வலைப்பூவகம் எனும்
இணையக்கலைப்பள்ளியிலே….
பகுதிநேர கல்விபயில
ஆயத்தங்கள் ஏதுமற்றவனாய்….
எந்தன் பள்ளிப்பையிலே
ஆர்வங்களை மட்டுமே
நிரப்பிக்கொண்டு…..
மெல்லத் தவழ்ந்துவந்த
என்னைத் தட்டிக்கொடுத்து
ஆதரவெனும் அன்பை
அள்ளித்தந்த இணையச்சொந்தங்களுக்கு
அன்புடன் நட்புகலந்த
தமிழ் வணக்கம்!
செந்தமிழ்ச்சாலையிலே
சிந்தனைச்சோலையிலே
சொல்லெனும்
மலர்பறித்து….
கவிதையெனும் மாலை
தொடுத்து….
வலைப்பூ வகுப்பினிலே
புத்தகமாய் உங்கள்முன்
வைத்தேன்!
செந்தமிழ் ஊற்றது
கவிதைகள்….
மருத்துவ செய்திகள் என
சிறுதுளி பெருவெள்ளமாய்
பெருகி இன்று
வலைப்பூ வாசகர்கள் எனும்
நட்புள்ளங்களோடு
இணையச்சாலையிலே
தமிழ்நடை பயிலுகின்றேன்!
கடந்து வந்த
பாதையிலே….
கற்றது கைம்மண்ணளவே!
பெற்றது சில அனுபவங்கள்
உற்றது பல மன நிறைவுகள்
ஏற்றது பல அறிவுரைகள்
தொட்டது சில உயரங்கள்!
இவையனைத்தும்
சாதனையில்லையெனும் போதும்
சாத்தியமில்லை
உங்கள் ஆதரவின்றி!!
பெற்ற வெற்றிகளை
உற்ற மனநிறைவோடு
உரித்தாக்குகிறேன்
உலக வலைப்பூ வாசகர்களுக்கு
எந்தன் கோடானு கோடி
நன்றிகளோடு!!
என்றென்றும்….
உங்கள் ஆதரவெனும்
மழையிலே
நனைந்திட ஆசை!!
நட்புகலந்த பணிவன்புடன்
நன்றிகள் பல!
– நட்புடன் பத்மஹரி.
Karthikeyan
செப்ரெம்பர் 25, 2009
வாழ்த்துக்கள் பத்மஹரி!
padmahari
செப்ரெம்பர் 25, 2009
கார்த்திகேயனுக்கு நன்றிகள் பல! உங்களைப் போன்ற அன்பான வாசகர்கள் இருப்பதாலேயே இது சாத்தியம்! உங்களுக்கு தெரியுமா…என் வலைப்பூவின் நூறாவது மறுமொழி உங்களுடையதே! தமிழை இணையத்தில் கண்டு அதை பலரும் மேலும் மேலும் ரசிக்க வைக்கவே நான் இந்த வலைப்பூவகத்திற்க்கு வந்தேன்! உங்கள் ஆதரவுக்கு நன்றி தோழரே.மீண்டும் வருக!
Karthikeyan
செப்ரெம்பர் 25, 2009
நன்றி பத்மஹரி
இதற்காக நான் உண்மையிலேயே மகிழ்ச்சி கொள்கிறேன்.
என்னிடைய ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் நீங்கள் நன்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை பத்மஹரி.என்னை ஈர்க்கும்,பாதிக்கும் பதிவுகளை பற்றி பின்னூட்டம் எழுதுகிறேன் அவ்வளவுதான்.
எனககு, ஒத்த சிந்தனை உள்ளவர்களை அருகில் கண்டு உணர்வதற்கு சாத்தியம் குறைவாகவே உள்ளது.ஆனால் இந்த மாதிரி வலைபூக்களை படிக்கும் போதுதான் என்னுடைய தனிமை உண்ர்வு குறைவதாக கருதுகிறேன்.அதற்காகவும் நன்றி!
padmahari
செப்ரெம்பர் 25, 2009
பெருந்தன்மை உங்களுக்கு அதிகம் கார்த்திகேயன்.சரி, நீங்கள் இனி எனக்கு ஒரு நல்ல நண்பர்.ஆதலால் இனி உங்களின் ஒவ்வொறு பின்னூட்டத்திற்க்கும் நன்றி சொல்லவில்லை.அதே போல உங்கள் கருத்துகளை பாரபட்சமின்றி பதிவு செய்யுங்கள்.தவறிருப்பின் திருத்திக் கொள்கிறேன்.மீண்டும் வாருங்கள்!
Karthikeyan
செப்ரெம்பர் 25, 2009
நண்பர் பத்மஹரிக்கு,
உங்கள் கருத்துக்களில் முரண்பட்டால் நிச்சயம் தெரிவிக்கிறேன்.
padmahari
செப்ரெம்பர் 25, 2009
கண்டிப்பாக கார்த்திகேயன்! அதைத்தான் நானும் உங்களிடம் எதிர்ப்பார்க்கிறேன்.மீண்டும் சந்திப்போம்.