடக்கூடிய வெப்பத்தைக் கொண்டே அவைஇருக்கும் இடத்தையும், தூரத்தையும் துல்லியமாகக் கணக்கிடக்கூடிய, ஒரு வகையான உடல் பகுதி இருக்குதாம். இதப் பயன்படுத்தி கும்மிருட்டுலயும், தன்னோட இரையை சும்மா அசால்டா காலி பண்ணிச் சாப்பிட்டுவிடுமாம் இவ்விருவகை பாம்புகளும்! அடேங்கப்பா…..!
இந்த பாம்புங்ககிட்டே போய், அதுவும் ராத்திரி ஒரு மணிக்கு, “திறமை இதோ இதோ…., மலைப்பாம்போ, விரியன் பாம்போ…..திறமை இதோ இதோ….. நான்தான் சகலகலா வல்லவன்”, அப்படீன்னு பாட்டுப்பாடுறதுக்கு நீங்க யாராவது தயாரா? சத்தியமா நான் தயாரில்லைப்பா…..!
பார்த்தாலே பயமுறுத்துற இந்த விரியன் பாம்போட வேட்டையை நீங்களே பாருங்க கீழே இருக்குற காணொளியில…..
4. முனுமுனுக்கும் குருவி (Hummingbirds):
நம்ம பார்வைக்கு எட்டாத/அப்பாற்பட்ட நிறங்களைக் காணக்கூடிய திறன் பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் உண்டு! அல்ட்ரா வைலட் நிறத்தினை ஒட்டிய நிறங்களைக் கூட காணக்கூடிய திறன் இந்த முனுமுனுக்கும் குருவிக்கு (அதாங்க Hummingbirds!ஆ மாம் இதுக்கு தமிழ்ல என்ன பேரு?!) இருக்குதாம். அடேங்கப்பா!
பாருங்க, தம்மாத்தூண்டு இருக்குற இந்த முனுமுனுக்கும் குருவி, எவ்வளவு பெரிய திறமையை இயற்கையாவே அடைஞ்சிருக்குன்னு. இதுக்கு முன்னாடி நாமெல்லாம் வெறும் ஜூஜூபி தானே?!
முனுமுனுக்கும் குருவி பத்தின ஒரு அழகான குறும்படம் யூ ட்யூபிலிருந்து உங்களுக்காக…..
5. பூனைகள் (Cats)
இரவு நேரத்துல, விளக்கே போடாம (வெளிச்சமே இல்லாம) இருந்தாக்கூட, கரெக்டா வந்து பால் இருக்குற இடத்தைக் கண்டுபிடிச்சி, எல்லா பாலையும் காலி பண்ணிட்டுப்போற பூனைகளைப் பத்தி உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும். ஆனா, அதெப்படி வெளிச்சமே இல்லைன்னாக்கூட பூனையால மட்டும் பால் இருக்குற இடத்தைக் கண்டுபிடிச்சி குடிச்சிட்டுப் போக முடியுதுன்னு நீங்க யாராவது யோசிச்சிருக்கீங்களா?
நான் கூட யோசிச்சதில்லை. ஆனா, விஞ்ஞானிகள் யோசிச்சிருப்பாங்க போலிருக்கு. ஆமாங்க, பூனைகளோட கண்கள்ல கண்ணாடி மாதிரியான ஒரு மெல்லிய தோல் இருக்குதாம். இந்தத் திரைதான் கும்மிருட்டுல கூட எலியைப் பிடிக்கவோ/நம்ம வீட்டுப் பாலைக்குடிக்கவோ பூனைக்கு “இருட்டுக்கண் பார்வையைக்” கொடுக்குதாம்! ஆங்கிலத்துல இந்தத திரைக்குப் பேரு டாபீடம் லூசிடம் (tapetum lucidum). அதானப் பார்த்தேன், இல்லைன்னா பூனைகூட நம்மள மாதிரிதான் போலிருக்கு!
இன்னும் எழுதிக்கிட்டே போனா, ஐய்யய்ய, என்னாதிது வள வளான்னு இழுத்துக்கிட்டே போறானேன்னு நீங்க அலுத்துக்குவீங்க. அதனால, இன்னும் சுவாரசியமான, ஆச்சரியமான இந்தப் பட்டியலின் மேலும் 5 விலங்குகளை நாம இந்தப் பதிவோட இரண்டாம் பாகத்துல பார்ப்போம்!
