இன்று ஒரு தகவல் (இ.ஒ.த-1):
சமீபத்திய ஒரு ஆய்வு முடிவின்படி, வேகமாக சாப்பிடும் பழக்கத்தால் அதிகமான உணவை உண்ணும் பாதிப்பு?! இருக்கிறது அப்படின்னு சொல்றாங்க!
அது எப்படி?
அதாவது, பொதுவாக உணவு சாப்பிடும் போது சில பேர் மெதுவா, கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுவாங்க. ஆனா சில பேர், ரொம்ப வேகமா சாப்பிட்டு முடிச்சிருவாங்க!
இது பத்தி மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வுல, வேகமா சாப்பிடறதுனால, திருப்தியா சாப்பிட்டுட்டோம் அப்படிங்கிற உணர்வ ஏற்படுத்துற ஹார்மோன் சுரக்கிறது தடைபடுதாம். அதனால, இன்னும் சாப்பிடனும் அப்படிங்கிற ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, நிறைய சாப்பிடுறோம் அப்படின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்!
ஆனா, இதுவே பொருமையா சாப்பிட்டீங்கன்னா, அந்த ஹார்மோன் சரியான அளவுல சுரந்து, மூளைக்கு ஒரு செய்தி அனுப்பி, “ம்ம்ம்…. நல்லா சாப்பிட்டாச்சு” அப்படிங்கிற ஒரு உணர்வ ஏற்படுத்திடுது. அதனால, நாம அதிகமா சாப்பிடறது இல்ல, தொப்பையும் விழறது இல்ல அப்படிங்கிறாங்க!
இந்த ஆய்வு முடிவுகளைப் பத்தி மேல படிக்கனும்னா இங்க போங்க
விஷ்ணு
நவம்பர் 8, 2009
இனிமே மெதுவா தான் சாப்பிடனும் போலிருக்கே.
padmahari
நவம்பர் 8, 2009
வாங்க விஷ்ணு,
அப்படித்தான் நானும் நெனக்கிறேன்.ஏன்னா, இது ஒரு ஆய்வறிக்கை முடுவுங்கறதால இது உண்மையா இருக்கும்னு நம்பலாம்.
மேலும் பல பயனுள்ள தகவல்களை வாசிக்க தொடர்ந்து மேலிருப்பானுடன் இணைந்திருங்கள். நன்றி.
shiva
நவம்பர் 8, 2009
எனக்கும் தொப்பை விழுகுது , நான் சாப்பிடறது கொஞ்சம் தான், ஆனால் வேகம் அதிகம் …
இப்ப தான் எனக்கு காரணம் புரிகிறது .
நன்றி
padmahari
நவம்பர் 8, 2009
வாங்க ஷிவா. உங்க மூலமா இந்த ஆய்வு முடிவுல போதிய அளவுக்கு உண்மை இருக்குன்னு உணர முடியுது.
வாழ்க்கை முறையில மாற்றத்த ஏற்படுத்தி நலமான, வளமான வாழ்க்கை வாழ என் மனமார்ந்த வாழ்துக்கள்.
முதல் வருகைக்கும், மிகவும் வெளிப்படையான மறுமொழிக்கும் மிக்க நன்றி ஷிவா. மேலிருப்பானோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள்!மீண்டும் சந்திப்போம்.
உங்கள் கண்ணன்
ஜூன் 14, 2010
உண்மை தான்….வயிற்றுக்கு எவ்வளவு தேவை என்பதை அறியாமல் அவசரமாக் அள்ளி திணித்து கொள்கிறோம்…அந்த காலத்தில் முன்னோர்கள் சொல்வார்கள்…சாப்பிடும் பொழுது ..எப்பம்…வந்தால் போதுமட சாமி என வயிறு சொல்லும் …என்பார்கள்….
padmahari
ஜூன் 15, 2010
வாங்க கண்ணன்,
யதார்த்தமான ஒரு புரிதல் 🙂
முதல் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி. தொடர்ந்தும் இணைந்திருங்கள். அடுத்த பதிவில் சந்திக்கிறேன்!