தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாவும் இருக்கு. அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச, கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா? அப்படி எனக்கு தெரிஞ்ச ஒரு யுக்தி என்னன்னா, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை… [Read more…]
நியாபகம் வருதே….. நியாபகம் வருதே….. நியாபகம் வருதே…..! பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் நியாபகம் வருதே…..!! அப்படீன்னு தொடங்குற சேரனின் ஆட்டோகிராப் படப் பாடல முனு முனுக்குறது நம்ம எல்லாருக்குமே பிடிக்கும்! இதுல ஆண்-பெண், பெரியவர்-சிறியவர் அப்படீங்கிற பாரபட்சமெல்லாம் கிடையாதுன்னு நெனக்கிறேன். ஆனா, நம்மளோட பழைய நினைவுகளை எல்லாம் நல்லா நியாபகம் வச்சிருந்தாதானே, அந்த நினைவுகளோட நியாபகம் வந்து இந்த மாதிரி நியாபகம் வருதே அப்படீன்னு பாட முடியும்?! ஆமா, அதுக்கு என்ன இப்போ? அப்படீன்னுதானே… [Read more…]
பழமொழி அப்படீங்கிறது, நம்ம முன்னோர்கள் சொல்லி, அது வழிவழியாக பேச்சுவழக்கில் பயன்படுத்தப்பட்டு, (பொருள் தெரியுதோ/புரியுதோ இல்லியோ) நாமளும் வாய்ப்பு கிடைக்கும்போது, குறிப்பிட்ட ஒரு சூழ்நிலைக்கு ஒரு பழமொழி பொருத்தமாயிருக்கும்னு நம்ம்ம்ப்பி அப்பப்போ, அங்கங்கே சொல்றோம் இல்லீங்களா? உதாரணமா சொல்லனும்னா, “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” “குரைக்கிற நாய் கடிக்காது” “பாம்பின் கால் பாம்பறியும்” இப்படி நம்மூர்ல நெறைய பழமொழி இருக்குது (எனக்கு இப்பொ நியாபகம் வந்தது இவ்ளோதான்…..ஹி ஹி). ஆனா இம்மாதிரியான… [Read more…]
என்னங்க அப்படிப் பார்க்குறீங்க?! ஐயய்ய, நீங்க நினைக்கிற மாதிரி (?) பதிவு சுவாரசியத்துக்காகவோ அல்லது கற்பனையாகவோ எழுதின தலைப்பு இல்லீங்க இது! இதுதான் யதார்த்தம். “புற்றுநோய்” அப்படீங்கிற வார்த்தையை காதில் வாங்கினாக்கூட நாம வாழுற இந்த சமூகம் நம்மை இப்படித்தான் எதிர்கொள்ளும்! புற்றுநோய் குறித்த அறியாமையும், அவலநிலையும்! புற்றுநோய் என்றால் என்ன? அப்படீங்கிற கேள்வியில ஆரம்பிச்சி, அது ஏன் உருவாகிறது, அதற்கான காரணங்கள் என்ன, உடல் ஆரோக்கியத்துக்கும் உயிர் வாழ்வதற்கும் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன இப்படி… [Read more…]
நம்ம எல்லாருக்குமே நல்லா தெரியும் “சுத்தம் சோறு போடும்” அப்படீன்னு! ஆனா, அந்த சுத்தத்துக்கு முதல் எதிரி கிருமிகள். கிருமிகள்னா கண்ணுக்கு தெரியுற கிருமிகள் மட்டுமில்ல, கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களான புழுக்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ் இதெல்லாம் சேர்த்துத்தான். நமக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும், நம்ம உடலோட ஒட்டி உறவாடுற நுண்கிருமிகள்ல முதன்மையானது பாக்டீரியாக்கள்தான். ஏன்னா, நம்ம உடலின் தொடக்கமான தலைகள்ல ஆரம்பிச்சு கால்கள் வரைக்கும் மிகவும் அதிகப்படியான எண்ணிக்கையில், 24 மணி நேரமும் நமக்கு தெரியாமலேயே நம்முடலுடன்… [Read more…]
ஜூன் 29, 2011
12