ஆனா, அதுக்கு முன்னாடி இந்த பட்டியல்ல இடம்பெறாத, அசாத்திய புலனறிவுத் திறன்களைக் கொண்ட வேறு சில விலங்குகளைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சாலோ, நீங்க கேள்விப்பட்டு/படிச்சிருந்தாலோ அதைக்கொஞ்சம் மறுமொழியில எழுதலாமே. நம்ம வாசகர்களும் தெரிஞ்சிக்குவாங்க. என்ன நான் சொல்றது?!
தொடர்புடைய சில பதிவுகள்:
rk guru
ஜூலை 8, 2010
அருமையான தகவல்கள் உள்ளது…வாழ்த்துகள்
ஆனிய பிடிங்கியாச்சு…ஓட்டும் போட்டாச்சு…!
padmahari
ஜூலை 9, 2010
வாங்க குரு,
முதல் வருகைக்கும், ஊக்கத்துக்கும், ஓட்டுக்கும் மிக்க நன்றி. நீங்களே ஆனிய பிடிங்கியாச்சுன்னு சொன்னதுல ஒரு சந்தோஷம். மத்த பதிவுகளையும் படிச்சி உங்க கருத்தை சொன்னீங்கன்னா இன்னும் சந்தோஷப்படுவேன்.
உங்க ஆதரவு இன்று போல என்றும் தொடரட்டும். மீண்டும் சந்திப்போம்!
K. Jayadeva Das
ஜூலை 8, 2010
இது தெரிஞ்ச சங்கதிதானே, ஆச்சரியப் பட ஒண்ணுமே இல்லையே! யானை மாதிரி ஒரு வேலைக்கு டன் கணக்கில நம்மால சாப்பிட முடியுமா? சிறுத்தை மாதிரி 150 கி.மீ./Hour வேகத்துல ஓட முடியுமா? ஒரு புறா மாதிரி ஒரே நாளில் 150 முறை உடலுறவு பண்ண முடியுமா? பனிக்கரடி மாதிரி ஆறு மாசத்துக்கு எழுந்திருக்காம தூங்க முடியுமா? பருந்து மைல் கணக்கான உயரத்துல பறந்தாலும் பூமியில் ஒரு எலி ஓடுச்சுன்னா தெளிவா பாக்கும், நம்மால அவ்வளவு தூரத்துல உள்ள சின்ன பொருளை பாக்க முடியுமா? மாடு மாதிரி உழைக்க முடியுமா, ஒட்டகம் மாதிரி தண்ணீரே இல்லாம மாதக் கணக்கில் பாலைவன வெய்யிலில் உலாத்த முடியுமா, ஆடுங்க மாதிரி சாப்பிட்ட இரையை வயிற்றிலிருந்து திரும்ப எடுத்து அசை போட முடியுமா என்றெல்லாம் கேட்டுக் கொண்டே போகலாம். ஆனால், எந்த மிருகமாவது மனுஷன் மாதிரி தொலை பேசி கண்டு பிடிச்சுதா, ராக்கெட் விட்டுதா, கப்பல் ஓட்டுச்சா என்றெல்லாம் கேட்டால் பதில் இல்லை என்றுதானே வருகிறது? அதுதான் ஆறாவது அறிவு. எந்த அடிப்படை வசதியோடும் பிறக்காமல் அத்தனையும் தானாகவே பெற்று, மற்ற எல்லா ஜீவராசிகளையும் அடக்கி ஆண்டானே அதுதான் ஸ்பெஷல்.
padmahari
ஜூலை 9, 2010
அதெல்லாஞ்செரிதான்….., எல்லாத்தையும் தெளிவா (?) எழுதின நீங்க, ஒரு முக்கியமான விஷயத்தை மட்டும் கோட்டை விட்டுட்டீங்களே நண்பரே…..
நீங்க சொன்னதுல இந்த (பருந்து மைல் கணக்கான உயரத்துல பறந்தாலும் பூமியில் ஒரு எலி ஓடுச்சுன்னா தெளிவா பாக்கும்) ஒரு விஷயத்தை தவிர எதுவுமே பதிவுக்கு சம்பந்தமானது இல்லைன்னு நான் நெனக்கிறேன். ஏன்னா, இந்த பதிவு விலங்குகளோட புலனறிவை மட்டும் மனிதனுடன் ஒப்பிடுகிறதே தவிர, ஓடுறது, உக்காருறது, படுக்கறதுன்னு உடலியல்/உழைப்புத்திறன் சார்ந்தவற்றை அல்ல! 🙂
//ஆனால், எந்த மிருகமாவது மனுஷன் மாதிரி தொலை பேசி கண்டு பிடிச்சுதா, ராக்கெட் விட்டுதா, கப்பல் ஓட்டுச்சா என்றெல்லாம் கேட்டால் பதில் இல்லை என்றுதானே வருகிறது? அதுதான் ஆறாவது அறிவு.//
அதெப்படிங்க….. நீங்க மட்டும் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? பின்றீங்க போங்க (?!)
