“பாம்பென்றால் படையும் நடுங்கும்”, அப்படின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதே பாம்பைப் பத்தி நமக்கு தெரியாத நெறைய விஷயங்கள் இருக்குங்க! உதாரணத்துக்கு,
“பாம்புக்கு காதே இல்ல, ஆனா நம்ம எல்லாரையும் விட அதிகமா சப்தங்கள உணர்ற சக்தி அதுக்கு இருக்கு!”
“பாம்புகளுக்கு மூக்கே கிடையாது, ஆனா வாசனை/ நாற்றங்கள மிகச்சரியா உணர்ற திறன் இருக்கு!”
“உலகத்துலேயே மிகக் கொடிய “பயோவெப்பன்” என்ன தெரியுமா உங்களுக்கு, பாம்புகளோட விஷப்பற்கள்தானாம்!”
மேல நீங்க படிச்சது வெறும் ட்ரெய்லர்தாங்க…..இனிமேதான் படமே! வாங்க பார்ப்போம்….
பாம்புகள் உணவே இல்லாமல் பல மாதங்கள் வாழ மட்டுமல்ல, வளரவும் செய்யுமாம்!
நீங்க கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க, பல மாசத்துக்கு சாப்பிடாமலே இருந்துக்கிட்டு, ஆனா உயரமா வளர்ந்துகிட்டு எந்தத் தொந்தரவும் இல்லாம இருந்தா….அட அட அட, அந்த சொகமே தனிதான்! ம்ம்ம்….என்னத்த சொல்ல, அந்த குடுப்பனை நமக்கு இல்ல! குடுத்துவச்சது…..பாம்பச்சொன்னேங்க!
உலகத்தின் மிகச்சிறிய பாம்பு ஒரு நாணயத்தின் அளவுதான் இருக்கும்!
உலகத்துல இருக்கிற பாம்புகள்லியே, ரொம்பச் சின்ன பாம்பை 2008-ல “பார்படோஸ்”, அப்படிங்கிற இடத்துல கண்டுபிடிச்சாங்களாம். அதோட அளவு என்ன தெரியுமா, வெறும் 10 செ.மீ தானாம்! இன்னொரு உபரித்தகவல், இந்த பாம்பை நம்மச் சென்னையிலதான் முதல்ல கண்டுபுடிச்சாங்களாம்! அது எவ்வளவு சின்னதா இருந்தா என்ன? பார்த்தா பயமாருக்கும்ல?!
நல்ல பாம்பு கண்ணத்தான் குறிவைக்குமாம்!
சில வகை நல்ல பாம்புகள “துப்பும் நாகம்” (Spitting cobras) அப்படின்னு சொல்றாங்க. இந்த வகை நல்ல பாம்புகள், விஷத்த கிட்டத்தட்ட 2 மீட்டர் தூரம் வகை துப்பக்?! கூடிய சக்தி படைச்சவையாம். அடேங்கப்பா! அதுமட்டுமில்லாம, இந்த பாம்பு கண்ணைக் குறி வச்சுத்தான் விஷத்தத் துப்புமாம். அப்படி துப்புற விஷம் நம்ம கண்ணுல பட்டா, உடனே கண் குருடாயிடும்னு 2005-ல கண்டுபிடிச்சிருக்காங்க. யப்பா சாமி !கீழே இருக்கிற காணொளியில நீங்களே பாருங்க அந்த அநியாயத்த?!
மலைப்பாம்பு தன்னோட இரை முழுசையும் (எலும்பு கூட!) தின்றுவிடுமாம்!
மலைப்பாம்புங்க மாசக்கணக்குல சாப்பிடாமலே இருக்குமாம். ஆனா அதேசமயத்துல, சாப்பிடும்போது ஒரு சின்ன துண்டு கூட விடாம, நம்ம காம்ப்ளான் பையன் மாதிரி ” அப்படியே” சாப்ட்ருமாம்! அதுக்கு காரணம் என்னன்னா, பாம்புங்களுக்கு எலும்பைக்கூட செரிக்க வைக்கிற அளவுக்கு சிறப்பான உடலமைப்பாம்! இத நான் சொல்றத விட நீங்களே பாருங்க புரியும்!
ஒரு வகை பாம்பு 50 அடி தூரம் வரை பறக்குமாம்!