இந்தப் பதிவுல புலனறிவைப் பத்தி பேசியிருக்கோமே தவிர அதைத்தாண்டிய ஆறவது அறிவைப் பத்தி இல்ல!
//எந்த அடிப்படை வசதியோடும் பிறக்காமல் //
அடிப்படை வசதின்னா எப்படி…..? இந்த காரு, பங்களா, ஏரோப்ளேன் இதெல்லாமா?!
// அத்தனையும் தானாகவே பெற்று//
இதெப்படி…? இந்த சூ மந்திரக் காளி….., ஜீ பூம்பா….இப்படியெல்லாம் மந்திரமெல்லாம் போட்டு பெற்றுக்கொண்டானோ மனிதன்??? (அதான் மூளைன்னு ஒன்னு இருக்கே சாமீ!)
//மற்ற எல்லா ஜீவராசிகளையும் அடக்கி ஆண்டானே அதுதான் ஸ்பெஷல்//
இது என்ன பிஸ்கோத்து…..மனிதனுக்கு இருக்குற பன்மடங்கு பரிணாம வளர்ச்சி அடைந்த மூளையிருந்தா விலங்குகளும் இதைவிட அட்டகாசமா அடக்கி ஆளும். மனுசனோட பெரிய பலமே இந்த அசாத்திய மூளைதான். ஆனா, நாம அதைப்பத்தி பேசலை இங்கே….!!
இதையெல்லாம் விட இன்னொரு விஷயம் இருக்கு…..என்னதான் மனுசன் பெரிய லார்டு லபக்கா இருந்தாலும் “ஏலியன்”னு ஒரு விஷயத்துல மட்டும் அடக்கவும் முடியாது அப்புறம் ஆளவும் முடியாது. துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு ஓட வேண்டியதுதான்! புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன். வேறு எதாவது கருத்துக்கள் இருந்தா முன்வைங்க…..விவாதிப்போம் (ஆரோக்கியமாக) 🙂
K. Jayadeva Das
ஜூலை 10, 2010
நீங்க ஒப்புமை என்று பாக்கனும்னா இரண்டு சமமான குணங்களுக்கிடையே தான் பாக்கணுமே தவிர, ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாத இரண்டு விஷயங்களை ஒப்பிட்டு இது பெரிசா அது பெரிசாங்கிறது எப்படி சரியாகும்? மனுஷனுக்குன்னு ஒரு சில புலன்கள் உள்ளன அதுக்குன்னு வரையறை உள்ளன, மிருகங்களுக்குனு சில புலன்கள் அவற்றுக்குன்னும் வரையறைகள் உள்ளன. இவை முற்றிலும் வெவ்வேறானவை. இதை எப்படி ஒப்பிட முடியும்? உதாரணத்துக்கு வௌவால்கள் நம் காதுகளுக்கு கேட்காத Ultrasonic-ஒலியலைகளை எழுப்பி அது மற்ற பொருட்கள் மீது பட்டு திரும்பி வருவதை உணர்ந்து எது எங்கே இருக்கிறது என்று “பார்த்து” இயங்குகின்றன, இதையே மனிதன் மற்றும் கண்களால் பார்க்கக் கூடிய உயிரினங்கள் வெளிச்சத்தைப் [Electromagnetic Waves-in the visible region, what is called as Light]பயன் படுத்தி பார்க்கின்றன. In both cases the principle is same. In the case of bats they generate their own source of sensing which is ultrasonic sound, but humans depend on some other source of light like Sun, candle, Electric Light etc.,] மனிதனுக்கு Ultrasonic-ஒலி எழுப்பவே முடியாது, அவனைப் போயி வவ்வளோடு ஒப்பிடுவது எப்படி இருக்குதுன்னா “புல்லு குடுத்தா பாலு குடுக்கும், அது உன்னால முடியாது தம்பி” மாதிரி இருக்கு. பூனை இருட்டுளையும் பாக்கும் என்று சொல்றீங்க, 100 % இருட்டுல [Absolute darkness] யாராலையும் பாக்க முடியாது, பூனை மிகக் குறைந்த வெளிச்சத்துலயும் பாக்கும் அவ்வளவுதான். நீங்க மிருகங்களோட சிறப்பை பத்தி சொல்லனும்னா அது வேற விஷயம், அதை மனிதர்களோடு எந்த விதத்தில் ஒப்பிட முடியும் என்று எனக்குப் புரியவில்லை. வேற்றுக் கிரக வாசிகள் என்பது ஸ்டெம் செல் ஆராய்ச்சி பண்ணுற ஒரு தகுதியான மாணவர் கிட்ட இருந்து எதிர்பாக்கல. “ஏலியன்” என்று சொல்லியிருக்கிறீர்கள், [வேற்றுக் கிரக மக்கள் என்று நான் நினைக்கிறேன்]. இதுவரை விஞ்ஞானப் பூர்வமாக ஏலியன்கள் இருப்பதாக நிரூபிக்கப் படவில்லை. நாவல்கள், திரைப்படம் எல்லாவற்றிலும் கற்பனை கட்டுக் கதையாகத்தான் அது உலவி வருகிறது. நீங்கள் ஒரு தகுதி படைத்த மருத்துவம் படிக்கும் மாணவராக இருந்து கொண்டு, “Alien வந்தால் தெரியுமா சேதி உன்னால ஒன்னும் பண்ண முடியாது” என்று அறிவியல் பூர்வமான ஆதாரமில்லாத செய்தி குறித்து மாந்த்ரீகம் செய்பவர் மிரட்டுவது போல மிரட்டுகிறீர்களே, நான் என்ன சொல்ல?
padmahari
ஜூலை 10, 2010
//நீங்க ஒப்புமை என்று பாக்கனும்னா இரண்டு சமமான குணங்களுக்கிடையே தான் பாக்கணுமே தவிர, ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாத இரண்டு விஷயங்களை ஒப்பிட்டு இது பெரிசா அது பெரிசாங்கிறது எப்படி சரியாகும்? //
சரி விடுங்க, நீங்க ஒரு வாத்தியாரு மாதிரி ரொம்ப கெடுபிடியானவரா இருக்கீங்க!
//மனுஷனுக்குன்னு ஒரு சில புலன்கள் உள்ளன அதுக்குன்னு வரையறை உள்ளன, மிருகங்களுக்குனு சில புலன்கள் அவற்றுக்குன்னும் வரையறைகள் உள்ளன. //
இதத்தாங்க நானும் பதிவு செஞ்சுருக்கேன். ஆனா கொஞ்சம் சுவாரசியமா இருக்கனுமேன்னு, சில சொல்லாடல்கள்ல ஒப்புமை செய்யும் தொனியில பேசியிருக்கேன் அவ்வளவுதானே ஒழிய மனுசனை மட்டம் தட்டலைங்க!
//பூனை இருட்டுளையும் பாக்கும் என்று சொல்றீங்க, 100 % இருட்டுல [Absolute darkness] யாராலையும் பாக்க முடியாது, பூனை மிகக் குறைந்த வெளிச்சத்துலயும் பாக்கும் அவ்வளவுதான். //
உண்மைதான். கும்மிருட்டுல பூனையாலும் பார்க்க முடியாது, குறைவான வெளிச்சத்துலதான் பார்க்க முடியும். இதை தவறா எழுதிட்டேன். மாத்திடுறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
// “ஏலியன்” என்று சொல்லியிருக்கிறீர்கள், [வேற்றுக் கிரக மக்கள் என்று நான் நினைக்கிறேன்]. இதுவரை விஞ்ஞானப் பூர்வமாக ஏலியன்கள் இருப்பதாக நிரூபிக்கப் படவில்லை. நாவல்கள், திரைப்படம் எல்லாவற்றிலும் கற்பனை கட்டுக் கதையாகத்தான் அது உலவி வருகிறது. நீங்கள் ஒரு தகுதி படைத்த மருத்துவம் படிக்கும் மாணவராக இருந்து கொண்டு, “Alien வந்தால் தெரியுமா சேதி உன்னால ஒன்னும் பண்ண முடியாது” என்று அறிவியல் பூர்வமான ஆதாரமில்லாத செய்தி குறித்து மாந்த்ரீகம் செய்பவர் மிரட்டுவது போல மிரட்டுகிறீர்களே, நான் என்ன சொல்ல?//