நான் என்னவோ இதுவரைக்கும், பாம்பு படம் மட்டுந்தான் எடுக்கும்னு நெனச்சுகிட்டு இருந்தேன். இப்பதான் தெரியுது, “பறக்கிற பாம்புங்க” (50 அடி தூரம்) கூட உலகத்துல இருக்குதாம்! அப்போ, பாம்பைக் கண்டா படையும் நடுங்கும்னு சொன்னதிலே ஒரு அர்த்தம் இருக்குது இல்ல? அப்படி பறக்கும்போது, “S” வடிவத்துல உடல வளச்சு பறக்குமாம். அது சரி, பார்த்தா தானே எதையுமே நம்ப முடியும்?! சரி வாங்க பார்ப்போம்….
ஒரு பாம்பு அதவிட நீளமான இன்னொரு பாம்பை சாப்பிட்டுவிடுமாம்!
அது எப்படி ஒரு பாம்பு, தன்னைவிட நீளமான இன்னொரு பாம்பை விழுங்க முடியும்? அப்படின்னு கேட்குறீங்களா? எனக்கும் அதே கேள்விதாங்க! சொன்னா நீங்க நம்ப மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். வாங்க நேராவே பார்போம்…..
நம்ம ராஜ நாகம் கூட இன்னொரு பாம்ப சாப்பிடுமாம், தெரியுமா உங்களுக்கு? எனக்கு இதுவரைக்கும் தெரியாதுப்பா! வாங்க எப்படின்னு பார்த்து தெரிஞ்சிக்குவோம்….
சரிங்க, இப்போ இது எப்படி இருக்குன்னு நான் கேட்க மாட்டேன். ஏன்னா, இது எல்லாமே எனக்கு தெரியாத விஷயங்கள். அதனால, ஒரே பிரமிப்பாதான் இருக்கு எனக்கு இந்த பாம்பு கதைகள் எல்லாம்! நீங்க சொல்லுங்க, உங்களுக்கு எப்படி இருக்குன்னு….
ரோஸ்விக்
நவம்பர் 12, 2009
//உலகத்துல இருக்கிற பாம்புகள்லியே, ரொம்பச் சின்ன பாம்பை 2008-ல “பார்படோஸ்”, அப்படிங்கிற இடத்துல கண்டுபிடிச்சாங்களாம். அதோட அளவு என்ன தெரியுமா, வெறும் 10 செ.மீ தானாம்! இன்னொரு உபரித்தகவல், இந்த பாம்பை நம்மச் சென்னையிலதான் முதல்ல கண்டுபுடிச்சாங்களாம்! அது எவ்வளவு சின்னதா இருந்தா என்ன? பார்த்தா பயமாருக்கும்ல?!//
இந்த வகை பாம்பை நான் 1985-லே பார்த்து இருக்கேன். இதுக்கு எங்க ஊர்ல செவிப்பாம்புன்னு சொல்லுவாங்க…தூங்கும்போத் காதுக்குள்ள போயிடும், அப்பறம் காத்து கேக்காதுனு சொல்லுவாங்க.
இவனுங்க 2008-ல கண்டுபிடிச்சாங்களா? இதானா சார் உங்க டக்-கு?
padmahari
நவம்பர் 12, 2009
வாங்க ரோஸ்விக். நான் இதை எதிர்ப்பார்த்துத்தான் அந்த பாம்பைப் பத்தி எழுதாம விட்டேன். உங்க ஊர்ல இந்த பாம்பை செவிப்பாம்புன்னு சொல்றாங்கன்னு இப்ப தெரிஞ்சிக்கிட்டேன்.எங்க ஊர்ல அதே பாம்பை சீயான் பாம்புன்னு சொல்லுவாங்க (ஏன்னு எனக்கு தெரியாதுப்பா!). நானும் என் சின்ன வயசுல இருந்தே அந்த பாம்பப் பார்த்திருக்கேன்!
மீண்டும் சந்திப்போம்! நன்றி.
johan paris
நவம்பர் 12, 2009
இலங்கையில் என் இளமைக்காலங்களில் குறிப்பாக மாரிகாலத்தில் இந்த மிகச் சிறியபாம்பை பார்த்துள்ளேன். இதை மண்ணுளிப் பாம்பு என அழைப்போம்.
padmahari
நவம்பர் 12, 2009
ஆக, பல ஊர்களில் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது அந்த சிறிய பாம்பு. சுவாரசியமான தகவல் ஜான்.
முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி ஜான். தொடர்ந்து மேலிருப்பானுடன் இணைந்திருங்கள். மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவுடன் சந்திப்போம்! நன்றி.
buruhani
நவம்பர் 12, 2009
நான் இந்த குட்டிப்பாம்பை 40 வருடங்களுக்கு முன்பே குடவாசலில் பார்த்து இருக்கேன்
padmahari
நவம்பர் 12, 2009
முதல் வருகைக்கும், தகவலுக்கும் மிக்க நன்றி புருஹனி. உங்கள் ஆதரவு தொடரட்டும்! நன்றி.
tamizhanban
நவம்பர் 12, 2009
பயனுள்ள கட்டுரை ! ரசித்து படித்தேன்!
padmahari
நவம்பர் 12, 2009
முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி தமிழன்பன்!
மேலிருப்பானுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். மற்றுமொரு சுவாரசியமான பதிவில் சந்திப்போம்.
kapilashiwaa
நவம்பர் 14, 2009
நான் பாம்பு வரும் எந்த படத்தையும் பார்க்க விரும்புவதில்லை. ஆனாலும் இந்த பதிவை படித்த போது
துப்பும் நாகம் காணொளி பார்க்க தோண்றியது. பார்த்தேன். யப்பா! கொடுமைகார மனிதர்கள் அத்தனை பேரும் இதனிடம் பிச்சை வாங்க வேண்டும். என்ன ஒரு சீற்றம்..
நல்ல பதிவுதான். கொஞ்சம் அச்சம் ஊட்டும் பதிவு கூட.
padmahari
நவம்பர் 14, 2009
வாங்க ப்ரேமலதா,
அவ்ளோ பயமா உங்களுக்கு? உண்மையாகவே துப்பும் நாகம் கொஞ்சம் பயங்கரமாதாங்க இருக்கு. உங்க வலைப்பக்கம் எப்படி போகுது?
வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம்.
இலங்கேஸ்வரன்
பிப்ரவரி 27, 2010
பாம்புகளில் இத்தனை வகையா. தெரியா பல விடயங்கள்… எங்கள் வவுனியாவில் அந்தப்பறக்கும் வகைப்பாம்புகள் உள்ளதா சிலர் கூறக் கேட்டுள்ளேன். பறக்கும் நாகங்கள் உள்ளன என்று சொல்வார்கள்
padmahari
பிப்ரவரி 27, 2010
வாங்க இலங்கேஸ்வரன்,
கேட்க ஆச்சரியமா இருக்கு! இந்த பதிவுல நான் சொல்லியிருக்கிறது பாம்பு உலகின் ஒரு சிறு பகுதிதாங்க. இன்னும் எவ்வளவோ இருக்கு பாம்புகள் பத்தின விஷயங்கள்!
என் அடுத்த பதிவும் பாம்புகளைப் பற்றியதுதான். முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து இணைந்திருங்கள், மீண்டும் சந்திப்போம்!
தணிகாசலம்
ஏப்ரல் 26, 2010
சில தகவல்கள் தெரிந்தவைதான். இந்த பறக்கும் பாம்பு, உண்ணாமலேயே வளர்வது விநோதமான புதிய தகவல்கள்தான். ஆனா அந்த காணொளிகளை என்னுடைய கணினியில் பார்க்க முடியவில்லையே! அதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்.
padmahari
ஏப்ரல் 27, 2010
//ஆனா அந்த காணொளிகளை என்னுடைய கணினியில் பார்க்க முடியவில்லையே! அதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்.//
அனேகமாக உங்க கணினியில ஏதோ பிரச்சினைன்னு நெனக்கிறேன். அதுமட்டுமில்லாம நான் முன்னாடி சொன்ன மாதிரி நீங்க முயற்ச்சி செஞ்சீங்களான்னு தெரியலையே?!
Murugesan.K
மே 7, 2011
nama snake varatha unaramuduma ella nama adhuva maramuduma ella namanenacha athoda sakthiya nama vankamuduma pls solla muduma ..
padmahari
மே 20, 2011
என் சிற்றறிவுக்கு அப்பாற்பட்ட கேள்விகளா இருக்கு உங்க கேள்விகள். விடை தெரிஞ்சவுடனே பகிர்ந்துக்கிறேங்க….. நன்றி.
soundhar
நவம்பர் 18, 2011
தகவல்கள் மிக அருமை
jegathish
நவம்பர் 20, 2011
பயனுள்ள கட்டுரை ! ரசித்து படித்தேன்!