ஏலியன் இருக்குங்கிறதுக்கான விஞ்ஞானப் பூர்வ ஆதாரம் இல்லைதான் ஒத்துக்கறேன். ஆனா, ஏலியன் வெறும் கட்டுக்கதைன்னெல்லாம் நீங்க சொல்ல முடியாது. உங்க கிட்ட ஆதாரம் இருக்கா?. ஏலியன் கட்டுக்கதை இல்லைங்கிறதுக்கு ஆதாரங்கள் இருக்கு. அதை நான் சொல்றது விட, உலகின் தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானி திரு.ஸ்டேஃபன் ஹாக்கிங் சொல்றாங்க, கேளுங்க…..சுட்டி கீழே
http://news.discovery.com/videos/space-qa-with-stephen-hawking.html
http://news.discovery.com/space/do-aliens-exist-will-they-kill-us.html
இது தவிர என்னோட சிற்றறிவுக்கு எட்டியவரை, நான் ஆய்வு செய்ற ஸ்டெம் செல் இருக்குதே அதையே 150 வருஷத்துக்கு முன்னாடி இருக்குறவங்களுக்கு ஒரு அனுமானமாதான் தெரியுமே தவிர, ஆதாரப்பூர்வமா தெரியாது. அப்போ ஸ்டெம் செல் தொபுகடீர்னு, கடந்த 150 வருஷத்துல குதிச்சி வந்திருக்குன்னு சொல்வீங்களா. இல்ல நம்பிக்கையுடனான விஞ்ஞானப்பூர்வ தேடல் மூலமா உண்மை தெரியவந்திருக்குன்னு சொல்வீங்களா? இதே நிலைப்பாட்டைத்தான் மூத்த விஞ்ஞானி ஸ்டீஃபனும் ஏலியன் விஷயத்துல எடுத்துருக்கார்னு நான் நெனக்கிறேன்!
ஸ்டெம் செல் மட்டுமில்ல, நான் ஆய்வு செய்கிற புற்று நோய் மர்மமும், இன்னும் எத்தனையோ மருத்துவ மர்மங்களும்கூட அப்படித்தான். உதாரணமா ஜீன்ஸையே எடுத்துக்குங்க, 1800 களின் மத்தியில திரு.க்ரீகர் ஜொஹான் மென்டல் தேடும்போது, கண்டுபிடிச்ச பிறகும் ஜீன்களை அவருக்கு முழுசா அடையாளம் தெரியாது (he just called them”units” or “factors”). 44 வருடங்களுக்குப் பிறகும் (1900) அவரோட கண்டுபிடிப்பைத்தான் 3 விஞ்ஞானிகள் உறுதி செஞ்சாங்களே தவிர ஜீன்களை முழுமையா அடையாளம் காண முடியலை. கிட்டத்தட்ட 100 வருடங்களுக்குப்பிறகு 1956-ல வாட்சனும், க்ரிக்கும் DNA வுக்கு ஒரு அடையாளம்தான் கொடுத்திருக்காங்க. அவங்களுக்கும் ஏன் இன்னும் நமக்கேத் தெரியாத எத்தனையோ மர்மங்கள் மரபனுவுக்குள்ள இருந்துக்கிட்டுதான் இருக்கு. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.
ஆக, விஞ்ஞான ஆதாரங்கள் ஓவர் நைட்ல கெடைக்காது, யுகங்கள்கூட ஆகும்! அதனால, ஆதாரமில்லைன்னா ஒரு விஷயம் இல்லவே இல்லைங்கிற உங்க நிலைப்பாட்டுக்கு substantiation இனி நீங்கதான் கொடுக்கனும். ஏலியன் பத்தி சொன்ன என்னோட தொனி வேணுமுன்னா சின்ன புள்ளத்தனமா இருந்திருக்கலாமே தவிர, சொன்ன அர்த்தம் உறுதியான நம்பிக்கையினடிப்படையிலானது! விவாதத்துக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்!
தணிகாசலம்
ஜூலை 17, 2010
ஆறாவது அறிவுள்ள சராசரி மனிதன் செய்ய முடியாத புலனறிவு தொடர்பான விஷயங்களை பிராணிகளில் சில செய்கின்றன என்பது பற்றித்தானே இந்த பதிவு. இதில் ஒப்புமை ஏதும் சம்மந்தப்படவில்லையே. அப்படியிருக்க அறிவியல் கண்டுபிடிப்புக்கள் ஏன் இதில் தலையை நுழைக்கிறது? ஜெயதேவா ரொம்ப சென்சிடிவ்வா இருப்பார் பொலிருக்கு. ஆரோக்கியமான விவாதமா இருக்கட்டுமே!
padmahari
ஜூலை 19, 2010
கருத்துக்கு மிக்க நன்றிங்க. இப்போ சமரசம் ஆகிவிட்டது, மகிழ்ச்சி!